ஈஸ்வரியை தொடர்ந்து மாட்டிய ரேணுகா.. பட்டம்மாள் சாவு பற்றி பேசிய கதிர்.. அடித்து துரத்திய ஞானம்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் செப்டம்பர் 29ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் குணசேகரனை நினைத்து விசாலாட்சி அழுது கொண்டு இருக்க பட்டமாளை பற்றி கதிர் உளறி விடுகிறார்.

அதே நேரத்தில் ரேணுகா, ஞானத்திடம் மாட்டி விடுகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் கதை வேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறது. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று எதிர்பார்க்க முடியாத வகையில் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் அடுத்த குணசேகரன் யார் அவர் வருவாரா? இல்லையா? என்பது போன்ற கேள்விகள் ரசிகர்களின் மத்தியில் அதிகமாக இருக்கிறது.
குணசேகரன் வீட்டை விட்டு வெளியே போன பிறகு வீட்டில் கதிர், ஞானம், விசாலாட்சி மூன்று பேரும் மொத்தமாக மாறி இருக்கின்றனர். கதிர் குணசேகரனின் கேரக்டரில் பல மடங்காக பிரதிபலித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே நந்தினி கேட்டரிங் சர்வீஸ் செய்து கொண்டிருப்பது வீட்டிற்கு தெரிய வந்திருந்தது.

அது போன்று நேற்றைய எபிசோடில் ஈஸ்வரி காலேஜ் வேலை பார்ப்பதும் தெரிய வந்திருந்த நிலையில், வீட்டு மருமகள்களை விசாலாட்சி கடுமையான வார்த்தைகளில் திட்டிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் குணசேகரன் இருக்கும் இடத்தை பற்றி ஜீவானந்தம் தனக்கு தெரிந்த விஷயங்களை சொல்லி இருக்கிறார். இந்த நிலையில் தற்போது இன்றைய எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் விசாலாட்சி "குணசேகரனை பார்க்காமலே கண்ணை மூடிருவேன்னு பயமா இருக்குடா" என்று சொல்ல, அதற்கு கதிர் "பெரிய தல நீ எல்லாம் கிடையாது. அந்த பட்டம்மாள் தான் மண்டைய போட போகுறா" என்று கெத்தாக சொல்கிறார். அதைத் தொடர்ந்து ரேணுகா தலைமுடியை பிடித்து மாடியில் இருந்து ஞானம் தரதரவென்று கீழே இழுத்துக் கொண்டு வந்து அப்படியே ஓடிவிடு என்று விரட்டுகிறார். அதற்கு ரேணுகா சத்தியமா இதுக்கெல்லாம் நீ அனுபவிப்படா என்று கதறி அழுகிறார்.

அதைத்தொடர்ந்து ஜான்சி ராணி அண்ணன் மட்டும் வீட்டுக்கு வந்து மறு தாலிய கட்ட வைக்கட்டும். அதுக்கு பிறகு நடக்கிறதை பாரு என்று சொல்ல, அதற்கு கரிகாலன் "அவா தான் நம்ம வழிக்கு வர மாட்டுக்காலே" என்று சொல்கிறார். அதற்கு ஜான்சி ராணி, "அப்புறம் பாத்துக்கலாம் டா அத" என்று சொல்லிக் கொண்டிருக்க இதையெல்லாம் கேட்டு ஜனனி அதிர்ச்சி அடைந்து நிற்கிறார். இந்த நிலையில் இன்றைய எபிசொட்டில் என்ன பிரச்சனை வெடிக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் இருக்கிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications