ஒரு சிஇஓ என்றும் பாராமல்.. பராக் அகர்வாலை காவலர்கள் மூலம் வெளியேற்றிய மஸ்க்! அதிர வைக்கும் தகவல்
வாஷிங்டன்: ட்விட்டர் சமூக வலைத்தளத்தை எலான் மஸ்க் வாங்கியுள்ள நிலையில், அன்று தலைமை அலுவலகத்தில் நடந்த சம்பவம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இந்த டிஜிட்டல் உலகத்தில் சமூக வலைத்தளங்கள் தான் மிகவும் முக்கியமானதாக மாறி வருகிறது. பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என்று பல்வேறு சமூக வலைத்தளங்கள் உள்ளன.
இருந்த போதிலும், உலகின் அனைத்து டாப் பிரபலங்களின் தேர்வாக ட்விட்டர் தான் இருக்கிறது. 140 வார்த்தைகளில் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்பதே ட்விட்டர் ஹிட் அடிக்க முக்கிய காரணம்.

எலான் மஸ்க்
உலகெங்கும் பல கோடி பேர் ட்விட்டரை தொடர்ந்து பயன்படுத்தி வரும் போதிலும், கடந்த சில ஆண்டுகளாகவே ட்விட்டர் வருமானம் பெரியளவில் அதிகரிக்கவில்லை. மற்ற சமூக வலைத்தளங்களுடன் ஒப்பிடுகையில் ட்வட்டர் வளர்ச்சி பெரிதாக இல்லை. இந்தச் சூழலில் தான், யாருமே எதிர்பார்க்காத வகையில் ட்விட்டர் தளத்தை வாங்க உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்தார். ட்விட்டர் போர்ட் உறுப்பினர்களும் இதற்குப் பச்சைக் கொடி காட்டினர்.

வாங்கினார்
இருப்பினும், திடீரென ட்விட்டரில் போலிக் கணக்குகள் தொடர்பான தகவல்கள் துல்லியமாக இல்லை என்பதால் ட்விட்டர் தளத்தை வாங்கப் போவது இல்லை என்றார் மஸ்க். இதனால் கடும் அதிருப்தியடைந்த ட்விட்டர் போர்ட், இது தொடர்பாக வழக்கு தொடர உள்ளதாக எச்சரித்தனர். இதால் மீண்டும் தனது முடிவை மாற்றிய எலான் எஸ்க், 44 மில்லியன் டாலருக்கு ட்விட்டரை வாங்கினார்.

அதிரடி மாற்றம்
ட்விட்டர் தளத்தை வாங்கிய உடன் அவர் பல அதிரடி மாற்றங்களைக் கொண்டு வருவார் என்றே பலரும் எதிர்பார்த்தனர். எலான் மஸ்கும் தனது ட்விட்டரில், "ஒரு வழியாகப் பறவை இப்போது விடுவிக்கப்பட்டது" என்று பதிவிட்டு இருந்தார். ட்விட்டர் தளத்தில் லோகோ பறவை தான் என்பது குறிப்பிடத்தக்கது. ட்விட்டர் தளத்தில் டிரம்ப் உள்ளிட்ட பலருக்கும் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதையெல்லாம் மஸ்க் வாபஸ் பெறுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

நீக்கம்
எலான் மஸ்கிற்கும் ட்விட்டர் சிஇஓ பராக் அகர்வாலுக்கும் இடையே மோதல் இருப்பது அனைவருக்கும் தெரியும். எனவே, மஸ்க் ட்விட்டரை வாங்கிய உடன் நிச்சயம் சிஇஓ உள்ளிட்ட டாப் அதிகாரிகளை அவர் பதவியில் இருந்து நீக்குவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல எலான் மஸ்க் முதல் நாளே பராக் அகர்வாலை வேலையைவிட்டுத் தூக்கினார். அவர் மட்டுமின்றி டாப் டீமை அப்படியே ஒட்டுமொத்தமாக அவர் நீக்கினார்.

பராக் அகர்வால்
இதனிடையே அன்றைய தினம் என்ன நடந்தது என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. மஸ்க் வந்தும் பராக் அகர்வால் நீக்கப்படுவது உறுதி என அனைவருக்கும் தெரியும். பராக் அகர்வாலும் கூடத் தான் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்து இருந்தார். அதற்கேற்ப நேற்று சம்பவங்கள் நடந்தாலும் கூட மற்றொரு பகீர் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பராக் அகர்வாலை அன்றைய தினமே பாதுகாப்புப் படையினர் வெளியே அனுப்பி உள்ளனர்.

பாதுகாப்பு அதிகாரிகள்
மஸ்க் பதவியேற்ற தினம் பராக் அகர்வால் தலைமை அலுவலகத்தில் தான் இருந்து உள்ளார். அகர்வாலை வேலையைவிட்டுத் தூக்க மஸ்க் உத்தரவிட்டதும், திடீரென பராக் அகர்வால் அலுவலகத்திற்குப் பாதுகாப்பு அதிகாரிகள் வந்துள்ளனர். வேலை செய்யும் இடத்தை உடனடியாக காலி செய்யச் சொன்ன அவர்கள், ட்விட்டர் தலைமை அலுவலகத்திற்கு வெளியே வரை பராக் அகர்வாலை அழைத்து வந்துள்ளனர்.

விமர்சனம்
எந்த நிறுவனத்திற்காக இத்தனை ஆண்டுகள் உழைத்தாரோ அதே அலுவலகத்தில் இருந்து ஏதோ குற்றச்செய்தவர் போல அழைத்து வரப்பட்டு உள்ளார். அவர் மட்டுமின்றி தலைமை நிதி அதிகாரி நெட் செகல் என்பவரும் இதேபோல பாதுகாப்பு அதிகாரிகள் சூழ வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு உள்ளார். வரும் காலத்தில் ட்விட்டரில் மேலும் ஆட்குறைப்பு நடவடிக்கை இருக்கும் எனக் கூறப்படுகிறது.
-
3ம் உலகப்போர் வாசலில் நிற்கும் உலகம்? ஈரானை வீழ்த்த அணு குண்டை கையில் எடுக்கும் இஸ்ரேல், அமெரிக்கா? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
ஈரானிடம் தோல்வி அடைந்த அமெரிக்கா? ஹார்முஸில் இருந்து 'டாடா' காட்டும் ட்ரம்ப்.. எல்லாம் முடிந்தது? -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு!












Click it and Unblock the Notifications