திருமண மேடையில் கூட பவதாரிணி அப்பாவிடம் கேட்ட பாடல்.. ஆனால்! இளையராஜா சொன்ன மாதிரியே ஆயிடுச்சு
சென்னை: பிரபல பாடகியாக இருந்த பவதாரிணியின் மறைவு அவருடைய ரசிகர்களையும் குடும்பத்தினரையும் அதிகமாக சோகத்தில் ஆழ்த்தி இருக்கின்றது. இந்த நிலையில் பவதாரிணி குறித்து பல நினைவுகளை அவருடைய உறவினர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.
அந்த வகையில் பவதாரிணியின் கணவரின் அண்ணன் பவதாரிணி குறித்த சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் பவதாரிணியின் திருமண நாள் அன்று திருமண மேடையில் வைத்து பவதாரிணி இளையராஜாவிடம் தனக்காக ஒரு பாடலை பாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு இளையராஜா மறுப்பு தெரிவித்ததாகவும் ஆனால் பவதாரிணி அடம்பிடித்து இளையராஜாவை அந்த பாடலை பாட வைத்ததாகவும் கடைசியில் இளையராஜா சொன்னது போலவே நடந்து விட்டது என்று அவர் கூறியிருக்கிறார்.

அந்த வகையில் சினிமா துறையில் இப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் அடுத்தடுத்த மரணங்கள் வந்து கொண்டே இருக்கிறது. கடந்த மாதத்தில் தான் நடிகர் விஜயகாந்தின் மரணம் ஒட்டுமொத்த திரை உலகத்தையும் ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்திருந்தது. அந்த சோகத்தில் இருந்து ரசிகர்கள் மீண்டு வராத நிலைகளிலேயே அடுத்ததாக பிரபல பாடகியும், இளையராஜாவின் மகளுமான பவதாரிணியின் மரணம் பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
இந்த நிலையில் பவதாரிணி குறித்த நினைவுகளை அவருடைய உறவினர்களும் நண்பர்களும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் பவதாரிணி குறித்து அவருடைய கணவரின் அண்ணன் பேட்டி ஒன்றில் சில தகவல்களை பேசி இருக்கிறார். அதில் பவதாரிணி இளையராஜா வீட்டுக்கு மட்டுமல்லாமல் எங்க வீட்டிலும் செல்ல பொண்ணு தான். அந்த பொண்ணு அதிர்ந்து கூட பேசாது. ரொம்பவே அமைதியாக இருக்கும். நாங்கள் அந்த பொண்ணு கோபப்பட்டு பேசி பார்த்தது கிடையாது.

ரொம்பவே அமைதியான பொண்ணு, என்னுடைய அம்மா மற்றும் குடும்பத்தினரிடமும் அந்த பொண்ணு ரொம்பவும் பாசமாக பேசிக் கொண்டிருக்கும். ஆனால் அவருடைய திருமண நாளில் நடந்த நிகழ்வு மட்டும் எங்களால் மறக்கவே முடியாது. ஏன்னா திருமண மேடையில் பவதாரிணி இருக்கும்போது அவருடைய அப்பாவான இளையராஜாவிடம் எனக்காக "ஜெகம் நீ ஜனனி"என்ற பாடலை பாடுங்கள் என்று பவதாரிணி கேட்டார்.
ஆனால் அதற்கு இளையராஜா பாட மறுத்துவிட்டார். நான் இந்த பாடலை பாடினா, நீ அழுதுடுவேன்னு சொன்னார். ஆனால் பவதாரிணி கேட்காமல் அடம்பிடித்தார். பிறகு இளையராஜா மேடைக்கு வந்தெல்லாம் என்னால் பாட முடியாது என்று சொல்லி கீழே அவர் இருந்த இடத்திலேயே இருந்து மைக்கை வாங்கி "ஜனனி ஜகம் நீ" என்ற பாடலை பாடினார். ஆனால் கடைசியில் அவர் சொன்னது போலவே பவதாரணி அழுதுவிட்டார்.

அப்போது செல்லமாக இளையராஜா கோபித்துக் கொண்டார். இதற்காக தான் நான் உன்னை இந்த சந்தோஷமான நேரத்தில் அழக்கூடாது என்பதற்காக சொன்னேன் என்று அவர் தன்னுடைய மகளை தேற்றிக் கொண்டிருந்தார். அந்த நினைவுகள் எங்களுக்கு இப்போதும் மறக்கவில்லை என்று அவர் கூறியிருக்கிறார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications