For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாவனியை பற்றி அனிதா பேசிய வார்த்தைகள்.. இப்படி பேசலாமா?? ரசிகர்களின் கருத்துக்கள்

Google Oneindia Tamil News

சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பாவனி மற்றும் அமீர் பற்றி அனிதா பேசியது சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இரவு நேரத்தில் பாவனியைப் பற்றி அனிதா பேசியதை பார்த்ததும் பாவனியின் ரசிகர்கள் அனிதாவுக்கு எதிராக கருத்துக்களை பரப்பி வருகிறார்கள்.

 வேற மாதிரி கலக்கும் பாலா..பிக் பாஸ் கொடுத்த சிறப்பு பட்டம்.. இந்த வாரம் தரமான சம்பவம் இருக்கு வேற மாதிரி கலக்கும் பாலா..பிக் பாஸ் கொடுத்த சிறப்பு பட்டம்.. இந்த வாரம் தரமான சம்பவம் இருக்கு

 ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சி

ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சி

பிக்பாஸ் ஐந்தாவது சீசனின் வெற்றியை தொடர்ந்து தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இதுவரைக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் மட்டுமே கலந்து கொண்டு இருக்கின்றனர். அதனால் போட்டியாளர்கள் ஏற்கனவே ரசிகர்களுக்கு பரிச்சயமாகி இருப்பதால் நிகழ்ச்சிக்கான ஆர்வம் ரசிகர்களின் மத்தியில் அதிகமாக இருக்கும் என்று பிக்பாஸ் எதிர்பார்த்திருந்தது. அந்த மாதிரி தான் தற்போது கூட நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருவதால் உள்ளே நடக்கும் நிகழ்வுகள் ரசிகர்கள் புரிந்து கொள்ள முடிகிறது.

அனிதா பேசிய வார்த்தைகள்

அனிதா பேசிய வார்த்தைகள்

இதற்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் 24 மணி நேரமும் நடக்கும் நிகழ்வுகளில் ஹைலைட் விஷயங்கள் மட்டுமே ஒரு மணி நேரம் ஒளிபரப்பப்படும். அதனால் உள்ளே நடந்த பல நிகழ்வுகள் ரசிகர்களுக்கு தெரிவதில்லை என்று வருத்தத்தில் இருந்தவர்களுக்கு இந்த அல்டிமேட் நிகழ்ச்சி ஆதரவு அளிக்கும் விதமாக இருந்து வருகிறது. உள்ளே நடக்கும் சில நிகழ்வுகள் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து வருகிறது. அந்த மாதிரி தான் தற்போது கூட அனிதா பேசிய வார்த்தைகள் ரசிகர்களை குழப்பம் அடையச் செய்திருக்கிறது.

என்ன இப்படி சொல்லிவிட்டார்

என்ன இப்படி சொல்லிவிட்டார்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் போன் போன்ற எந்த ஒரு பொழுதுபோக்கு கருவிகளையும் பயன்படுத்த முடிவதில்லை. இதனால் அவர்கள் வீட்டிற்குள் வெட்டி கதையை பேசிக்கொண்டும் டாஸ்க் செய்து கொண்டும் இருந்து வருகின்றனர். அந்த மாதிரிதான் டாஸ்க் எதுவும் இல்லாத நேரத்தில் அனிதா தாமரைச்செல்வி நிரூப் என ஒரு கூட்டமாக அமர்ந்து கொண்டு இவர்கள் 5 வது சீசனில் நடந்த நிகழ்வுகளை அசை போட்டு இருக்கின்றனர். அதில் அனிதா, பாவனி என்ன விளையாட்டு விளையாடினார் என்று அவர் எல்லாம் மூன்றாவது இடத்திற்கு வந்து இருக்கிறார் என்று கேட்டிருக்கிறார். அதற்கு நிரூப் கேமரா முன்னாடி பேசிக்கொண்டிருப்பார் என்று கூறியிருக்கிறார். அதற்கு அப்படி எல்லாம் எங்களுக்கு காட்டப்படவில்லை. காதல் விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தார் என்று தான் எங்களுக்கு காட்டப்பட்டது என கூறியிருக்கிறார்.

ரசிகர்கள் கூறும் பதில்

ரசிகர்கள் கூறும் பதில்

ஒருவர் இல்லாத நேரத்தில் அவரைப் பற்றி கருத்து தெரிவிப்பது அநாகரிகமாக இருந்தாலும் பல கேமராக்கள் தன்னை தான் பார்த்துக் கொண்டிருக்கிறது என்று தெரிந்தும் அனிதா இந்த மாதிரி பாவனியைப் பற்றி குற்றம்சாட்டி இருப்பதை பார்த்ததும் பாவனியின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அனிதாவுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இதற்கு முன்பு அனிதா நான்காவது சீசனில் அறிமுகமாகி இருந்ததற்கும் தற்போது இருப்பதற்கும் அதிகமான வித்தியாசங்கள் இருக்கிறது என்று இவருக்கு இது வரைக்கும் சப்போர்ட் கொடுத்துக் கொண்டிருந்த ரசிகர்கள் கூட தற்போது அவர் விஷயத்தில் அனிதா பேசுவது தவறு என்று கூறிவருகிறார்கள்.

English summary
Anitha's talk about Bhavani and Amir on the Bigg Boss Ultimate show has caused a stir on the social networking site.After seeing Anita talking about Bhavani at night, Bhavani's fans are spreading rumors against Anitha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X