Vijayakanth: விஜயகாந்துக்கு நடிகையுடன் திருமண ஏற்பாடு, நின்று போன காரணம் இதுதான்! தயாரிப்பாளர் விளக்கம்
சென்னை: தமிழ் சினிமாவின் கேப்டன் என்றும், லட்சிய புரட்சிக் கலைஞர் என்றும் அழைக்கப்படும் நடிகர் விஜயகாந்த், கடந்த 2023 ஆம் ஆண்டு உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவர் மறைவைத் தொடர்ந்து, அவருடைய சினிமா, அரசியல், தனிப்பட்ட வாழ்க்கை குறித்த பல தகவல்கள் வெளிவந்து ரசிகர்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளன. இந்நிலையில், பிரபல தயாரிப்பாளர் டி.சிவா அளித்த ஒரு பேட்டியில், விஜயகாந்த் திருமணம் செய்ய இருந்த சூழல் குறித்து பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழ் சினிமாவின் தைரியம்
விஜயகாந்த் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, கடைசி வரை தனக்கெனத் தனி இடத்தை வைத்திருந்தார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு சவாலாக நின்றதுடன், கிராமப் புறங்களில் அவர்களைவிடவும் அதிக ரசிகர்களைக் கொண்டிருந்தார். நடிகராக மட்டுமின்றி, நடிகர் சங்கத் தலைவராகவும் பொறுப்பு வகித்து, பல சிக்கல்களைத் தீர்த்து வைத்தவர்.
தமிழ்ச் சினிமா நடிகர் நடிகைகளுக்கு வாரி வழங்கியவர் என்றும், பலருக்கும் உதவி செய்தவர் என்றும் இன்றுவரை அவர் போற்றப்படுகிறார். தமிழக மக்களுக்கும் பல உதவிகள் செய்து தான் ஒரு மக்கள் தலைவன் என்பதை நிரூபித்தவர்.
நண்பருக்காக மறுத்த திருமணம்
தயாரிப்பாளர் டி.சிவா அளித்த பேட்டி ஒன்றில், விஜயகாந்தின் வாழ்க்கை குறித்து ஒரு உணர்ச்சிப்பூர்வமான தகவலைப் பகிர்ந்துள்ளார்: "விஜயகாந்த்துக்கு திருமண செய்ய முடிவெடுத்த சமயத்தில் பெரிய பெரிய தொழிலதிபர்கள், பெரிய ஆட்கள் எல்லாம் தங்கள் பெண்ணைக் கட்டிக் கொடுக்கத் தயாராக இருந்தார்கள். அதுமட்டுமின்றி என்ன வேண்டுமானாலும் செய்ய ரெடி என்றும் சொன்னார்கள்" என்று கூறியுள்ளார்.
ராவுத்தர் அட்வைஸ்
"அப்போது ஒரு நடிகையுடன் அவருக்கு திருமணம் நடக்கவிருந்தது. ஆனால் விஜயகாந்த்தின் நெருங்கிய நண்பரான ராவுத்தர் அந்த திருமணத்தை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்" என்ற ரகசியத்தைத் தெரிவித்துள்ளார். தனது நண்பர் ராவுத்தர் சொன்னதை அடுத்து, விஜயகாந்த், 'எனக்கு உன்னைவிட யாரும் நல்லது யோசிக்கமாட்டார்கள்' எனச் சொல்லிவிட்டு; அந்தத் திருமணத்தை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்" என்று டி.சிவா பகிர்ந்துகொண்டார். நண்பர் மீதான விஜயகாந்தின் அளவுகடந்த பாசத்தை இது காட்டுகிறது.
உடல்நல குறைவு
விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து முதல் தேர்தலிலேயே தனக்கு இருக்கும் வாக்கு வங்கியை நிரூபித்தார். ஆனாலும், ஜெயலலிதாவை பகைத்துக் கொண்டதும், கூட இருந்த எம்.எல்.ஏ.க்கள் விலகியதும் அவருடைய அரசியல் வாழ்க்கைக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
அந்த நேரத்தில் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த், கடந்த வருடம் உயிரிழந்தார். தற்போது அவருடைய மகன் சண்முக பாண்டியன் திரைத்துறையில் தனது தந்தை போன்றே வளர வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது.
தமிழ் சினிமாவிற்கு அவரும், அவருடைய குடும்பமும் ஆற்றிய பங்களிப்பு எப்போதும் மறக்கப்படாது. விஜயகாந்தின் இந்த தியாகம், அவருடைய பெருந்தன்மையையும், நண்பர்கள் மீதான அன்பையும் நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications