Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருநெல்வேலியில் ஒரே அதிசயம்.. நெல்லை ஆற்றில் கெத்தாக நிற்கும் குறுக்குத்துறை முருகன்! செம ஆச்சரியம்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: முருகன் கோயில் என்றாலே மலைகளுக்கு நடுவேதான் அமைந்திருக்கும்.. ஆனால், தண்ணீரில் அமைந்த கோயில் பற்றி தெரியுமா? அதுவும் வருஷத்துக்கு ஒருமுறை தண்ணீரில் மறைந்து தோன்றும் அதிசய முருகன் கோயில் பற்றி தெரியுமா?

திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றுக்கு நடுவே அமைந்துள்ளது இந்த முருகன் கோயில்.. 300 வருடம் பழமையும், பெருமையும் கொண்டது.. குறுக்கு துறை என்ற பகுதியில் அமைக்கப்பட்டதால், இந்த கோயில் குறுக்குத்துறை முருகன் கோயில் என்றே அழைக்கப்படுகிறது.

Tirunelveli Murugan Temple Murugan Spirituality

சேதம்: கோயிலின் ஸ்தூபி கல்லால் ஆனது என்பதால் சேதம் என்பதே கிடையாது.. முழுக்க முழுக்க பாறைகளை செதுக்கி கட்டப்பட்ட கோயிலாகும்.. இந்த பாறைகள் தெய்வங்களின் உருவங்களை செதுக்குவதற்கு ஏற்றதாகவே இருந்ததாம்.. அதனால், சிற்பிகள் இந்த பாறைகளுக்கு உருவங்களை தந்தார்களாம்.. அதுமட்டுமல்ல, இந்த பாறையிலிருந்துதான் திருச்செந்தூரில் இருக்கும் முருகன் சிலையும் வடிக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.

Tirunelveli Murugan Temple Murugan Spirituality

அதுமட்டுமல்ல, ஆற்றில் கோயில் அமைந்துள்ளதற்கு காரணம், இந்த கோயிலின் முருகன் இங்கு சுயம்புவாக தோன்றியதால்தான், அந்த இடத்திலேயே கோயில் கட்டப்பட்டுள்ளது..

ஆற்றின் கோயில்: அதனால், ஆற்றில் வெள்ளம்வரும்போதெல்லாம் இந்த கோயிலுக்கு மட்டும் எந்தவிதமான சேதமும் ஏறபடுவது கிடைதாது. அந்த அளவுக்கு அந்த காலத்திலேயே சரியான திட்டமிடலுடன் கட்டியிருக்கிறார்கள். குறிப்பாக, கோயிலின் முன்பகுதியில், கூர்மையான முனையில் வடிவமைத்திருப்பால், வெள்ளம் வந்தாலும், இந்த முனையை தாண்டி தண்ணீர் சிதறி ஓடிவிடும்.

Tirunelveli Murugan Temple Murugan Spirituality

அதேசமயம், 40,000 கன அடி தண்ணீர் வெள்ளம் வந்தாலும், உற்சவர் சிலை, சப்பரங்கள், உண்டியல் போன்றவை மட்டும் கரையிலிருக்கும் மேல்கோயிலில் கொண்டுவந்து வைக்கப்பட்டுவிடும்.. வெள்ளம் வடிந்தபிறகு கோயிலை சுத்தம் செய்து, மறுபடியும் உற்சவர் சிலையை கொண்டு வந்து வைப்பார்கள்.

வெள்ளம்: இந்த கோவிலில் இங்கு வைகாசி விசாகம் திருவிழாவும், சித்திரை திருவிழாவும் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடத்தப்படுகிறது.. நம் மனதில் என்ன நினைத்தாலும், இந்த முருகனிடம் பக்தியோடு உருகிவேண்டும்போது அத்தனையும் நடக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+