ஆதிரை விஷயத்தில் ஆப்பு வைத்த குணசேகரன்.. கரிகாலன் வைத்த ட்விஸ்ட்.. பரபரப்பான தருணம்
சென்னை: ஆதிரைக்காக எஸ்கேஆர் குடும்பத்திடம் கெஞ்சிய விசாலாட்சியை குணசேகரன் திட்டுகிறார்.
ஆதிரை வாழ்க்கைக்கு நான் அஸ்திவாரம் போட்டு விட்டேன் என்று குணசேகரன் கூறுகிறார்.

இனி நீ நினைத்தது நடக்காது என்று ஆதிரை குணசேகரனுக்கு பதிலடி கொடுக்கிறார்.
எதிர்நீச்சல் சீரியலில் மே ஐந்தாம் தேதிக்கான எபிசோட்டில் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. எஸ்கேஆர் வீட்டிற்கு விசாலாட்சி வந்து சாருலதாவின் காலில் விழுந்து கெஞ்சுவதை குறித்து குணசேகரன் விசாலாட்சி மற்றும் ஆதிரையை திட்டுகிறார்,
எதற்காக இங்கே வந்தாய் என்று குணசேகரன் விசாலாட்சி இடம் கேட்க என் புள்ள வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் நான் இங்கே வந்தேன் என்று விசாலாட்சி சொல்ல, உன் புள்ள வாழ்க்கைக்கு நான் அஸ்திவாரம் போட்டுட்டேன் அம்மா என்று குணசேகரன் சொல்ல, அதற்கு நீ நினைப்பது இனி நடக்காது என்று ஆதிரை பதிலடி கொடுக்கிறார்.
ஆதிரை சொன்ன வார்த்தையை கேட்டு குணசேகரனும் கதிரும் அதிர்ச்சியாகி நிற்க ஜனனி எஸ் கே ஆர் வீட்டிற்கு வேக வேகமாக வருகிறார். அதைத்தொடர்ந்து குணசேகரன் வீட்டில் திருமண பத்திரிகையை மீனாட்சி அம்மன் புகைப்படத்தில் முன்பு வைத்து குணசேகரன் கதிர் கரிகாலன், கரிகாலனின் அப்பா நான்கு பேரும் கும்பிடுகின்றனர்.

அப்போது நந்தினி, இது யாரு கல்யாண பத்திரிக்கை என்று கேட்க அதற்கு மணமகன் கரிகாலன் மணமகள் ஆதிரை செல்வி என்று கரிகாலன் கூறுகிறார். அதற்கு ஆதிரைக்கு தான் பிடிக்கலையே என்று ரேணுகா கேட்கிறார். புடிக்கலன்னு யாரு சொன்னா? என்று குணசேகரன் புது குண்டை தூக்கி போடுகிறார். தற்போது இந்த பிரமோ வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications