ஜீவானந்தம் விஷயத்தில் பின்வாங்கும் ஜனனி.. அதிரடி காட்டும் ஈஸ்வரி.. விறுவிறுப்பான தருணம்
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஜீவானந்தத்தை சந்திக்க வேண்டும் என்று ஈஸ்வரி, ஜனனி மற்றும் நந்தினி மூவரும் முடிவு எடுக்கின்றனர்.
ஆனால் ஜீவானந்தத்தை சந்திக்க ஈஸ்வரி ஐடியா சொல்ல, அதை ஜனனி நான் செய்ய மாட்டேன் என்று சொல்கிறார்.
இந்த நிலையில் ஜூலை 28ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் என்ன நடந்தது என்பதை பற்றி பார்க்கலாம்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்தடுத்த எதிர்பாராத திருப்பங்கள் நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே ஜீவானந்தத்தினுடைய துப்பாக்கி மிரட்டலால் பயந்து போய் இருந்த குணசேகரன் தன்னுடைய சொந்த வீட்டிலும் ஜீவானந்தத்திற்கு பங்கு இருக்கு என்பதை தெரிந்து அதிர்ச்சியாக நெஞ்சுவலி வந்துவிடுகிறது.
இந்த நிலையில் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் இருந்த குணசேகரனுக்கு இப்போது ஒரு கை செயல் இழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். இதை முறையாக பயிற்சி செய்து கொண்டு இருந்தால் ஒருவேளை சரி செய்ய முடியும் இல்லை என்றால் இப்படி தான் அவர் காலம் முழுக்க இருக்க வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் குணசேகரனை பார்க்க வந்த ஈஸ்வரி, நந்தினி மற்றும் ஜனனியை கதிர் பார்க்க விடாமல் துரத்தி அடித்து இருக்கிறார். ஆபத்தான கட்டத்தில் குணசேகரன் இருப்பதை புரிந்து கொண்ட நந்தினி, ஈஸ்வரி, ஜனனி மூவரும் இதற்கு காரணம் ஜீவானந்தம் தான் இருக்கும் சொத்தை நம்ம மீட்டுக் கொண்டு வந்து விட்டால் குணசேகரன் மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடுவார் என்று கூறி, நாம் ஜீவானந்தத்தை சந்திக்க வேண்டும் என்று மூவரும் ஆஸ்பிட்டலை விட்டு கிளம்பி இருந்தனர்.
இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரமோ வெளியாகி இருக்கிறது. அதில் குணசேகரன் எனக்கு ஒரு கை செயலிழந்து விட்டது என்று தெரிந்ததும். டாக்டரிடம் சொல்லி ஊசி போட்டு கொன்னு விட சொல்லுங்க. நான் இனி உயிரோடு இருந்து பிரயோஜனமே இல்ல. ஏற்கனவே என் மானம் மரியாதை எல்லாம் போயிட்டு. இப்போ என்னுடைய கையும் செயலிழந்து போயிட்டு,இனி நான் இருந்து ஒரு பிரயோஜனமும் இல்லை என்று அழுது கொண்டிருக்கிறார்.
குணசேகரனை தம்பிமார்கள் சமாதானப்படுத்திக் கொண்டிருக்க, அதே நேரத்தில் ஜீவானந்தத்தை நாம் சந்திக்க வேண்டும் என்றால் கௌதமிடம் அதற்கு அரேஞ்ச் பண்ண சொல்லி கேட்கலாம் என்று ஈஸ்வரி ஐடியா கொடுக்க, நான் கௌதமிடம் பேசமாட்டேன் அக்கா என்று ஜனனி கோபத்தோடு பேசுகிறார். அதற்கு ஈஸ்வரி நான் பேசுறேன் என்று சொல்ல, ஜனனி அதிர்ச்சி ஆகிறார். இப்படியாக பிரமோ முடிவடைந்து இருக்கிறது. இந்த நிலையில் இந்த எபிசோட்டில் ஜீவானந்தத்தை ஈஸ்வரி, ஜனனி, நந்தினி மூவரும் சந்திப்பார்களா? அப்படியே சந்தித்தால் என்ன மாதிரி பிரச்சனை நடக்கும் என்று எதிர்பார்ப்பாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications