21 வயசுல என் வாழ்க்கையே முடிஞ்சிடுச்சி.. என் புருஷன் முகத்தை கூட பார்க்க விடல! ராகுல் மனைவி கதறல்
சென்னை: இன்ஸ்டாகிராம் பிரபலமான ராகுல் டிக்கி நேற்று முன்தினம் சாலை விபத்தில் காலமானார். அவருடைய மனைவி தற்போது செய்தியாளர்களை சந்தித்து தன்னுடைய கணவர் குடும்பத்தினர் மீது பல குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார். என்னுடைய புருஷன் முகத்தை கூட கடைசியா என்னை பார்க்க விடல, போன் பண்ணி மிரட்டுறாங்க என்று கூறியிருக்கிறார்.
சமூக வலைத்தளங்கள் மூலமாக பலர் தங்களுடைய திறமையை வெளி உலகத்திற்கு காட்டி பிரபலமாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் இன்ஸ்டாகிராம் யூடியூப் மூலமாக பிரபலமானவர்தான் ராகுல் டிக்கி. இவர் பெண்களைப் போல மேனரிசம் காட்டி பல வீடியோக்களை போட்டு இருக்கிறார்.

அதுபோல தற்போது ட்ரெண்டிங்கில் என்ன விஷயம் போய்க் கொண்டிருக்கிறதோ அது சம்பந்தமாக வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். ஆனால் நேற்று முன்தினம் யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர் பைக்கில் போகும்போது சாலையில் சென்டர் மீடியனில் மோதி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.
இந்த செய்தி நேற்று காலை வெளியானதை தொடர்ந்து அவருடைய பாலோவர்ஸ் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் அவருடைய மனைவி இன்று செய்தியாளர்களை சந்தித்து பல தகவல்களை தெரிவித்து இருக்கிறார். அதில் தனக்கு ராகுல் டிக்கியோடு இன்ஸ்டாகிராம் மூலமாகத்தான் பழக்கமானார்.
அதற்கு பிறகு காதலித்து திருமணம் செய்து கொண்டு திருமணம் முடிந்து ஒன்றரை வருடங்கள் ஆகிறது. ராகுலுக்கு 27 வயது, எனக்கு 21 வயது. ராகுலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஆறு மாதத்தில் விவாகரத்து ஆகிவிட்டது. அந்த விஷயம் எனக்கு ஆரம்பத்தில் தெரியாது. திருமணத்திற்கு பிறகு தான் தெரிய வந்தது.
ஆரம்பத்தில் என் கணவர் நன்றாக தான் இருந்தார். ஆனால் அவர் வேலைக்கு போயிட்டு வந்து உடம்பு வலியா இருக்கு என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு குடிக்க போறேன் என்று சொல்லும் போது அவருடைய அம்மா அதை தடுக்கவில்லை. அதனால் அவர் குடி பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார்.
ஒரு கட்டத்தில் அதனால் வீட்டில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட தொடங்கிவிட்டது. அப்போது நீங்கள் தனியாக இருந்தால்தான் குடும்பத்தை புரிந்து கொள்ள முடியும் என்று என்னுடைய மாமியார் எங்களை தனியாக போக சொன்னார். நாங்களும் கோவிலில் குறி கேட்டு விட்டு தனியாக வந்தோம். அதற்குப் பிறகு எங்களுக்குள் சின்ன சின்ன பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கிறது.
நான் சம்பவம் நடந்த அன்று என்னுடைய அம்மா வீட்டில் இருந்தேன். அவர் இரவு அங்கு வந்திருக்கிறார். அதற்கு முன்பு அவருக்கு ஆக்சிடென்ட் ஆகிவிட்டது. கடைசியாக அவரை நான் கோவிலில் வைத்து தான் பார்த்தேன். அடுத்த நாள் அவர் மாலை போடுகிறேன் என்று சொன்னார். நானும் அதற்கு சரி என்று சொல்லி இருந்தேன்.
இன்று ஒரு நாள் மட்டும் எங்க அம்மா வீட்டில் இருந்துவிட்டு வரேன் என்று தான் நான் அம்மா வீட்டுக்கு போயிருந்தேன். ஒன்றரை வருடம் அவரோடு நான் வாழ்ந்து இருக்கிறேன் அவர் குடித்துவிட்டு சில நேரங்களில் புலம்பி கொண்டு இருப்பார். அவருக்கு நடிக்க வேண்டும், படத்தில் வர வேண்டும் என்று ரொம்ப ஆசை இருந்தது.
எனக்கு மட்டும் எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லையே.. எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆகிறது என்று புலம்பி கொண்டு இருப்பார். மத்தபடி என்னை நன்றாகத் தான் பார்த்துக் கொண்டார். ஆனால் இப்போது அவர் இறந்து போனதும் அவருடைய குடும்பத்தினர் எல்லோரும் என் மீது தான் தப்பு என்று பேசுகிறார்கள். எல்லோருமே என்னை ஒதுக்கி வைத்து விட்டார்கள்.
என் புருஷன் முகத்தை கூட கடைசியா என்னை பார்க்க விடல. என்னுடைய மாமனார் ஹிந்து, என்னுடைய மாமியார் முஸ்லிம். அதனால் என்னுடைய கணவர் இறந்ததும் உடலை மசூதிக்கு எடுத்துட்டு போயிட்டாங்க. அங்க உள்ள முறைப்படி யாரும் அழக்கூடாது, தொட்டு கூட கும்பிடக்கூடாது. நான் ஒன்றரை வருஷம் காதலிச்சு வாழ்ந்துட்டு எப்படி தொட்டு கும்பிடாமல் இருக்க முடியும்?
ஆனால் என்னை ஒதுக்கி வச்சு அடக்கம் பண்ணிட்டாங்க. இப்போ போன் பண்ணி என்னுடைய பையன் அவார்டு எல்லாம் வேணும், பைக் வேணும் என்று என்னை மிரட்டுறாங்க. ஒரே பையனே போயிட்டான் இனி நாங்க உன்ன பாத்துக்கிறோம் என்று சொன்னால் எனக்கு ஆறுதலாக இருக்கும். ஆனால் ஏன் இவங்க இப்படி பண்ணுறாங்க என்று ராகுல் டிக்கியின் மனைவி தேவிகா கதறி அழுதிருக்கிறார்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications