இரண்டு நாளைக்கு முன்புதான்.. இதை நம்ப முடியவில்லை.. வாணி ஜெயராம் மறைவு பற்றி சித்ராவின் பதிவு
வாணி அம்மாவின் திடீர் மரணம் குறித்து கேள்விப்பட்ட நான் மிகுந்த அதிர்ச்சி மற்றும் அவ நம்பிக்கையுடன் இருக்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அவரிடம் பேசினேன் என்று பாடகி சித்ரா தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார
சென்னை: பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் இன்று மரணம் அடைந்திருக்கிறார் .அவருடைய மறைவுக்கு பிரபலங்கள் பலரும் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
பிரபல பாடகியாக இருந்து வரும் சித்ரா, வாணி ஜெயராம் மறைவு பற்றி தன்னுடைய வருத்தத்தை பகிர்ந்து இருக்கிறார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு பேசிய வாணி ஜெயராம் தற்போது இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தன்னுடைய பீலிங்கை சித்ரா கொட்டியதை தொடர்ந்து ரசிகர்கள் பலர் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள்.

மனதை மயக்கும் குரல்
இனிமையான குரல் மூலம் அதிகமான பாடல்களை பாடி பல்வேறு ரசிகர்களின் மனதை இனிமையாக மாற்றிய வாணி ஜெயராம், 1973 ஆம் ஆண்டு வெளியான தாயும் சேயும் என்ற திரைப்படத்தில் பின்னணி பாடகியாக பிரபலமாகி 19 மொழிகளில் சுமார் 10,000 பாடல்களுக்கு மேல் பாடி இருக்கிறார். தமிழில் மட்டும் சுமார் 1500 பாடல்கள் பாடி உள்ளார். மல்லிகை என் மன்னன் மயங்கும், ஏழு ஸ்வரங்களில் எத்தனை ராகங்கள் என்று இப்போது கேட்டாலும் ரசிகர்களின் மனதை லயிக்க வைக்கும் குரலுக்கு சொந்தக்காரர் இன்று இந்த உலகை விட்டு பிரிந்திருக்கிறார்.

உயரிய விருதுகள்
அது மட்டுமல்லாமல் அபூர்வ ராகங்கள் படத்தில் பாடிய பாடலுக்காக தேசிய விருதையும், தமிழில் LKG திரைப்படத்தில் பாடிய வாணி ஜெயராமுக்கு கடந்த குடியரசு தின விழாவின் போது பத்மபூஷன் விருதும் வழங்கப்பட்டிருந்தது என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.இந்த நிலையில் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் வாணி ஜெயராம் கீழே விழுந்து நெற்றியில் அடிபட்டு உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சித்ராவின் வருத்த பதிவு
காலத்தால் அழியாத பல பாடல்களைப் பாடி எல்லா காலத்து ரசிகர்களையும் தன்னுடைய பாடல்களால் மனம் லயிக்க வைத்த பாடகி வாணி ஜெயராம் மறைவு பற்றி சின்ன குயில் சித்ரா தற்போது பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். வாணி அம்மாவின் திடீர் மரணம் குறித்து கேள்விப்பட்ட நான் மிகுந்த அதிர்ச்சி மற்றும் அவநம்பிக்கையுடன் இருக்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவரிடம் பேசினேன். ஜனவரி 28 அன்று சென்னையில் நடந்த எனது கச்சேரிக்கு அவர் தலைமை விருந்தினராக வந்திருந்தார். ஒரு உண்மையான புராணக்கதை, வலுவான கிளாசிக்கல் அடித்தளத்துடன் கூடிய பல்துறை மற்றும் பழமொழி பாடகர் அவர், ஆன்மா சாந்தியடையட்டும் என்று கூறியிருக்கிறார்.

ஆன்மா சாந்தி அடையட்டும்
பழம்பெரும் பாடகியான வாணி ஜெயராம் மறைவிற்கு இசை உலகை பொருத்தவரை ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என்று நடிகர்கள் மட்டுமில்லாமல் பல்வேறு பிரபலங்களும் தொடர்ந்து மறைவுக்கு வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பாடகி சித்ராவின் வருத்தப்பதிவை ரசிகர்கள் தொடர்ந்து பகிர்ந்து தங்களுடைய ஆறுதல்களை கூறி வருகிறார்கள்.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications