திருநெல்வேலியில் ஒரே அதிசயம்.. நெல்லை ஆற்றில் கெத்தாக நிற்கும் குறுக்குத்துறை முருகன்! செம ஆச்சரியம்
திருநெல்வேலி: முருகன் கோயில் என்றாலே மலைகளுக்கு நடுவேதான் அமைந்திருக்கும்.. ஆனால், தண்ணீரில் அமைந்த கோயில் பற்றி தெரியுமா? அதுவும் வருஷத்துக்கு ஒருமுறை தண்ணீரில் மறைந்து தோன்றும் அதிசய முருகன் கோயில் பற்றி தெரியுமா?
திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றுக்கு நடுவே அமைந்துள்ளது இந்த முருகன் கோயில்.. 300 வருடம் பழமையும், பெருமையும் கொண்டது.. குறுக்கு துறை என்ற பகுதியில் அமைக்கப்பட்டதால், இந்த கோயில் குறுக்குத்துறை முருகன் கோயில் என்றே அழைக்கப்படுகிறது.

சேதம்: கோயிலின் ஸ்தூபி கல்லால் ஆனது என்பதால் சேதம் என்பதே கிடையாது.. முழுக்க முழுக்க பாறைகளை செதுக்கி கட்டப்பட்ட கோயிலாகும்.. இந்த பாறைகள் தெய்வங்களின் உருவங்களை செதுக்குவதற்கு ஏற்றதாகவே இருந்ததாம்.. அதனால், சிற்பிகள் இந்த பாறைகளுக்கு உருவங்களை தந்தார்களாம்.. அதுமட்டுமல்ல, இந்த பாறையிலிருந்துதான் திருச்செந்தூரில் இருக்கும் முருகன் சிலையும் வடிக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, ஆற்றில் கோயில் அமைந்துள்ளதற்கு காரணம், இந்த கோயிலின் முருகன் இங்கு சுயம்புவாக தோன்றியதால்தான், அந்த இடத்திலேயே கோயில் கட்டப்பட்டுள்ளது..
ஆற்றின் கோயில்: அதனால், ஆற்றில் வெள்ளம்வரும்போதெல்லாம் இந்த கோயிலுக்கு மட்டும் எந்தவிதமான சேதமும் ஏறபடுவது கிடைதாது. அந்த அளவுக்கு அந்த காலத்திலேயே சரியான திட்டமிடலுடன் கட்டியிருக்கிறார்கள். குறிப்பாக, கோயிலின் முன்பகுதியில், கூர்மையான முனையில் வடிவமைத்திருப்பால், வெள்ளம் வந்தாலும், இந்த முனையை தாண்டி தண்ணீர் சிதறி ஓடிவிடும்.

அதேசமயம், 40,000 கன அடி தண்ணீர் வெள்ளம் வந்தாலும், உற்சவர் சிலை, சப்பரங்கள், உண்டியல் போன்றவை மட்டும் கரையிலிருக்கும் மேல்கோயிலில் கொண்டுவந்து வைக்கப்பட்டுவிடும்.. வெள்ளம் வடிந்தபிறகு கோயிலை சுத்தம் செய்து, மறுபடியும் உற்சவர் சிலையை கொண்டு வந்து வைப்பார்கள்.
வெள்ளம்: இந்த கோவிலில் இங்கு வைகாசி விசாகம் திருவிழாவும், சித்திரை திருவிழாவும் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடத்தப்படுகிறது.. நம் மனதில் என்ன நினைத்தாலும், இந்த முருகனிடம் பக்தியோடு உருகிவேண்டும்போது அத்தனையும் நடக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications