விளக்கு திரியை எப்படி மாற்றுவது? தப்பித்தவறியும் பூஜைகளில் தீபத் திரியை இப்படி செய்யாதீங்க.. டிப்ஸ்
சென்னை: வீடுகளில் விளக்கேற்றும்போது செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாத செயல்கள் குறித்தெல்லாம் ஆன்மீகத்தில் தெளிவாகவே விளக்கி சொல்லப்பட்டுள்ளது.
வீடுகளில் விளக்குகளை ஏற்ற சரியான நேரம் காலை 5 மணி முதல் 7 மணி வரையாகும்.. சூரியன் உதிப்பதற்கு முன் நம்முடைய வீட்டில் விளக்கேற்றுவது என்பது, மிக மிக நன்மையை அளிக்கும். இந்த விளக்கு ஏற்றும்போது குளித்து விட்டு விளக்கேற்ற வேண்டும்.

சரியான நேரம்: மாலை 5 மணி முதல் 7 மணி வரை விளக்கு ஏற்றினால் நல்ல பலனை கொடுக்கும். நாம் ஏற்றும் விளக்கு கிழக்கு நோக்கியும், விளக்கினை ஏற்றுபவர்கள் மேற்கு திசை பார்த்தபடி இருக்க வேண்டும்.. எப்போதுமே விளக்குகளை கிழக்கு திசையில் ஏற்றி வைக்க வேண்டும். ஆனால், இறந்தவர்களின் படத்திற்கு விளக்கேற்றும்போது வடக்கு திசையில் ஏற்ற வேண்டும்.
எப்போதுமே விளக்குகளை அரை மணி நேரமாவது எரிய விட வேண்டும். வீட்டின் நிலை வாசலில் முதலில் தீபம் ஏற்றிவிட்டு, பிறகுதான் பூஜை அறையில் ஏற்றி வைக்க வேண்டும். ஒரு விளக்கு தீபத்திலிருந்து இன்னொரு விளக்கை ஏற்றுதல் கூடாது. ஒவ்வொரு விளக்குகளையும் தனித்தனியாக ஒளியூட்ட வேண்டும்.
வெளிச்சம்: விளக்கு எரியத் தொடங்கியவுடனேயே, திரியின் கசடைத் தட்டுவதோ, திரியை நிமிண்டுவதோ கூடாது. அவ்வாறு செய்தால் தோஷங்கள் ஏற்படும் என்பார்கள்.. வேண்டுமானால், திரியை பெரிதாக்கி ஒளியை கூட்டிக் கொள்ளலாம்.. ஒருவேளை, விளக்கின் வெளிச்சம் குறைந்து கொண்டே வந்தால், எரிந்து கொண்டிருக்கும் திரிக்கு பக்கத்திலேயே இன்னொரு புது திரியை ஏற்றி வைக்க வேண்டும். அதற்கு பிறகே பழைய திரியை வெளியே எடுக்க வேண்டும்.
எண்ணெய் முழுவதும் தீர்ந்து, விளக்கு அணையும் வரை விடக்கூடாது.. விளக்கில் எண்ணெய் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
விளக்கு திரிகள்: மேலும் விளக்கை அணை எனக்கூற கூடாது, விளக்கை குளிரவை எனக் கூற வேண்டும். விளக்கை எப்போதுமே பெண்களே ஏற்ற வேண்டும்.. பெண்களே அணைக்க வேண்டும்.. ஆனால், வாயினால் ஊதி விளக்கை அணைக்கக்கூடாது..
வெறுங்கையினாலும் தீபத்தை அணைக்கக்கூடாது. எண்ணெய்யிலுள்ள திரியின் அடிப்பகுதியை 'ஓம் சாந்த ஸ்வலரூபிணே நம' என்று சொல்லியே பின்புறமாக இழுக்கும்போது, தீச்சுவாலை மெல்ல மெல்ல குறைந்து, எண்ணெயில் அமிழ்ந்துவிடும்.
தவிர்க்க வேண்டும்: எக்காரணம் கொண்டும் விளக்கேற்றியதும் தலை சீவக்கூடாது, வீட்டை சுத்தம் செய்யக்கூடாது.. விளக்கேற்றிய பிறகு சுமங்கலிப் பெண் வெளியே செல்லக்கூடாது.. விளக்கேற்றிய உடனேயே சாப்பிடக்கூடாது. விளக்கேற்றும்போது தூங்க கூடாது. விளக்கு வைத்தபிறகு குளிக்கக்கூடாது.. வீடுகளிலுள்ள குப்பையை வெளியே கொட்ட கூடாது.. தலைவாசல் படியில் அமர்ந்து பேன் பார்க்க கூடாது. வீட்டில் விளக்கேற்றியதுமே பால், தயிர், காய்கறிகளை இரவில் கடன் வாங்கவோ, கடன் கொடுக்கவோ கூடாது.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications