Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தைப்பூசம்..கதிர் அறுக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர்.. ரங்கநாதரிடம் சீர் பெறும் சமயபுரம் மாரியம்மன்

தைப்பூச தெப்பத்திருவிழா மதுரை மீனாட்சி அம்மன், சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. தைப்பூச நாளில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் தனது தங்கையான சமயபுரம் மாரியம்மனுக்கு சீர் கொடுக்கும் நிகழ்வும் நடைபெறுகிறது.

Subscribe to Oneindia Tamil

மதுரை: தை மாதத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் நெல் அறுவடை செய்வதை காண கண்கோடி வேண்டும். தண்ணீர் நிரம்பி கடல் போல காட்சியளிக்கும் வண்டியூர் தெப்பக்குளத்தில் பிப்ரவரி 5ஆம் தேதி தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. பிப்ரவரி 4ஆம் தேதி சுவாமியும், அம்மனும் பஞ்சமூர்த்திகளுடன் கோவிலில் இருந்து புறப்பட்டு மீனாட்சியம்மன் கோவிலின் உபகோவிலான மாரியம்மன் தெப்பக்குளம் சென்று, அங்கு தெப்பத்தில் எழுந்தருளுகின்றனர். அன்றைய தினம் சுவாமியும், அம்மனும் புறப்பாடாகி, மீண்டும் கோவிலுக்குள் வரும் வரை மீனாட்சி - சுந்தரேஸ்வரர் கோவில் நடை சாத்தப்பட்டிருக்கும்.

மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் தெப்ப உற்சவத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டுக்கான தெப்பத் திருவிழா 24ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Thaipusam: Maduari Meenakshi,Samayapuram Mariamman temple Theppam Urchavam

கொடிக்கம்ப மண்டபம் முன்பு சிம்மாசனத்தில் பிரியாவிடையுடன் சுவாமியும், அம்மனும் தனித்தனியே எழுந்தருளுகின்றனர். தொடர்ந்து தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் தங்க சப்பரம், அன்னம், காமதேனு, சிம்மாசனம், குதிரை, ரிஷபம், யாளி, பல்லக்கு உள்பட வெவ்வேறு வாகனங்களில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருகின்றனர்.

பிப்ரவரி 3ஆம் தேதி 11ஆம் நாள் விழாவையொட்டி, சுவாமியும், அம்மனும் கோவிலில் இருந்து புறப்பாடாகி கீழ மாசி வீதி வழியாக சிந்தாமணி சாலையில் உள்ள கதிரறுப்பு மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர். அங்கு, கதிரறுப்பு திருவிழா நடைபெறும்.

பிப்ரவரி 4ஆம் தேதி சுவாமியும், அம்மனும் பஞ்சமூர்த்திகளுடன் கோவிலில் இருந்து புறப்பட்டு மீனாட்சியம்மன் கோவிலின் உபகோவிலான மாரியம்மன் தெப்பக்குளம் சென்று, அங்கு தெப்பத்தில் எழுந்தருளுகின்றனர். அன்று காலையில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் 2 முறை தெப்பக்குளத்தைச் சுற்றி வலம் வருகின்றனர்.

தொடர்ந்து, அன்று மாலை சுவாமியும், அம்மனும் மைய மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர். பின்னர், மின் விளக்குகளால் அலங்க ரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி தெப்பத்தை ஒரு முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர்.

அதன் பிறகு முக்தீசுவரர் கோவிலில் எழுந்தருளி சிறப்பு ஆராதனைகள் நடைபெற உள்ளன. பின்னர், அங்கிருந்து புறப்பாடாகி மீனாட்சியம்மன் கோவிலில் எழுந்தருளுகின்றனர். விழாவையொட்டி, பிப்ரவரி 4ஆம் தேதி அதிகாலை சுவாமியும், அம்மனும் புறப்பாடாகி, மீண்டும் கோவிலுக்குள் வரும் வரை மீனாட்சி - சுந்தரேசுவரர் கோவில் நடை சாத்தப்பட்டிருக்கும்.

Thaipusam: Maduari Meenakshi,Samayapuram Mariamman temple Theppam Urchavam

தைப்பூசம் நாளில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் தனது தங்கையான சமயபுரம் மாரியம்மனுக்கு சீர் கொடுக்கும் நிகழ்வும் நடைபெறுகிறது. சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உள்ள அம்மனை வணங்கினால் நினைத்தது நடக்கும், குடும்பம்செழிக்கும், தொழில் அபிவிருத்தி அடையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும். இதன் காரணமாக திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரம் வந்து அம்மனை தரிசனம்செய்து செல்வார்கள். இப்படி சிறப்புமிக்க இக்கோவிலில் சித்திரை தேரோட்டம், பூச்சொரிதல் விழா, தைப்பூசதிருவிழா உள்ளிட்ட விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படும்.

இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா இன்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இதையொட்டி, அன்று காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து அம்மன் மர கேடயத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.

கொடியேற்றத்தைத் தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் இரவு சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை, சேஷம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 8ஆம் நாளான பிப்ரவரி 2ஆம் தேதி அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 9ஆம் நாள் திருவிழா அன்று இரவு 8 மணிக்கு தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.

10ஆம் நாளான பிப்ரவரி 4ஆம் தேதி காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் தைப்பூசத்திற்காக கண்ணாடி பல்லக்கில் அம்மன் புறப்பட்டு வழிநடையாக ஸ்ரீரங்கம் வட திருகாவிரிக்கு வழிநடை உபயம் கண்டருள செல்கின்றார். மாலை அங்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 10 மணி முதல் 11 மணி வரை ஸ்ரீரங்கம் ரங்கநாதரிடம் இருந்து சீர் பெறும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பிப்ரவரி 5ஆம் தேதி அதிகாலை மகா அபிஷேகமும், தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். காலை முதல் அன்று இரவு வரை அம்மன் வழி நடை உபயம் கண்டருளி மண்டகப்படி கண்டருளுகிறார். இரவு 11 மணிக்கு கோவில் வந்தடைகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+