அமெரிக்கா வந்தார் பிரதமர் மோடி.. இன்று துணை அதிபர் கமலா ஹாரிசை சந்தித்து பேச்சு
வாஷிங்டன் : நேற்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாலை வாஷிங்டன் வந்தடைந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய நேரப்படி இன்று இரவு பிரதமர் மோடி, அமெரிகக துணை அதிபர் கமலா ஹாரிசை சந்தித்து பேசுகிறார்.
Recommended Video
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபை கூட்டம் கடந்த 14ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 25ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள் நேரில் கலந்து கொள்கிறார்கள்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா, பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனரோ, இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட், பாலஸ்தீன அதிபர் மகமூத் அப்பாஸ் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இந்த பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.
இதேபோல் பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்கிறார்.

ஆப்பிள் சிஇஒ
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக நேற்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அமெரிக்காவின் முக்கிய தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். அப்போது ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக்-ஐயும் அவர் சந்தித்து பேசுகிறார்.

சந்தித்து பேசுகிறார்
அத்துடன் இன்றைய தினமே இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்சை மோடி சந்தித்து பேச உள்ளார். தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ், துணை அதிபராக பதவியேற்ற பின்னர், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் இரு தலைவர்களும் நேரில் சந்தித்து பேச உள்ளது இதுவே முதல் முறையாகும்.

பங்கேற்கிறார்
நாளை வாஷிங்டனில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய 4 நாடுகளின் குவாட் அமைப்பு தலைவர்கள் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடியுடன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன், ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்,

பைடனை சந்திக்கிறார்
இதனிடையே செப். 24ஆம் தேதி, வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார். இருதரப்பு வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு உறவுகளை பலப்படுத்ததுல், பயங்கரவாத அச்சுறுத்தல், ஆப்கானிஸ்தான் நிலவரம், ஆகிய விஷயங்கள் குறித்து பேசுகிறார்கள். அத்துடன், அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளையும் பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐநா சபையில் பேசுகிறார்
24ம்தேதி அன்று வாஷிங்டன் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி, நியூயார்க் நகருக்கு செல்கிறார். 25ஆம் தேதி ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தின் 76ஆவது அமர்வில் கலந்துகொண்டு பேசுகிறார். இந்த கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட உலகத்தலைவர்கள் பங்கேற்கிறார்கள். . இந்த கூட்டத்தில் பயங்கரவாதத்தால் உலகம் எதிர்கொண்டுள்ள சவால்கள், ஆப்கானிஸ்தான் விவகாரம், ஐ.நா. சபையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள், பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் எவ்வளவு முக்கியம் என்பது குறித்தும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி பேசுவதற்கு வாய்ப்பு உள்ளது. செப்டம்பர் 26ம் தேதி இந்தியா திரும்புகிறார்.

நெகிழ்ச்சி பதிவு
இதனிடையே அமெரிக்க பயணம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெளியிட்டிருந்த பதிவில், அதிபர் பைடனின் அழைப்பை ஏற்று அமெரிக்காவுக்கு 4 நாள் அரசு முறை பயணம் செல்ல உள்ளேன். இந்த பயணத்தில், இந்தியா-அமெரிக்கா இடையேயான உலகளாவிய கூட்டுறவு குறித்து பைடனுடன் ஆலோசிக்க உள்ளேன். மேலும், பிராந்திய மற்றும் உலக விவகாரங்களில் பரஸ்பர நலன்களுக்கான எங்களின் கருத்துக்களை பரிமாறிக் கொள்ள உள்ளோம். அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உடனான சந்திப்பையும் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

குவாட் மாநாடு
இந்த சந்திப்பின் மூலம் இருதரப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், குவாட் மாநாட்டில் அதிபர் பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் யோஷின்டே சுகா ஆகியோருடன் முதல் முறையாக நேரில் ஆலோசனை நடத்த உள்ளேன். இந்த பயணம் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகளுடனான நமது உறவை மேலும் பலப்படுத்தும்" என்று கூறியிருந்தார்.
-
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications