அர்னாவ் பணத்திற்காக பல பெண்களோடு தொடர்பு..ஆதாரத்தை வெளியிட்ட மனைவியான நடிகை திவ்யா
சென்னை: சின்னத்திரை நடிகையான திவ்யா தனது கணவரை பற்றி பரபரப்பான ஆதாரங்களை வெளியிட்டு இருக்கிறார்.
பல பெண்களிடம் பணத்திற்காக அர்னாவ் பழகி இருப்பதாக குற்றச்சாட்டுகளை புதியதாக வைத்துள்ளார்.
வெளிநாட்டு பெண் ஒருவர் அர்னாவ் பற்றிய ரகசியங்களை தற்போது தான் கூறியதாக திவ்யா கூறியுள்ளார்.

சில மாதங்களில் குழப்பம்
சமூக வலைத்தளத்தில் சின்னத்திரை நடிகர்களான அர்னாவ் மற்றும் திவ்யா இவர்களுடைய குடும்ப பிரச்சனை தான் ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இருவரும் சீரியல்கள் மூலமாக சின்னத்திரை ரசிகர்களுக்கு பரிச்சயமாக இருக்கும் நேரத்தில் கணவன், மனைவியாக வாழ்க்கையை தொடங்கி ஒரு சில மாதங்களில் இவர்களுடைய குடும்ப வாழ்க்கை சமூக வலைதளத்தில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது.

காதல் திருமணம்
கணவன் மனைவியாக இருக்கும் நடிகை திவ்யா ஸ்ரீதர் மற்றும் அர்னாவ் இருவரும் ஒருவரை மாற்றி ஒருவர் குற்றச்சாட்டுகளையும், ஆதாரங்களையும் வெளியிட்டு வருகின்றனர். இவர்களில் யார் கூறுவது உண்மை என்று கணிக்க முடியாத வகையில் இருந்து வருவதாக ரசிகர்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். கேளடி கண்மணி சீரியலில் மூலமாக தமிழ் சீரியலில் அறிமுகமான திவ்யா அதே சீரியலில் அவரோடு நடித்த அர்னாவ்வை காதலித்து ஐந்து வருடங்களுக்குப் பிறகு தற்போது தான் திருமணம் செய்து உள்ளாராம். இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவராக இருந்துள்ளனர்.

பூதாகரமான பிரச்சனைகள்
செல்லம்மா சீரியலில் கதாநாயகனாக நடித்து வரும் அர்னாவ் .இவருடைய நிஜ பெயர் நைனா முகமது. இவருக்காக திவ்யா முஸ்லிம் மதத்திற்கு மாறி தான் திருமணம் செய்துள்ளார். 5 வருடங்கள் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்களுடைய வாழ்க்கையில் சிறு சிறு பிரச்சனைகள் பெரியதாக எடுத்துக் கொள்ளப்படாமல் இருந்துள்ளது. ஆனால் திருமணத்திற்கு பிறகு தற்போது திவ்யா கர்ப்பமாக இருக்கும் நிலையில் பழைய பிரச்சனைகள் ஒவ்வொன்றும் இப்போது பூதாகரமாக பார்க்கப்பட்டு வருகிறது. திவ்யா தன்னுடைய கணவருக்கு அவரோடு சீரியலில் நடிக்கும் நடிகையுடன் தவறான பழக்கம் இருப்பதாக குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார்.

இது புது குற்றச்சாட்டு
திவ்யாவின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த அர்னாவ் திவ்யா தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும், அவருடைய குழந்தையை தன்னிடம் திருமணத்திற்கு பிறகு தான் தன் குழந்தை என்று கூறியதாகவும், இவர்கள் இருவரும் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் போது திவ்யா விவாகரத்து வாங்கவில்லை என்று பல்வேறு குற்றசாட்டுகளை கூறியிருந்தார் .இந்த நிலையில் திவ்யா தற்போது அர்னாவ்வுக்கு ஏற்கனவே பல பெண்களோடு தொடர்பு இருந்திருக்கிறது. அதுவும் ஒரு பெண் அர்னாவ் பணம் வாங்கி தன்னை ஏமாற்றி விட்டதாக போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கிறார் என்று கூறியிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் மலேசியாவில் இருக்கும் ஒரு பெண்ணும் இவரும் காதலித்து பிரிந்து பிறகு பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகவும் தற்போது அந்த பெண் திவ்யாவிடம் ஆதாரங்களை கொடுத்திருப்பதாகவும் திவ்யா பரபரப்பாக ஆதாரங்களை வெளியிட்டு இருக்கிறார்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications