'ஓமிக்ரான் மின்னல் வேகத்தில் பரவுகிறது, ஆனால்..' அமெரிக்காவின் டாப் ஆய்வாளர் கூறிய அதிமுக்கிய தகவல்
வாஷிங்டன்: உலகின் பல்வேறு நாடுகளுக்கும் ஓமிக்ரான் உருமாறிய வைரஸ் பரவ தொடங்கியுள்ள நிலையில், ஓமிக்ரான் கொரோனாவின் தீவிர தன்மை குறித்து அமெரிக்கா ஆய்வாளர்கள் ஆண்டனி பவுசி சில முக்கிய தரவுகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் கொரோனா பாதிப்பு பல்வேறு நாடுகளுக்கும் பரவ தொடங்கிவிட்டது. இதுவரை குறைந்தபட்சம் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவிலும் இதுவரை 21 பேருக்கு ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது, ஓமிக்ரான் குறித்த அச்சம் அதிகரித்துள்ளது. இதனால் உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

ஓமிக்ரான்
இந்த உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டு வெறும் சில நாட்களே ஆகும் நிலையில், இது என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது குறித்த தெளிவான தரவுகள் இல்லை. தென் ஆப்பிரிக்காவில் இதுவரை இந்த உருமாறிய கொரோனா லேசான பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் முன்னெச்சரிக்கையாக உலக சுகாதார அமைப்பு இந்த கொரோனாவை கவலைக்குரிய கொரோனா வகையாகப் பட்டியலிட்டுள்ளது.

மின்னல் வேகத்தில் பரவுகிறது
இந்தச் சூழலில் அமெரிக்கத் தேசிய தொற்றுநோய் தடுப்பு பிரிவின் தலைவர் ஆண்டனி பவுசி கூறுகையில், "தென் ஆப்பிரிக்காவில் கடந்த சில மாதங்களாக வைரஸ் பாதிப்பு குறைவாகவே இருந்தது. ஆனால், ஓமிக்ரான் கண்டறியப்பட்ட பின்னர் அங்கு வைரஸ் பாதிப்பு மிக வேகமாக அதிகரித்துள்ளது. இது ஓமிக்ரான் எந்தளவு வேகமாகப் பரவுகிறது என்பதைக் காட்டுகிறது. எனவே, நாம் வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்,

பொறுப்பாக இருங்கள்
அதேநேரம் தற்போது வரை நம்மிடம் உள்ள தரவுகளை வைத்துப் பார்க்கும்போது இந்த வைரஸ் தீவிர பாதிப்பை ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை. இது ஒரு நல்ல விஷயம்" என்று அவர் குறிப்பிட்டார். அதேபோல இந்த ஓமிக்ரான் உருமாறிய கொரோனா தற்போது நம்மிடம் உள்ள தடுப்பூசிகளில் இருந்து தப்பும் ஆற்றலைக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை என்றும் நாம் சற்று பொறுப்பாக இருக்கும் நேரம் இது என்றும் அவர் தெரிவித்தார்.

தீவிர தன்மை
தென் ஆப்பிரிக்காவில் இதுவரை பெரும்பாலும் இந்த வைரஸ் இளைஞர்கள் மத்தியில் தான் அதிகம் பரவியுள்ளது. எனவே, இதன் தீவிர தன்மை குறித்து துல்லியமாகக் கணக்கிட முடியவில்லை என்றும் வரும் காலத்தில் முதியவர்களுக்கும் இந்த உருமாறிய பரல் ஏற்படும் போது தான் இதன் தீவிர தன்மையைச் சரியாகக் கூற முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
Recommended Video

கொரோனா தடுப்பூசி
பைசர், மாடர்னா போன்ற வேக்சின் நிறுவனங்கள் ஓமிக்ரான் கொரோனாவுக்கு எதிராக தங்கள் தடுப்பூசியின் தடுப்பாற்றல் குறையலாம் என்றே எச்சரித்துள்ளனர். பைசர் நிறுவனம் ஏற்கனவே ஓமிக்ரானுக்கு ஏற்றபடி தங்கள் வேக்சினை மாற்றும் ஆய்வுகளைத் தொடங்கிவிட்டன. அதேபோல மற்ற நிறுவனங்களும் தேவைப்பட்டால் ஓமிக்ரானுக்கு ஏற்றபடி வேக்சின் அப்டேட் செய்யப்படும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications