ரஷ்யாவிடம் இருந்து இனி இந்தியா கச்சா எண்ணெய் வாங்காது.. உறுதி கொடுத்த மோடி.. டிரம்ப் சொன்ன மேட்டர்!
வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து இனி கச்சா எண்ணெய் வாங்க மாட்டோம் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். மாஸ்கோவை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்தும் முயற்சிகளில் இது ஒரு பெரிய அடி என்று கூறிய அவர், இந்தியாவைத் தொடர்ந்து சீனாவையும் இதையே செய்ய வைக்கப் போகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டு ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் தொடங்கியது. இதன் காரணமாக ரஷ்யாவிடம் இருந்து ஐரோப்பிய நாடுகள் பலவும் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்தின. இதனால் ரஷ்யா சலுகை விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய முன் வந்தது. இதனைத் தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை அதிகரித்தது.

இதனால் இந்தியா - ரஷ்யா இடையிலான உறவு வலுப்பெற்றது. ஆனால் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை அமெரிக்கா விரும்பவில்லை. இதனால் டென்ஷனான டிரம்ப், கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா அளிக்கும் நிதியை உக்ரைன் போரில் ரஷ்யா பயன்படுத்துகிறது என்று கூறி, இந்தியா மீது 25 சதவிகிதம் கூடுதலாக வரியை விதித்தார் டிரம்ப்.
இதனால் இந்திய பொருட்களுக்கான வரியை அமெரிக்கா 50 சதவிகிதமாக உயர்த்தியது. இந்த நிலையில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா படிப்படியாக குறைத்து வருவது தெரிய வந்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் ரூ.25,600 கோடி மதிப்பில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்கி இருக்கிறது. ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது இது சுமார் 14 சதவிகிதம் வரை குறைவாகும்.
இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுகையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா கொள்முதல் செய்வதில் எனக்கு விருப்பவில்லை. இப்படியான சூழலில் ரஷ்யாவிடம் இருந்து இனி கச்சா எண்ணெய் வாங்க மாட்டோம் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.
ரஷ்யாவை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்தும் முயற்சிகளில் இது ஒரு பெரிய அடி என்று கூறிய டிரம்ப், இந்தியாவைத் தொடர்ந்து சீனாவையும் இதையே செய்ய வைக்கப் போகிறேன். அதேபோல் கச்சா எண்ணெய் கொள்முதலை உடனடியாக இந்தியாவால் நிறுத்த முடியாது என்று கூறியதோடு, படிப்படியாக விரைவில் நிறுத்திவிடும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
-
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications