“லேடி சூப்பர் ஸ்டார்”னா இவங்க தான்.. சர்ச்சையை கிளப்பிய நடிகை கஸ்தூரி.. யாரை சொல்றாங்கன்னு தெரியுதா?
சென்னை: சமீபத்தில் சூப்பர் ஸ்டார் யார் என்ற பிரச்சனை பெரிய அளவில் பேசப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அதைத்தொடர்ந்து லேடி சூப்பர் ஸ்டார் பற்றி அடுத்த பிரச்சனை தொடங்கியிருக்கிறது.
அது குறித்து நடிகை கஸ்தூரி தன்னுடைய கருத்தை பிரபல சேனல் ஒன்றில் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

அதோடு தன்னைப் பொருத்தவரையில் யார் லேடி சூப்பர் ஸ்டார் என்பது பற்றியும் அவர் விளக்கம் கொடுத்திருக்கிறார். இது பற்றி விரிவாக பார்க்கலாம்.
நடிகையாக பலருக்கும் பரிச்சயமான காயத்ரி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக சின்னத்திரையிலும் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்திருந்தார். அது மட்டும் அல்லாமல் இப்போதும் பல கன்னட சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அடிக்கடி பல பிரபலங்கள் பற்றியும் ஏதாவது கருத்து தெரிவித்து வருகிறார்.
நடிப்பில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருக்கும் காயத்ரி சமீபத்தில் பேட்டியில் லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் பற்றி கேட்ட கேள்விக்கு பதில் கொடுத்து இருந்தார். அதில் என்ன பொருத்தவரைக்கும் சூப்பர் ஸ்டார் என்றால் அது நம் தலைவர் ரஜினி மட்டும் தான். அதற்காக மற்றவர்கள் வரக்கூடாது என்று நான் சொல்லவில்லை.
அந்த காலத்தில் இருந்தே எம்ஜிஆர், சிவாஜி முதல் ரஜினி கமல் இவர்களை அடுத்து இப்போது விஜய் அஜித் என அடுத்தடுத்த தலைமுறைகள் வந்து கொண்டு தான் இருப்பார்கள். ஆனால் எத்தனை பேர்கள் வந்தாலும் அவர் அடைந்த அந்த சகாப்தத்தையும் யாராலும் மறக்க முடியாது என்று பேசிக்கொண்டு இருக்கும்போதே அங்கிருந்த நிருபர் ஒருவர் அப்போ நடிகைகளில் யார் சூப்பர் ஸ்டார் என்று கேள்வி கேட்டு இருக்கிறார்.
அதற்கு பதில் அளித்த கஸ்தூரி பொதுவாக நடிகைகளை பொருத்தவரைக்கும் இந்த நடிகைக்காக மட்டுமே படத்தை பார்க்கலாம் என்று யார் ஒருவரை மையப்படுத்தி படம் அமைகிறதோ அப்படி இருந்தால்தான் அவர் லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்ல முடியும். அந்த வகையில் பார்க்கும்போது இந்த காலத்தில் அப்படிப்பட்ட ஒரு நடிகை இல்லை.
ஆனால் ஆரம்ப காலத்தில் கேபி சுந்தராம்பாள் அந்த மாதிரியான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தார். அவர் நடித்த பல படங்களில் அவரை சுற்றி கதைகள் அமைந்திருக்கும். அவருக்காகவே கூட்டம் கூட்டமாக பார்க்க போன ரசிகர்கள் ஏராளம். அவரை தொடர்ந்து விஜயசாந்தியை சொல்ல முடியும். இவர்கள் இரண்டு பேரையும் அடுத்து மற்ற எந்த நடிகையும் அப்படி சொல்ல முடியாது.
நயன்தாராவை பொருத்தவரைக்கும் அவர் நடித்த மாயா என்ற திரைப்படம் மட்டுமே அந்த மாதிரி முக்கியத்துவம் வாய்ந்த கதையாக அமைந்திருந்தது. மத்தபடி எந்த படமும் சரியாக போகவில்லை என்று கஸ்தூரி கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications