எதிர்நீச்சல் குணசேகரன் இவர்தான் ரகசியத்தை உடைத்த இயக்குனர்.. அதனால்தான் கதையில் இப்படி மாற்றமாம்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்து சில வாரங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக காலமானார்.
தொடர்ந்து அவருடைய கேரக்டரில் இனி யார் நடிப்பார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்து வருகிறது.

இந்த நிலையில் முதல் முறையாக குணசேகரன் கேரக்டர் பற்றி இந்த சீரியலின் இயக்குனர் திருச்செல்வம் மனம் திறந்து பேசி இருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் மூலமாக பட்டி தொட்டி எல்லாம் பிரபலமடைந்த மாரிமுத்து குணசேகரன் கேரக்டரில் நடித்தார் என்று சொல்வதை விடவும் வாழ்ந்து காட்டி இருந்தார். நடிகர் மாரிமுத்து எத்தனையோ திரைப்படங்களில் நடித்தும் இயக்கியும் இருந்தாலும் அதை எல்லாம் விட குணசேகரன் கேரக்டர் பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்து இருந்தது.
ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் சில வாரங்களுக்கு முன்பு எதிர்நீச்சல் சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருக்கும் போது மாரிமுத்துவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட அவர் மருத்துவமனைக்கு சென்றிருந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனில்லாமல் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்திருந்தார். இது பெரும் அதிர்ச்சியாக அனைவருக்கும் இருந்து வருகிறது. இந்த நிலையில் அவர் நடித்து வந்த குணசேகரன் கேரக்டரில் யார் நடிப்பார் என்று எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இந்த நிலையில் இந்த சீரியலின் இயக்குனர் சில தினங்களுக்கு முன்பு நடிகர் மாரிமுத்துவிற்கு தனியார் சேனல் ஒன்றில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் பலரும் மாரிமுத்து பற்றி பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்கள். அந்த வகையில் எதிர்நீச்சல் இயக்குனர் திருச்செல்வம் அந்த நிகழ்ச்சியில் பேசும் போது, குணசேகரன் என்றால் அது மாரிமுத்து சார் ஒருவராக மட்டும் தான் இருக்க முடியும்.
மாரிமுத்து சார் ஆரம்ப காலகட்டத்தில் இயக்குனர் வசந்த் சாரிடம் வேலை பார்க்கும் போது அவர் மாரிமுத்து பெயர் பழசா இருக்கு அதனால உங்க ஊர் பக்கத்தில் பிரபலமாக இருக்கும் சேதுபதி என்ற பெயரை வச்சு கொள்வோம் என்று மாற்றி இருந்தாராம்.ஆனால் அந்தப் பெயர் கொஞ்சம் கூட மாரிமுத்து சாருக்கு பிடிக்கவே இல்லையாம். முதல் திரைப்படத்தில் பெரிய அளவில் அந்த பெயர் பிரபலம் அடையாததால் பிறகும் தன்னுடைய மாரிமுத்து என்ற பெயரில் வைத்துக் கொண்டாராம்.

அப்பா அம்மா தனக்கு வைத்த பெயரை நாம எப்படி மாற்றுவது என்று யோசித்துக் கொண்டிருந்தார். யாராவது அவரை சேதுபதி என்று கூப்பிட்டால் கூட அவருக்கு கோபம் தான் வருமாம். ஆனால் எதிர்நீச்சல் மூலமாக அவரை மாரிமுத்து என்பதை விடவும் ஆதி குணசேகரன் என்று எல்லோருக்கும் பிரபலமடைந்துவிட்டார். அப்போது கூட சார் நான் இப்போ உங்க பெயரை மாற்றி விட்டேன் என்று சொன்னேன்.
அவர் சந்தோஷமாக சிரித்துக் கொண்டிருந்தார். இது நான் மட்டுமல்ல மக்களும் அவருக்கு கொடுத்த அங்கீகாரம் அதனால் அவர் இந்த ஆதி குணசேகரன் பெயரை அவ்வளவு நேசித்தார். அதனால் அந்த பெயர் அவருக்கு மட்டும் தான் சரியாக இருக்கும் என்றுதான் கதையில் சிறு திருத்தங்கள் செய்து கொண்டு போய்க் கொண்டிருக்கிறோம்.
அதே நேரத்தில் ஆதி குணசேகரன் இல்லை என்று ஒரேடியாக முடிக்க முடியாது என்பதால்தான் அவர் வீட்டை விட்டு போய்விட்டார் என்பது போன்று கதையை கொண்டு போய்க் கொண்டிருக்கிறோம். பின்னர் வரும் காலம் கட்டத்தில் கதையில் அவருடைய பெயர் மீண்டும் வரலாம் என்றும் அந்த நிகழ்ச்சியில் இயக்குனர் திருச்செல்வம் பேசி இருக்கிறார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications