இன்று மகாளய அமாவாசை 2024: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க உகந்த நேரம் எது?
சென்னை: மகாளய அமாவாசை நாளான இன்று திதி கொடுக்க உகந்த நேரம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம். மேலும் மகாளய அமாவாசையின் பலன்களையும் பார்க்கலாம்.
மாதாமாதம் அமாவாசை வந்தாலும் குறிப்பிட்ட மாதங்களில் வரும் அமாவாசைக்கு விசேஷம் அதிகம். அந்த வகையில் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை ஆகிய அமாவாசைகள் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மாதந்தோறும் அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசையின் போது தர்ப்பணம் செய்தால் நல்ல பலனை கொடுக்கும். இந்த நாளில் திதி, தர்ப்பணம் கொடுத்தால் ஆண்டுதோறும் திதி கொடுக்காததற்கு சேர்த்து பலன் கொடுக்கும் என்பது முன்னோர்களின் நம்பிக்கை.
அப்படி சிறப்பு வாய்ந்த மகாளய அமாவாசை இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க வேண்டும். எள்ளும் தண்ணீரும் பித்ருக்களுக்கு இரைக்க வேண்டும். இது எளிமையான தர்ப்பணம் ஆகும். மேலும் அவரவர் குடும்ப வழக்கபடி மகாளய அமாவாசையை செய்துக் கொள்ளலாம்.
மகாளய அமாவாசை நாட்களில் ராகு காலம், எமகண்டத்தை தவிர காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை தர்ப்பணம் கொடுக்கலாம். முன்னோர்களுக்கு வீடுகள், ஞானவாபி, மடம் போன்றவைகளை காட்டிலும் நீர் நிலைகளில் கொடுப்பது சிறப்பானது.
தர்ப்பணம் கொடுக்க முடியவில்லை என்றால் அன்னதானம் செய்யலாம். இவ்வாறு தர்ப்பணம் கொடுப்பதன் மூலம் பித்ருக்களின் தோஷம் நீங்கி, குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இவ்வாறு மகாளய அமாவாசை காலத்தில் கொடுக்கப்படும் தர்ப்பணம் அடுத்த தலைமுறையினருக்கும் ஆசிர்வாதம் கிடைக்கும்.
ராமேஸ்வரம், காவிரி படிகை, ஸ்ரீரங்கம் காவிரி உள்ளிட்ட இடங்களில் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த மகாளய அமாவாசையில் முன்னோர்களை நினைத்து அன்னதானம் வழங்கினால் அவர்கள் நினைத்த அனைத்தும் நிறைவேறும் என்கிறார்கள்.
செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 17 வரை மகாளய பட்ச காலம் என அழைக்கப்படுகிறது. இந்த காலத்தில் முன்னோர்களை நம் வீடுகளுக்கு எமதர்மன் அனுப்பிவைப்பதாக ஒரு ஐதீகம். இந்த காலகட்டத்தில் நாம் நல்லதையே நினைக்க வேண்டும். நல்லதையே பேச வேண்டும். வீட்டில் சண்டை சச்சரவுகள் போடக் கூடாது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications