பிரபல இசையமைப்பாளர் மகனுக்கே இந்த நிலையா? நடிகர் ஸ்ரீகுமார் உடைக்கும் கசப்பான சாதி அரசியல்!
தமிழ் திரையுலகில் 'மெல்லிசை மன்னர்கள்' என்று போற்றப்படுபவர்கள் சங்கர் - கணேஷ் ஜோடி. ஆயிரக்கணக்கான பாடல்கள், நூற்றுக்கணக்கான படங்கள் எனத் தசாப்தங்களாகத் திரையுலகை ஆண்ட சங்கர் அவர்களின் மகன் தான் நடிகர் ஸ்ரீகுமார். வாரிசு நடிகர், வசதியான பின்னணி எனப் பலரும் இவரைப் பார்த்தாலும், இவருக்குப் பின்னால் இருக்கும் குடும்ப வரலாறு ரத்தமும் கண்ணீரும் கலந்தது என்பதை சமீபத்திய நேர்காணலில் போட்டுடைத்துள்ளார் ஸ்ரீகுமார்.

பணம் இருந்தால் சாதி ஓடிவிடும்
சமூகத்தில் நிலவும் சாதியப் பாகுபாடுகள் குறித்துப் பேசும் ஸ்ரீகுமார், ஒரு கசப்பான உண்மையை மிகத் துணிச்சலாகப் பதிவு செய்துள்ளார். "இந்தச் சமூகத்தில் சாதி என்பது ஏழைகளுக்கானது மட்டுமே. நீங்கள் ஏழையாக இருக்கும் வரைதான் உங்கள் சாதியைத் தேடிப் பிடித்து உங்களை ஒடுக்குவார்கள். ஆனால், நீங்கள் கஷ்டப்பட்டு முன்னேறிப் பணக்காரராகிவிட்டால், அந்தச் சாதி அடையாளம் தானாகவே மறைந்துவிடும். யாரும் உங்களைச் சாதியைக் கேட்டுப் புறக்கணிக்க மாட்டார்கள்," என்று அவர் தெரிவித்துள்ளார்.
தந்தை சங்கர் சந்தித்த கொடூரங்கள்
இன்று ஸ்ரீகுமார் ஒரு நட்சத்திரமாக வலம் வருவதற்கு விதை போட்டவர் அவரது தந்தை சங்கர். ஆனால், அவர் சந்தித்த அவமானங்கள் சொல்லொணாதவை. "என் அப்பா பட்டியல் இனத்தைச் (SC) சேர்ந்தவர் என்பதால், அந்த காலத்தில் அவர் கடும் பாரபட்சத்தை எதிர்கொண்டார். அவர் ஒரு திறமையான இசையமைப்பாளராக வளர்ந்து வந்த சமயத்தில் கூட, அவருக்கு ஈயத் தட்டில் தான் உணவு வழங்கப்பட்டது. இத்தனைக்கும் அவர் ஒரு கலைஞன், சாதிக்கத் துடித்த ஒரு மனிதர். ஆனால், அந்தத் தட்டு தான் அன்று அவருக்குச் சமூகத்தின் அடையாளமாகக் கொடுக்கப்பட்டது", என்று ஸ்ரீகுமார் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

அடையாளங்களைத் தாண்டிய போராட்டம்
தந்தையின் அந்த வலிகள்தான் ஸ்ரீகுமாரை இன்று ஒரு பக்குவப்பட்ட மனிதராகச் செதுக்கியுள்ளது. 'ஆனந்தம்' சீரியல் மூலம் அறிமுகமாகி, 'யாரடி நீ மோகினி', 'வானத்தை போல' எனத் தொடர்ந்து ஹிட் சீரியல்களைக் கொடுத்தவர். தற்போது ஜீ தமிழில் 'கெட்டி மேளம்' தொடரில் நாயகனாகத் தன் பயணத்தைத் தொடர்கிறார். "வெற்றி பெற்றால் சாதி மறைந்துவிடும்" என்ற ஸ்ரீகுமாரின் கருத்து, சமூகம் இன்னும் பணத்தையும் அதிகாரத்தையும் வைத்தே ஒரு மனிதனை மதிக்கிறது என்பதைக் காட்டும் கண்ணாடி போல அமைந்துள்ளது. இந்த 'ஓபன் டாக்' தற்போது சின்னத்திரை வட்டாரத்திலும், இணையத்திலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications