மதுரை ஸ்பெஷல் மட்டன் கோலா உருண்டை! எண்ணெயில் கரையாமல் மொறுமொறுப்பாக செய்வது எப்படி?

Subscribe to Oneindia Tamil

Mutton Kola Urundai Recipe In Tamil: ஹோட்டலில் சாப்பிடுவது போல மட்டன் கோலா உருண்டை வீட்டிலேயே மொறுமொறுப்பாக வரவில்லையா? எண்ணெயில் போட்டவுடன் உருண்டைகள் பிரிந்து விடுகிறதா? மட்டன் வாசனை வராமல், உள்ளே மென்மையாகவும் வெளியே மொறுமொறுப்பாகவும் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கிறீர்களா? கவலை வேண்டாம், மதுரையின் பாரம்பரிய சுவை மாறாமல், மிக எளிமையான முறையில் இந்த மட்டன் கொலை உருண்டையை எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் விரிவாகப் பார்க்கப் போகிறோம்.

மட்டனில் மட்டுமல்ல வாழைக்காயில் கூட சைவ கோலா உருண்டை செய்கிறார்கள். சோயா சங்க்ஸ் எனப்படும் மீல் மேக்கர் கொண்டு செய்கிறார்கள். அதையும் கூட இதே ஸ்டைலில் செய்யலாம். இதில் சேர்க்கப்படும் பொட்டுக்கடலை மாவு மற்றும் மசாலாக்கள் மட்டனின் ஈரப்பதத்தை உறிஞ்சி, உருண்டை உடையாமல் இருக்க உதவுகிறது.

கோலா உருண்டை இல்லாத அசைவ உணவா, விருந்தா? இனி கவலையே இல்லாமல் செய்து அசத்தலாம். சரியான பதத்தில் மாவைப் பிசைந்தால் மட்டுமே எண்ணெய் குடிக்காமல் மொறுமொறுப்பாக கிடைக்கும்.

Madurai Mutton Kola Urundai Recipe

வாருங்கள், சுவையான மதுரை மட்டன் கோலா உருண்டை செய்முறைக்குள் செல்வோம். இந்த குறிப்புகளைப் பின்பற்றினால் இனி உங்கள் வீட்டில் செய்யும் கொலை உருண்டை ஹோட்டல் சுவையை மிஞ்சும் என்பதில் சந்தேகமே இல்லை.

தேவையான பொருட்கள்

  • மட்டன் கைமா (கொத்துக்கறி) - 250 கிராம்
  • சின்ன வெங்காயம் - 15 (பொடியாக நறுக்கியது)
  • இஞ்சி பூண்டு விழுது - 1 பெரிய ஸ்பூன்
  • பச்சை மிளகாய் - 2
  • மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
  • மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
  • பொட்டுக்கடலை மாவு - 3 முதல் 4 ஸ்பூன்

அரைப்பதற்கு...

  • தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்
  • சோம்பு - 1 ஸ்பூன்
  • கசகசா - 1/2 ஸ்பூன்
  • பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2
  • மிளகு - 1/2 ஸ்பூன்

செய்முறை விளக்கம்

  • முதலில் மட்டன் கைமாவை நன்றாகக் கழுவி, அதில் உள்ள தண்ணீரைச் சொட்டு கூட இல்லாமல் பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பின் ஒரு மிக்ஸி ஜாரில் 'அரைப்பதற்கு' கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • அடுத்து அதே ஜாரில் கழுவி வைத்துள்ள மட்டன், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது மற்றும் மசாலா தூள்களைச் சேர்த்து ஒரு சுற்று மட்டும் ஓட விடவும்.
  • பிறகு இந்த கலவையை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி, அதில் பொட்டுக்கடலை மாவு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகப் பிசைய வேண்டும்.
  • அடுத்து பிசைந்த மாவைச் சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாகப் பிடித்து ஒரு தட்டில் அடுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு வாணலியில் பொரிக்கத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் (Medium Flame) சூடுபடுத்தவும்.
  • இறுதியாக எண்ணெய் காய்ந்ததும் உருண்டைகளை மெதுவாகப் போட்டு, பொன்னிறமாக மாறும் வரை திருப்பி விட்டுப் பொரித்து எடுக்கவும்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+