Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏர்போர்ட்டில் திடீரென்று மகனை கட்டிப்பிடித்து அழுத ராதிகா..காரணம் இதுதானா..?உருக்கமான வார்த்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராதிகா சரத்குமார் தன்னுடைய மகனை ஏர்போர்ட்டில் கட்டிப்பிடித்து அழுத வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

தன்னுடைய மகன் வெளிநாட்டிற்கு திரும்பி செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையில் ராதிகா இருந்திருக்கிறார்.

நடிகை ராதிகா தன்னுடைய மகனைப் பற்றி பல தகவல்களை உருக்கமாக பேசியிருக்கிறார்.

Actress Radhika Sarathkumar is crying her eyes out at the airport as her son is going abroad

வெள்ளி திரைகளிளும், சின்னத்திரையிலும் கொடிகட்டி பறந்து வரும் நடிகை ராதிகா சரத்குமார் படு பிஸியாக இருந்து வருகிறார். பல முன்னணி நடிகர்களோடு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல மீண்டும் தற்போது சின்ன திரையில் சீரியல் இயக்கியும் நடிக்கவும் தொடங்கி இருக்கிறார்.

சீரியல் ஒளிபரப்புவதற்கு முன்பே சஞ்சீவ் விலக காரணம்..? இத்தனை பிரச்சனைகள் இருக்கிறதாம்..!?
இந்த நிலையில் சிங்கப்பூரில் படிக்கும் தனது மகனை வழி அனுப்புவதற்காக ஏர்போர்ட் சென்ற ராதிகா மகனை பிரிய முடியாமல் அங்கேயே கட்டிப்பிடித்து கண் கலங்கி அழுகிறார். நடிகை ராதிகாவிற்கும் நடிகர் சரத்குமார்க்கும் கடந்த 2001 ஆம் ஆண்டு தான் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் கடந்த 2004 ஆம் ஆண்டு ராகுல் என்ற மகனும் பிறந்தார். இந்த நிலையில்தான் ராகுல் சமீபத்தில் கல்லூரி படிப்பை முடித்திருக்கிறார்.

இதைத்தொடர்ந்து பட்டமளிப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட சரத்குமார் மற்றும் ராதிகா இருவரும் அந்த புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து இருந்தனர். இந்த நிலையில் இதை குறித்து பதிவிட்ட ராதிகா யுனைடெட் வேர்ட்ஸ் காலேஜ் ஆப் சவுத் ஈஸ்ட் ஆசியா என்ற கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் பட்டப்படிப்பை முடித்து தங்கள் மகனும் பட்டம் பெற்றதை நினைத்து பெருமையாக இருக்கிறது.

Actress Radhika Sarathkumar is crying her eyes out at the airport as her son is going abroad

ஒரு சிறுவனாக பள்ளியில் சேர்ந்ததிலிருந்து பொறுப்பான வயது வந்த இளைஞராக மாறியதை நினைத்து நானும் சரத்குமாரும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறோம். ராகுலின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் எங்கள் இருவருக்கும் பெருமை என்று குறிப்பிட்டிருந்தார்.இந்த நிலையில் சிங்கப்பூரில் இரந்து விடுமுறைக்கு வந்திருந்த தன்னுடைய மகன் மீண்டும் ஊருக்கு கிளம்பி போகும்போது உணர்ச்சிவசப்பட்டு ராதிகா அழுத வீடியோவை தற்போது சமூக வலைத்தளத்தில் பலர் பகிர்ந்து வருகின்றனர்.

ராதிகா என்ன தான் சினிமாக்களில் தன்னுடைய நடிப்பால் பலருடைய மனதை கவர்ந்திருந்தாலும் நிஜ வாழ்க்கையிலும் அம்மாவின் பாசத்தை மறைக்கவும் மறுக்கவும் முடியாது என்று பொதுவெளியில் காட்டி இருக்கிறார் என்று பலர் கூறி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+