லெஸ்பியன் சர்ச்சை.. பிரபல பாடகி சுசித்ரா மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்த மாயாவின் குடும்பத்தினர்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் இருக்கும் மாயா பற்றி பிரபல பாடகியும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரும் ஆன சுசித்ரா சில குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.
அதில் மாயா ஒரு லெஸ்பியன். அவ ஒரு மோசமான பொண்ணு என சுசித்ரா பேசியிருந்தார்.

இந்த நிலையில் சுசித்ரா மீது சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளனர் மாயாவின் குடும்பத்தினர் என்று பாடகி ஸ்வாகா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சி பற்றி அதிகமானார் தங்களுடைய கருத்துக்களை கன்னாபின்னவென தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த சீசனில் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக திட்டு வாங்கிக் கொண்டிருக்கும் ஒரு போட்டியளராக மாயா இருந்து வருகிறார்.
மாயாவை பற்றி பலர் தொடர்ச்சியாக விமர்சித்து வரும் நிலையில் பாடகி சுசித்ரா சமீபத்தில் ஒரு பேட்டியில மாயா பற்றி சில கருத்துக்களை பகிர்ந்து இருந்தார். அதில் மாயா ஒரு லெஸ்பியன் இந்த விஷயம் பிரதீப்க்கு தெரியும் ஆனால் பூர்ணிமாவுக்கு தெரியாது. ஆனால் மாயாவினால் தான் எல்லாருக்கும் பிரச்சனை. மாயா இயக்குனர் கௌதம் மேனனின் உதவி இயக்குனரிடம் தான் உறவில் இருந்தார்.
என்னுடைய முன்னாள் கணவர் கூட மாயாவுக்கு நிறைய உதவி செஞ்சிருக்காரு. மாயா நிறைய கடன் எல்லாம் வாங்கி இருக்கிறார். அவளை பார்த்தாலே எல்லோரும் பயப்படுவாங்க. அதுபோல மாயா பூர்ணிமாவை இப்போ கவர் பண்ண பார்க்கிறாள். மாயா குடிக்கிற தண்ணீரில் பாத்ரூம் போய் கூட கொடுப்பா. அப்படி ரொம்பவும் மோசமான பொண்ணு தான் அவ என அந்த பேட்டியில் சுசித்ரா பேசியிருக்கிறார்.
இந்த நிலையில் மாயாவை பற்றிய இந்த கருத்துக்கு எதிராக மாயாவின் குடும்பத்தினர் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளனர் என்பதை பற்றி பாடகி ஸ்வாகா instagram ஸ்டோரியில் பகிர்ந்து இருக்கிறார். அதில் சுசித்ராவின் சமீபத்திய நேர்காணலில் அவர் மாயா பற்றிய மோசமான அவதூறுகளை முன்வைத்தது கண்டிக்கத்தக்கது.
மாயாவின் செயல்களை தவறாக சித்தரிக்கும் மற்றும் லெஸ்பியன் மக்களின் வாழ்க்கையை சட்டத்திற்கு எதிராக Homophobic ஆக பரப்புரைக்கும் சுசித்ரா மீது மாயாவின் குடும்பத்தார் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளனர். பதில் சொல்லும் நிலையில் இல்லாத ஒரு நபர் மீது மக்கள் இல்லாத அவதூறு கருத்துக்களை வீசுவதை பார்ப்பது பரிதபமாக இருக்கிறது.
தனக்கு வெளி உலகில் நடக்கும் அவமானங்களையும், அநீதிகளை பற்றி எந்த அறிவிப்பு இல்லாத சூழலில் மாயாவுக்காக குரல் கொடுக்கும் ஒவ்வொரு ரசிகர்களுக்கும் ஆதரவு ஆளர்களுக்கும் நன்றி என்று அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications