பிக் பாஸ் 7: டிக்கெட் டூ பினாலே இறுதி டாஸ்க்.. பூர்ணிமா கேட்ட கேள்வி.. அதிர்ச்சி கொடுத்த பிக்பாஸ்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் டிசம்பர் 29ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இதில் டிக்கெட் டூ பினாலேவில் இறுதி டாஸ்க் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அதில் பூர்ணிமா தன்னுடைய அணியை ஜெயிக்க வைப்பதற்காக விஜய் வர்மாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்ப்போம்.

அந்த வகையில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே இந்த சீசனில் டாஸ்க் பெரிய அளவில் சுவாரஸ்யம் இல்லாமல் இருக்கிறது. இந்த சீசனில் அதிகமான டாஸ்குகளில் பந்தை வைத்து உருட்டுவது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
அதனாலே அதிகமான ரசிகர்கள் இந்த சீசனில் கடினமான டாஸ்க் வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருந்தனர். அதன்படி இப்போது டிக்கெட் டூ பினாலே டாஸ்க் தொடங்கியதும் பெரிய அளவில் ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அதுவும் கடைசியில் புஷ் என்று போயிருந்தது. இரண்டு டாஸ்க்கள் முயல் பெயரை வைத்து தொடங்கப்பட்ட நிலையில் ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது.
இதனால் கடுப்பாக இருந்த ரசிகர்களுக்கு இன்று மூன்றாவது டாஸ்கில் என்டர்டைன்மென்ட் கிடைத்திருக்கிறது. ஏற்கனவே தற்போது வரைக்கும் நடைபெற்ற டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் முதலிடத்தில் விஷ்ணு இருக்கிறார். அவர் 7 புள்ளிகளை பெற்றிருக்கிறார். அவரை தொடர்ந்து நிக்சன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
அதனால் நிக்சன் நேற்று இனி நான் பூர்ணிமாவோடு டான்ஸ் ஆடுவதில் என்னுடைய கவனத்தை செலுத்துவதை விட்டுவிட்டு இனி விளையாட்டில் நான் தீவிரமாக யோசிக்க போகிறேன் என்று சொல்லி இருந்தார். அதன்படி இன்று மூன்றாவது டாஸ்க் அதாவது டிக்கட் டூ பினாலேவின் இறுதி டாஸ்க் நடைபெறுகிறது. அதில் இரண்டு போர்டு வைக்கப்பட்டு இருக்கிறது.
அதில் போட்டியாளர்கள் கையை அந்த போர்டில் வைத்து பிடிக்க வேண்டும். அதிலிருந்து கையை எடுப்பவர்கள் கிவ் அப் செய்வதாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு இறுதிவரை அதில் கையை வைத்து பிடிக்கும் போட்டியாளர்கள் டிக்கெட் 2 பினாலேவிற்கான 5 பாயிண்டுகள் வழங்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.

இதில் விஷ்ணு, தினேஷ், ரவீனா, மணி நான்கு பேரும் ஒரு போர்டில் நிற்கின்றனர். அவர்களைப் போல இன்னொரு போர்டில் நிக்சன், பூர்ணிமா, மாயா, விசித்திரா நான்கு பேரும் ஒரு போர்டில் நிற்கின்றனர். அப்போது பூர்ணிமா விஜய்யிடம் நீங்கள் தான் போர்டில் யாரெல்லாம் இருக்க வேண்டும் என்று அணியாக பிரித்திருக்க வேண்டும்.

ஆனால் நீங்கள் இப்படி செய்யாம விட்டது தப்பு என்று விவாதித்துக் கொண்டிருக்க, போட்டியாளர்களுக்குள் பிரச்சனையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பிக் பாஸ் இப்படி ஒரு டாஸ்கை வைத்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications