சீரியலில் இருந்து நானாக விலகவில்லை.. நடந்தது இதுதான்.. துரோகம்! பிக் பாஸ் தாமரை ஆதங்கம்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 5 மூலம் தமிழக மக்களுக்கு பரிச்சயமான முகமாக மாறியவர் தாமரைச் செல்வி. மேடை நாடக உலகில் ஏற்கனவே தனக்கென ஒரு இடம் பிடித்திருந்தாலும், அந்த வட்டத்தைத் தாண்டி எல்லா தரப்பு பார்வையாளர்களிடமும் சென்று சேர்ந்தது இந்த நிகழ்ச்சிதான் என்று பலமுறை கூறியுள்ளார். நாடக மேடைகளில் பாடி ஆடி ரசிகர்களை கவர்ந்த அவர், அந்த ஏரியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும் இருந்ததாக சொல்லப்படுகிறது.

பிக் பாஸ் பிரபலம்
பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றபோது, "சில நாட்களில் வெளியே வந்துவிடுவார்" என்று பலரும் நினைத்த நிலையில், 90 நாட்களுக்கும் மேலாக உள்ளே இருந்து தனது இயல்பான பேச்சாலும், தைரியமான கேரக்டராலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அந்த நிகழ்ச்சி அவருக்கு பிரபலத்தையும், புதிய வாழ்க்கை பாதையையும் திறந்தது.
சீரியல் வாய்ப்பு
நிகழ்ச்சி முடிந்த பிறகு மீண்டும் மேடை நாடகத்துக்கே திரும்பிவிடுவாரா என்று பலர் எதிர்பார்த்த நேரத்தில், விஜய் டிவி அவருக்கு சீரியல் வாய்ப்பை கொடுத்தது. தற்போது ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியலில் ஹீரோயினியின் அம்மா கேரக்டரில் நடித்தார். குடும்பம் சார்ந்த காட்சிகளில் இயல்பான நடிப்பால் அந்த கதாபாத்திரத்துக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இவருக்கு பதில் இவர்
ஆனால் சமீபத்தில் அந்த சீரியலில் தாமரைச் செல்விக்கு பதிலாக வேறு நடிகை நடிக்க ஆரம்பித்தது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவர் அளித்த பேட்டிதான் இப்போது பேசப்படுகிறது. அதில், "என்னை அறிமுகம் செய்து சோறு போட்ட நாடகத்தை நான் விட முடியாது. அதே நேரத்தில் பிக் பாஸ் பிறகு சின்னச் சின்ன ஈவென்ட்ஸ், சினிமா வாய்ப்புகள் வந்தது. எல்லாத்தையும் பேலன்ஸ் பண்ணும் போது ஒரே ஒரு நாள் ஷூட்டிங் டேட் கொடுக்க முடியாம போயிடுச்சு. அதுக்காக உடனே சீரியலிலிருந்து என்னை மாற்றிட்டாங்க. வருத்தம்தான்... ஆனா என்ன பண்றது?" என்று வருத்தமாக கூறியுள்ளார்.
மறக்க முடியாத அனுபவம்
இந்த அனுபவம் அவருக்கு ஒரு முக்கியமான முடிவை எடுக்க வைத்திருக்கிறது. இனிமேல் சினிமாவில்தான் கவனம் செலுத்தப் போகிறேன் என்றும், ஒரு படம் ஏற்கனவே முடிந்து ரிலீஸுக்காக காத்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறியுள்ளார். அதுபோல விஜய் டிவியில் மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற நிகழ்ச்சியிலும் அவருடைய கணவரோடு கலந்து கொண்டார். அதற்கு பிறகு விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளில் சின்ன சின்னதாக வந்து கொண்டிருக்கிறார்.
இதே பேட்டியில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளப் போவதாக வந்த தகவல் விளக்கம் கொடுத்திருக்கிறார். நிகழ்ச்சிக்காக அழைத்து, ஷூட்டிங் கடல், மலை போன்ற இடங்களில் இருக்கும், ரொம்ப த்ரில்லாக இருக்கும் என்று சொல்லி பேசினார்கள். நான் எல்லாத்துக்கும் ரெடியா இருக்கேன் என்றேன். "போயிட்டு வாங்க, கூப்பிடுறோம்" என்றார்கள். ஆனால் அதன் பிறகு என்ன நடந்தது என தெரியவில்லை. அடுத்த முறை பார்க்கலாம் என்று சொல்லிவிட்டார்கள். அதனால் அந்த நிகழ்ச்சியிலும் நான் இல்லை என்று பேசியிருக்கிறார்.

தாமரை செல்வி போஸ்ட்
ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் பொதுவாக ஆமை புகுந்த வீடு விளங்காதுன்னு சொல்லுவாங்க, அதே போல என்னுடைய வாழ்க்கையில் ஒரு ஆமை என் கூடவே இருந்து என்னுடைய வாழ்க்கையை அழித்துவிட்டது. அந்த ரெண்டு பேரால் என்னுடைய வாழ்க்கை சிதைந்து போயிருக்கிறது. அதைப்பற்றி நான் விரைவில் உங்களிடம் பேசுகிறேன் என்று பேசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரு மேடை நாடக நடிகையாக ஆரம்பித்து, ரியாலிட்டி ஷோ, சீரியல், சினிமா என பல துறைகளில் தன்னை முயற்சி செய்து பார்க்கும் தாமரைச் செல்வியின் பயணம் எளிதானது அல்ல. வாய்ப்பு வந்தாலும் அதை தக்கவைத்துக் கொள்வது எவ்வளவு கடினம் என்பதையும், அதே நேரத்தில் தன் அடையாளத்தை விட்டுக் கொடுக்க முடியாத நிலையும் இந்த பேட்டியில் வெளிப்படுகிறது.
சீரியலிலிருந்து விலகியிருக்கிறார் என்றாலும், அது அவரின் பயணத்தின் முடிவு அல்ல. "இப்போ சினிமாவே என் கவனம்" என்று அவர் சொல்வதில் ஒரு புதிய நம்பிக்கை தெரிகிறது. மேடை முதல் பிக் பாஸ் வரை வந்த அந்த இயல்பான தாமரைச் செல்வியை, ரசிகர்கள் விரைவில் பெரிய திரையிலும் பார்க்கப் போகிறார்கள் என்பதே தற்போது அவரைச் சுற்றியுள்ள எதிர்பார்ப்பு.
-
Rachitha: இரண்டாவது கல்யாணம்.. அதுவும் இந்த மாதத்தில்! வெளிப்படையாக பேசிய ரட்சிதா மகாலட்சுமி! -
சிறகடிக்க ஆசை: ஹாஸ்பிடலில் அட்மிட்டான அண்ணாமலை.. விஜயா கொடுத்த அதிர்ச்சி! மீனா எடுத்த விபரீத முடிவு -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தால் மனம் மாறும் சரவணன்? கோமதி ரியாக்ஷன்! குட்டையை குழப்பிய அப்பத்தா -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி பற்றி ரோகிணிக்கு தெரிந்த உண்மை.. வீட்டை விட்டு போன மீனா! முத்து எடுத்த முடிவு -
செய்த புண்ணியத்திற்கு கிடைத்த பலன்.. மகள் பிறந்த மகிழ்ச்சியில் ஹரிஷ் கல்யாண்! நெகிழ்ச்சியான பதிவு -
லண்டன் டூ சென்னை.. ரூ. 400 கோடி சொத்து.. சங்கீதாவின் 'சைலண்ட்' சாம்ராஜ்யம்? எக்ஸ்க்ளூசிவ் ரிப்போர்ட்! -
"அப்பா- அம்மா 60வது கல்யாணத்துக்கு போகலை! ஆனா கீர்த்தி கல்யாணத்திற்கு தனி விமானத்தில் போன விஜய்!" -
ரூ.160 லட்சம் கோடி.. உலகப் பொருளாதாரத்தின் 'இதயத் துடிப்பை' நிறுத்திய ஈரான்.. அராம்கோ மீதே அட்டாக்! -
மகளிர் உரிமை தொகை.. இந்த மாதம் வராது.. ஆனால் தேடி வரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Nanjil Sampath: விஜய் அனுபவம் குறைந்தவர்.. குறை உள்ளது.. நாஞ்சில் சம்பத் தடாலடி பேச்சு -
Samson: சொந்த கேப்டன், பயிற்சியாளரால் ஏற்பட்ட அவமானம்.. காத்திருந்து கம்பேக் கொடுத்த சஞ்சு சாம்சன்! -
தொடக்கூடாத கையைத் தொட்டதா ஈரான்? ஜப்பான் செய்த அதே தவறு.. 30 விநாடியில் மாறப்போகும் உலக வரைபடம்! -
சங்கீதா கொடுத்த விவாகரத்து வழக்கு.. விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த மகன் ஜோசன்.. புது பஞ்சாயத்து -
திமுக விஸ்வரூபம் எடுத்துவிட்டது.. அதிமுக தலைவர்களை இணைப்பதன் பின்னணி இதுதான்.. பத்திரிகையாளர் மணி! -
1 ராஜ்ய சபா, 23 தொகுதிகள்.. காங்கிரஸ்க்கு மார்ச் 3 வரை கெடு.. தொகுதி பங்கீடு பேச்சில் நடந்தது என்ன?














Click it and Unblock the Notifications