ஆயிஷாவின் ரகசியங்களை வெளிப்படுத்திய விஷ்ணு.. கமல் முன்னிலையில் அப்படி பேசுவதற்கு இதுதான் காரணமாம்!!
சென்னை: பிக் பாஸ் சீசன் சிக்ஸ் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் ஆயிஷாவை பற்றி அவருடைய முன்னாள் காதலன் கூறிய தகவல்களுக்கு சின்னத்திரை நடிகர் ஆன விஷ்ணு பதில் கூறியிருக்கிறார்.
நடிகர் விஷ்ணுவுக்கு ஆயிஷாவுக்கும் காதல் அதனால் தான் என்னை பிரிந்து விட்டார் என்று ஆயிஷாவின் முன்னாள் காதலர் கூறிய குற்றச்சாட்டுக்கு விஷ்ணு அளித்த பதில் பலருக்கும் வியப்பை கொடுத்திருக்கிறது.

இது சரி இல்லை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் ஆயிஷா இதற்கு முன்பு ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா சீரியலின் மூலமாக பலருக்கும் பரிட்சயமானவர். இவரை குறித்து தற்போது இவருடைய முன்னாள் காதலன் சமூக வலைதளத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அதைப்பற்றி சீரியல் நடிகரான விஷ்ணு முதல் முறையாக விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் ஒரு பெண் அதுவும் முக்கியமான ரியாலிட்டி ஷோவில் இருக்கும் ஒருவரை பற்றி அவர் இல்லாத நேரத்தில் மீடியாக்களில் பேட்டி கொடுத்து தவறான தகவல்களை பரப்பி வருவது சரியல்ல என்று தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

விளையாட்டை ஆரம்பிக்கவே இல்லை
ஆயிஷா அவருடைய சொந்த வாழ்க்கையில் எடுத்த முடிவுகளுக்கு அவர்தான் பொறுப்பு .ஆனால் அவர் ஒரு பொருளை பிடித்து போய் எடுக்கையில் எடுத்துவிட்டு, பின்பு அது பிடிக்கவில்லை என்று கீழே வைத்து விட்டால் அது அவருடைய தனிப்பட்ட முடிவு அதைக் குறித்து இப்படி சமூக வலைத்தளத்தில் பேசிக் கொண்டிருப்பது தவறான செயல் என்று விஷ்ணு கூறியிருக்கிறார் .அது மட்டுமல்லாமல் ஆயிஷா ஒரு ஷாட் டெம்பர் டக் என்று அவருக்கு கோபம் வந்துவிடும். இன்னும் அவருடைய சரியான விளையாட்டை பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

அப்படி நடந்து இருந்தால் சந்தோஷம்தான்
பிக்பாஸில் கதை சொல்லும் டாஸ்க்கில் கூட அவர் தன்னுடைய கடந்த கால கதையை சொல்வதற்கு மனம் இல்லாமல் தான் விட்டுவிட்டார். ஆனால் அவரைப் பற்றி சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வீடியோ வெளியிட்டு வருவது தேவையில்லாத செயல் என்று எனக்கு தோன்றுகிறது என்றும் கூறியிருக்கிறார். அதுபோல இப்படிப்பட்ட ஒரு நபரிடம் இருந்து என்னால் ஆயிஷா வந்து விட்டார் என்று அந்த நபர் சொல்லி இருப்பது போல நடந்து இருந்தால் சந்தோஷம்தான். இப்படிப்பட்ட ஒரு நபருடன் ஆயிஷா இருந்து வந்து விட்டதே பெருசு தான் என்றும் கூறியிருக்கிறார்.

நடவடிக்கை மாறுமா என்று பார்ப்போம்
கமல் முன்னிலையில் மரியாதை குறைவாக ஆயிஷா பேசிவிட்டார் என்று ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். எனக்கும் பார்க்கும்போது அப்படித்தான் தெரிந்தது. ஆனால் இதுதான் ஆயிஷாவின் குணம் தன்னுடைய மனதில் தோன்றுவதை அப்படியே டக்கென்று பேசிவிடுவார். ஆனால் இது தப்பு என்பதை இந்த வாரம் உணர்ந்து இருப்பார். இந்த வாரம் கமல் முன்பு அவர் காலில் விழவும் தயாராக இருப்பாள். பிக் பாஸ் வீட்டிற்குள் அனைவரும் சேர்ந்து அந்த நேரத்தில் டார்கெட் செய்ததால் அவளுடைய கோபத்தின் வெளிப்பாடு அப்படி இருந்து விட்டது என்று விஷ்ணு கூறியிருக்கிறார். பொறுத்திருந்து பார்த்தால் தெரியும் இந்த வாரம் ஆயிஷா என்ன மாதிரி கமல் முன்னிலையில் நடந்து கொள்கிறார் என்று, என ஒரு சில ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications