Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனோஜை, பாரதிராஜா அடிச்சுட்டாரு! சூட்டிங் ஸ்பாட்டில் அப்படி சொல்லி அழுதாரு! மறக்க முடியல! ஜோ மல்லூரி உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனரும் நடிகருமான பாரதிராஜாவின் ஒரே மகன் மனோஜ் பாரதிராஜா கடந்த இரண்டு நாட்களுக்கும் முன்பு மாரடைப்பின் காரணமாக காலமானார். அவருடைய நினைவுகள் பற்றி அவருடன் பழகியவர்கள் பலரும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் நடிகர் ஜோ மல்லூரி பாரதிராஜா மற்றும் மனோஜ் இருவருக்கும் இடையில் இருந்த பாசம் பற்றி உருக்கமாக பேசி இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பல புதுமுக நடிகர்களை கதாநாயகர்களாக அறிமுகம் செய்த பெருமை பாரதிராஜாவையே சேரும். பல வருடங்களாகவே இயக்குனராகவும் நடிகராகவும் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்று இருக்கும் பாரதிராஜாவின் ஒரே மகனான மனோஜும் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் இயக்குனராக வேண்டும் என்ற கனவுகளோடு இருந்த மனோஜ் பாரதிராஜா கடந்த வருடத்தில் மார்கழி திங்கள் என்ற திரைப்படத்தின் மூலமாக தன்னுடைய இயக்குனர் கனவை நிறைவேற்றி இருந்தார். ஆனால் அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

Manoj Bharathiraja

நடிகர் ஜோ மல்லூரி பேட்டி

மீண்டும் தான் புதிய ஒரு திரைப்படத்தை இயக்கி வெற்றி பெற வேண்டும் என்ற வைராக்கியத்தோடு இருந்தார். ஆனால் காலம் அவர் உயிரை 48 வயதிலேயே இந்த உலகத்தில் இருந்து பிரிந்துவிட்டது. இது குறித்து நடிகர் ஜோ மல்லூரி உருக்கமாக பேசியிருந்தார். அதில் நான் பல வருடங்களாக பாரதிராஜா சாருடன் பயணிக்கிறேன். பாரதிராஜா சாரை பொருத்தவரையில் அவருடைய மகன் தான் அவருக்கு எல்லாமே.

மகனை அடித்த பாரதிராஜா

இருவருக்கும் எல்லார் வீட்டில் வருவது போல சில கருத்து வேறுபாடுகள் வந்திருக்கிறது. ஆனால் தன்னுடைய மகன்தான் என்னுடைய உலகம் என்று சொல்லுவார். பொம்மலாட்டம் படத்தில் நான் நடித்துக் கொண்டிருக்கும் போது பாரதிராஜா சார் மனோஜ்க்கு போன் பண்ணி அவனை இங்க வர சொல்லுடான்னு சொன்னாரு. நான் என்னன்னு கேட்டேன். வீட்டில் வைத்து சின்ன பிரச்சனைக்கு அவனை அடித்துவிட்டேன் அவன் எதிர்த்து கூட என்னை பேசவில்லை.

பாரதிராஜா வருத்தம்

நான் அடிப்பதை தடுக்க கூட செய்யவில்லை. அப்படியே நின்று கொண்டிருந்தான். எனக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு என்று சொல்லி வருத்தப்பட்டார். பாரதிராஜா சார் எந்த விஷயமாக இருந்தாலும் பர்ஃபெக்ட்டா இருக்க வேண்டும் என்று நினைப்பாரு. அது அப்படி நடக்காத போது எமோஷனலாகி டென்ஷனாகி விடுவாரு. அதுபோலத்தான் தன்னுடைய மகனையும் அடித்திருக்கிறார்.

யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது

ஆனால் பிறகு அது அவருக்கு வருத்தத்தை கொடுத்திருந்தது. அதுபோல கடந்த ரெண்டு வருஷமா மனோஜ் தான் பாரதிராஜா சாரை கண்ணுக்குள் வைத்து பாதுகாத்துக் கொண்டு வந்தார். பாரதிராஜா சாருக்கு எல்லா வேலைகளையும் மனோஜ் தான் பார்த்துக் கொண்டார். யார் பாரதிராஜா சாரை பார்க்க வேண்டும் என்றால் மனோஜ் அனுமதி இருந்தால் தான் முடியும்.

மகன்தான் உசுரு

இப்படி இரண்டு வருடங்களாக அவரை பொத்தி பொத்தி பார்த்துவிட்டு இப்போது திடீர்னு இந்த உலகத்தை விட்டு போயிட்டாருன்னு சொன்னபோது அவரால் அதை புரிஞ்சிக்க கூட முடியல. அவருக்கு இப்போ வயது மூப்பு, உடல்நிலை பிரச்சனை நடக்கக்கூட முடியல என பல கஷ்டங்கள் இருக்கிறது. இந்த நேரத்தில் மகனின் இழப்பு அவருக்கு பெரிய வலி. அவரை எப்படி நாங்க பேஸ் பண்ண போறோம்னு தெரியல. மனோஜ் மற்றும் பாரதிராஜா இரண்டு பேருக்கும் ரொம்ப பாண்டிங் உண்டு. சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் மகன் மேல தான் உசுரா இருந்தாரு, என ஜோ மல்லூரி உருக்கமாக பேசியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+