பூர்ணிமா வெளிய வர போறாங்க.. பரபரப்பு ஏற்படுத்திய தந்தை.. காரணம் இதுதானாம்.. பிரச்சனை கன்ஃபார்ம்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் பூர்ணிமா குறித்து அவருடைய தந்தை பேட்டி ஒன்றில் பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.
பூர்ணிமா மாயாவோடு சேர்ந்து விளையாடி வருவதை குறித்து பலரும் விமர்சித்து வரும் நிலையில் அதற்கு பூர்ணிமாவின் தந்தை மற்றும் குடும்பத்தினர் பதில் கொடுத்து இருக்கின்றனர்
அதோடு பலர் விஷ்ணுவை பூர்ணிமா காதலிக்கிறாரா? என்று கேட்டு வருகிறார்கள். அதற்கு பூர்ணிமா வெளியே வரும்போது தெரியவரும் என்று அவருடைய தந்தை பதிலடி கொடுத்திருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் ரசிகர்களுக்கு பரீட்சயமானவர்களாக இருக்கின்றனர். அதில் ஒருவர் தான் பூர்ணிமா. இவர் ஆராத்தி என்ற youtube சேனல் மூலமாக ரசிகர்களின் மத்தியில் ஏற்கனவே பிரபலமானவர்தான். தன்னுடைய காமெடியான கண்டெண்ட் மூலமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் கவர்ந்திருக்கிறார்.

அதனாலேயே பூர்ணிமா முதல் நாள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமானதுமே இவர்தான் இந்த சீசனில் டைட்டில் வின்னராக இருப்பார் என்றும் பலர் கூறி வந்தனர். காரணம் பூர்ணிமா தைரியமாக பிரதீப் மற்றும் கூல் சுரேஷிடம் பேசிய விதம் பலருடைய பாராட்டைப் பெற்று இருந்தது. அதைத்தொடர்ந்து சில நாட்கள் நன்றாகவே பூர்ணிமாவின் விளையாட்டு போயிருந்த நிலையில் மாயாவோடு பூர்ணிமா சேர்ந்து அடிக்கடி பிக் பாஸ் வீட்டிற்குள் புறணி பேசி ரசிகர்களின் மத்தியில் நெகட்டிவாக மாறத் தொடங்கியிருந்தார்.

பூர்ணிமா மாயா இல்லாமல் தனியாக விளையாடினால் சிறப்பாக இருக்கும் என்றும் பலர் கருத்து கூறி வந்தனர். அதோடு பூர்ணிமா சில வாரங்களுக்கு முன்பு எலிமினேஷனில் இருந்த நேரத்தில் அந்த வாரத்தில் கண்டிப்பாக வெளியேறுவார் என்றும் ரசிகர்கள் உறுதியாக இருந்தனர். ஆனால் அந்த வாரத்தில் எலிமினேஷன் கேன்சல் செய்யப்பட்டது. இது பூர்ணிமாவுக்கு சூப்பர் ஆப்பராக அமைந்து இருந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் சில வாரங்களாக பூர்ணிமாவின் விளையாட்டு மாற்றம் பெறுகிறது என்று பல ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதோடு பூர்ணிமாவின் கேரக்டர் இப்போது ரசிகர்களுக்கு பிடிக்கத் தொடங்கி இருக்கும் நிலையில் பூர்ணிமா மாயாவிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி விஷ்ணு கேங்கோடு சேர்ந்து கொண்டிருக்கிறார். இதனால் விஷ்ணுவை பூர்ணிமா காதலிக்கிறாரா என்ற கேள்விகள் ரசிகர்களின் மத்தியில் எழுந்து வருகிறது.

இந்த நிலையில் பூர்ணிமாவின் பெற்றோர் பேட்டி ஒன்றில் பூர்ணிமாவை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அவர்களிடம் பூர்ணிமாவிற்க்கு ஒரு ஈர்ப்பு இருக்கிறது. அதை நீங்கள் என்ன நினைக்கிறீங்க என்று கேள்வி அதற்கு பூர்ணிமாவின் அப்பா அதை நாம எப்படி சொல்ல முடியும். பூர்ணமா மனதிற்குள் என்ன இருக்கிறது என்பதை பூர்ணிமா சொன்னாதான் நமக்கு தெரிய வரும்.
பூர்ணிமா எப்படியும் இன்னும் கொஞ்ச நாளில் வெளியே வந்து விடுவார். ஏனென்றால் இன்னும் கிட்டத்தட்ட 23 நாட்கள் தான் இருக்கிறது. அதற்குப் பிறகு பூர்ணிமாவே இது பற்றி பேசட்டும். பூர்ணிமா மனசில் உண்மையில் என்ன இருந்தாலும் எங்களுக்கு ஓகே தான் என்றும் அவர் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications