Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரபல இசையமைப்பாளர் மகனுக்கே இந்த நிலையா? நடிகர் ஸ்ரீகுமார் உடைக்கும் கசப்பான சாதி அரசியல்!

Subscribe to Oneindia Tamil

தமிழ் திரையுலகில் 'மெல்லிசை மன்னர்கள்' என்று போற்றப்படுபவர்கள் சங்கர் - கணேஷ் ஜோடி. ஆயிரக்கணக்கான பாடல்கள், நூற்றுக்கணக்கான படங்கள் எனத் தசாப்தங்களாகத் திரையுலகை ஆண்ட சங்கர் அவர்களின் மகன் தான் நடிகர் ஸ்ரீகுமார். வாரிசு நடிகர், வசதியான பின்னணி எனப் பலரும் இவரைப் பார்த்தாலும், இவருக்குப் பின்னால் இருக்கும் குடும்ப வரலாறு ரத்தமும் கண்ணீரும் கலந்தது என்பதை சமீபத்திய நேர்காணலில் போட்டுடைத்துள்ளார் ஸ்ரீகுமார்.

Actor SriTelevision TV

பணம் இருந்தால் சாதி ஓடிவிடும்

சமூகத்தில் நிலவும் சாதியப் பாகுபாடுகள் குறித்துப் பேசும் ஸ்ரீகுமார், ஒரு கசப்பான உண்மையை மிகத் துணிச்சலாகப் பதிவு செய்துள்ளார். "இந்தச் சமூகத்தில் சாதி என்பது ஏழைகளுக்கானது மட்டுமே. நீங்கள் ஏழையாக இருக்கும் வரைதான் உங்கள் சாதியைத் தேடிப் பிடித்து உங்களை ஒடுக்குவார்கள். ஆனால், நீங்கள் கஷ்டப்பட்டு முன்னேறிப் பணக்காரராகிவிட்டால், அந்தச் சாதி அடையாளம் தானாகவே மறைந்துவிடும். யாரும் உங்களைச் சாதியைக் கேட்டுப் புறக்கணிக்க மாட்டார்கள்," என்று அவர் தெரிவித்துள்ளார்.

தந்தை சங்கர் சந்தித்த கொடூரங்கள்

இன்று ஸ்ரீகுமார் ஒரு நட்சத்திரமாக வலம் வருவதற்கு விதை போட்டவர் அவரது தந்தை சங்கர். ஆனால், அவர் சந்தித்த அவமானங்கள் சொல்லொணாதவை. "என் அப்பா பட்டியல் இனத்தைச் (SC) சேர்ந்தவர் என்பதால், அந்த காலத்தில் அவர் கடும் பாரபட்சத்தை எதிர்கொண்டார். அவர் ஒரு திறமையான இசையமைப்பாளராக வளர்ந்து வந்த சமயத்தில் கூட, அவருக்கு ஈயத் தட்டில் தான் உணவு வழங்கப்பட்டது. இத்தனைக்கும் அவர் ஒரு கலைஞன், சாதிக்கத் துடித்த ஒரு மனிதர். ஆனால், அந்தத் தட்டு தான் அன்று அவருக்குச் சமூகத்தின் அடையாளமாகக் கொடுக்கப்பட்டது", என்று ஸ்ரீகுமார் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

Actor SriTelevision TV

அடையாளங்களைத் தாண்டிய போராட்டம்

தந்தையின் அந்த வலிகள்தான் ஸ்ரீகுமாரை இன்று ஒரு பக்குவப்பட்ட மனிதராகச் செதுக்கியுள்ளது. 'ஆனந்தம்' சீரியல் மூலம் அறிமுகமாகி, 'யாரடி நீ மோகினி', 'வானத்தை போல' எனத் தொடர்ந்து ஹிட் சீரியல்களைக் கொடுத்தவர். தற்போது ஜீ தமிழில் 'கெட்டி மேளம்' தொடரில் நாயகனாகத் தன் பயணத்தைத் தொடர்கிறார். "வெற்றி பெற்றால் சாதி மறைந்துவிடும்" என்ற ஸ்ரீகுமாரின் கருத்து, சமூகம் இன்னும் பணத்தையும் அதிகாரத்தையும் வைத்தே ஒரு மனிதனை மதிக்கிறது என்பதைக் காட்டும் கண்ணாடி போல அமைந்துள்ளது. இந்த 'ஓபன் டாக்' தற்போது சின்னத்திரை வட்டாரத்திலும், இணையத்திலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+