Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Soori: போட்ட சட்டையை கழட்ட சொல்லி அவமானம்.. சென்னையில் பட்ட கஷ்டம்! கண் கலங்க பேசிய சூரி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக காமெடி கேரக்டரில் மட்டுமே நடித்து வந்த நடிகர் சூரி, இன்று தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி, கதாநாயகனாக உயர்ந்திருப்பது சாதாரண விஷயம் அல்ல. திரையில் ரசிகர்களை சிரிக்க வைத்த அவர் வாழ்க்கையில் சிரிப்பு எளிதாக கிடைக்கவில்லை. அதற்கு பின்னால் வலியும், போராட்டமும், சொல்ல முடியாத தியாகங்களும் நிறைந்த ஒரு நீண்ட பயணம் மறைந்திருக்கிறது.

காமெடியன் என்ற ஒரே அடையாளத்துக்குள் சூரி அடைக்கப்பட்டிருந்த காலம் ஒன்று இருந்தது. ஆனால் அந்த அடையாளத்தை உடைத்து, தன்னுடைய திறமையை வேறு கோணத்தில் நிரூபிக்க அவர் எடுத்த முயற்சிகளே இன்று அவரை கதாநாயகன் என்ற உயரத்திற்கு கொண்டு வந்துள்ளன. அந்த வளர்ச்சியின் வேர்கள், அவர் சந்தித்த கடினமான அனுபவங்களில்தான் இருக்கின்றன.

Actor Soori Tamil cinema

உடைந்த கனவு

சமீபத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்ட நடிகர் சூரி, தனது வாழ்க்கைப் பயணத்தை பற்றி பேசும்போது உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார். அவர் பகிர்ந்த அந்த அனுபவங்கள், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களின் மனதை நெகிழ வைத்துள்ளது.

அந்த மேடையில் சூரி பேசும்போது, "பல வருட போராட்டங்களுக்கு பிறகு சினிமாவில் ஒரு வழியாக ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்துக்காக எனக்கு டிரஸ் அளவு எடுக்கும்போது என் கை காலெல்லாம் நடுங்கியது. கண்கள் தானாக கலங்கியது. இவ்வளவு நாளைக்கு பிறகு வாழ்க்கை மாறப் போகுதேன்னு மனசுக்குள்ள நினைச்சேன்" என்று கூறினார்.

ஒரு நடிகனுக்கான முதல் அடையாளமாக பார்க்கப்படும் அந்த தருணம், சூரிக்கு கனவுகள் நிறைந்த நொடியாய் இருந்தது. ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நிலைக்கவில்லை.

மனதில் பதிந்த வலி

அதே அனுபவத்தைத் தொடர்ந்த அவர், "அந்த கேரக்டருக்கு திடீர்னு இன்னொருத்தரை ரெக்கமண்ட் பண்ணிட்டாங்க. உடனே 'சட்டையை கழட்டுங்கள்'ன்னு சொன்னாங்க. எந்த கேள்வியும் இல்லாமல் அதே இடத்துல சட்டையை கழட்டினேன்" என்று கூறியபோது, மேடையில் அவருடைய குரலும், கண்களும் உடைந்தது.

அந்த ஒரு நொடி, சூரியின் வாழ்க்கையில் அழிக்க முடியாத நினைவாக மாறியுள்ளது. வாய்ப்பு கிடைத்த சந்தோஷமும், அதை இழந்த வலியும் ஒரே நேரத்தில் அவர் மனதில் பதிந்தது. அந்த அவமானமும், வேதனையும் அவரை சினிமாவை விட்டு விலகச் செய்யவில்லை. மாறாக, இன்னும் வலிமையாக போராடச் செய்தது.

சினிமாவுக்கு முன்பான சூரியின் வாழ்க்கை

சூரியின் போராட்டம் சினிமாவிலேயே தொடங்கவில்லை. அதற்கு முன்னரே வாழ்க்கை அவரை கடுமையாகச் சோதித்திருந்தது. அந்த நாட்களை நினைவுகூர்ந்த அவர், "நான் லாரி கிளீனராக இருந்தேன். சாக்கடையை அள்ளும் வண்டியில்கூட வேலை பார்த்திருக்கேன். அப்புறம் பெயிண்ட் அடிக்கச் சென்றேன். சென்னையிலுள்ள பெரிய பெரிய கட்டடங்களில் என் கை படாத இடமே இல்லை" என்று மனம் திறந்து பகிர்ந்தார்.

இந்த வார்த்தைகள், சூரியின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் உழைப்பையும், அடிப்படை வாழ்க்கை அனுபவங்களையும் வெளிப்படுத்துகின்றன.

பலரும் காமெடி நடிகர்களை ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் தான் பார்க்கிறார்கள். ஆனால் சூரி, அந்த வரம்புகளை உடைத்து, தன்னுள் இருக்கும் நடிப்புத் திறனை வெளிக்கொணர்ந்து இன்று கதாநாயகனாக உயர்ந்திருக்கிறார். இது அவரின் பொறுமைக்கும், நம்பிக்கைக்கும் கிடைத்த வெற்றி.

இன்று சூரியின் வளர்ச்சியைப் பார்த்து, "சிரிக்க வைத்தவன் சும்மா சிரிப்பவன் இல்லை; அவன் சிரிப்புக்கு பின்னால் ஆயிரம் கண்ணீர் இருக்கிறது" என்று ரசிகர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.

ஜிவி பிரகாஷ் குமார் - எம்எஸ் பாஸ்கருக்கு தேசிய விருது.. பார்க்கிங் படத்துக்கும் தேசிய விருது
சூரியின் வாழ்க்கை கதை, கனவுகளோடு போராடும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு ஒரு நம்பிக்கையான பாடமாக மாறியுள்ளது. வாய்ப்புகள் மறுக்கப்பட்டாலும், அவமானங்கள் சந்தித்தாலும், விடாமல் முயன்றால் ஒரு நாள் உழைப்புக்கு நிச்சயம் மதிப்பு கிடைக்கும் என்பதற்கு சூரி உயிர்ப்பான எடுத்துக்காட்டு.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+