மகா சங்கமம் முடிந்தது.. ஆனால் பாக்கியாவுக்கு வந்த சிக்கல்.. இனி ஜெனி, ராதிகாவால் வர போகும் பிரச்சனை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் மற்றும் பாண்டியன் ஸ்டோர் சீசன் 2 சீரியலின் மஹா சங்கமம் இதுவரைக்கும் ஒளிபரப்பாகி வந்த நிலையில் இன்றைய எபிசோடு உடன் மகா சங்கமும் முடிவடைந்தது. இந்த நிலையில் இனி பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர் சீசன் 2 சீரியல் தனித்தனியாக ஒளிபரப்பாக இருக்கிறது.
அதே நேரத்தில் இத்தனை நாட்களாக கோமதியின் குடும்ப பிரச்சனையில் சிக்கிக்கொண்டிருந்த பாக்கியாவிற்கு அடுத்து கோபியால் வீட்டில் பூகம்பம் வெடிக்க இருக்கிறது. அதுபோல ஜெனி மற்றும் செழியனின் விவாகரத்து பிரச்சனையும் பரபரப்பை ஏற்படுத்த இருக்கிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் புதியதாக தொடங்கிய பாண்டியன் ஸ்டோர் சீசன் 2 சீரியலின் டிஆர்பிஐ கூட்டுவதற்காக பாக்கியலட்சுமி சீரியலோடு மகா சங்கமத்தை ஏற்படுத்தி இருந்தனர். அதிலும் கதிர் மற்றும் ராஜியின் திருமணத்தை நடத்துவதற்காகவே மகா சங்கமத்தை நடத்தி அதில் வெற்றியும் அடைந்து விட்டார்கள். இப்போது பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தில் இனி அடுத்தடுத்து பூகம்பங்கள் வெடிக்க காத்திருக்கிறது.
அதே நேரத்தில் இன்றைய எபிசோடில் இந்த சீரியலுக்கான மகா சங்கமும் முடிவடைந்து இருக்கிறது. இதனால் பாக்கியா வீட்டில் இனி பெரிய பிரச்சனையும் காத்திருக்கிறது. ஏற்கனவே ஜெனி இடம் குழந்தையை ஒப்படைத்து விட்டதால் ஈஸ்வரி கடும் கோபத்தில் இருக்கிறார். பாக்கியா வீட்டிற்கு வரட்டும் இருக்கிறது என்று மிரட்டிக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் இனி பாக்யா வீட்டிற்கு போகும்போது ஈஸ்வரி என்ன பாடுபடுத்தப் போகிறாரோ என்ற கேள்விகளும் இருக்கிறது. அதுபோல செழியன் மற்றும் ஜெனியின் விவாகரத்து பிரச்சனைகளும் போய்க்கொண்டிருக்கிறது. ஜெனி செழியன் மீது கோபமாக இருந்தாலும் செழியனுக்காகவும் அவருடைய குடும்பத்திற்காக ஜெனியின் தந்தையிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்.
அதே நேரத்தில் ஜெனியின் தந்தை ஜோசப் ஜெனிக்கும் செழியனுக்கும் விவாகரத்து வாங்கி கொடுத்து விட வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இதனால் இனி அதை நோக்கி கதை பயணிக்க இருக்கிறது. அதே நேரத்தில் கோபி கம்பெனியை மூடிவிட்டது இன்னும் ராதிகாவுக்கு தெரியாது. அது தெரிய வரும் போது இனி ராதிகா என்ன முடிவெடுப்பார் என்ற கேள்விகளும் இருக்கிறது.
அதே நேரத்தில் ராதிகாவாக நடிக்கும் ரேஷ்மா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்று பதிவிட்டு இருந்தார். அதில் பாக்யா வீட்டில் இருந்து கோபமாக ராதிகா வெளியே வருவது போன்று காட்சிகள் இருந்தது. இதனால் ராதிகாவுக்கு கோபி பிசினஸில் தோல்வி அடைந்த விஷயம் தெரிய வந்ததும் அதற்கு ஈஸ்வரி ராதிகா தான் தப்பு என்று ராதிகாவின் மேல எல்லா பழியும் தூக்கி போடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வீட்டை விட்டு கோபமாக ராதிகா வெளியே போவார் என்று தெரிகிறது.
அதுபோல அமிர்தாவை எழிலிடமிருந்து பிரிப்பதற்காக கணேஷ் பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார். இனி கணேசன் பிரச்சனைக்கு என்ன தீர்வு வரப்போகிறது என்பதும் இனிவரும் எபிசோட்டில் தான் தெரிய வரும். இதனால் இந்த மாதிரி பிரச்சனைகளை பாக்கியா எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications