பீச்சில் உட்கார்ந்து.. நவரசத்தைக் கொட்டிய லாஸ்லியா.. விடாமல் ரசிக்கும் ரசிகர்கள்!
சென்னை : மாடர்ன் உடையில் கடல் அலைக்கும் மோகத்தைக் கூட்டும் வகையில் கலக்கலாக வெளியாகியுள்ள லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் தான் இன்ஸ்டாகிராமில் செம வைரல்.
புசுபுசுவென இருந்த லாஸ்லியா இப்போ இப்படி மாறி விட்டாரே என்று ஏங்கவா அல்லது இதுவே அழகு தான் என உருகவா என தெரியாமல் ரசிகர்கள் தவிக்கின்றனர். அந்த அளவுக்கு சிக்கென்று மாறி நிற்கிறார் லாஸ்லியா.
இது என்ன ஒடம்பா! ! வெடக்கோழி குழம்பா!! என ஜொள்ளு வடிக்கும் ரசிகர்களின் கூட்மும் ஒரு பக்கம் முட்டி மோதி அலை பாய்ந்து கொண்டுள்ளது.

அந்தக் கண்களும் கவிதை சொல்லுதே
கடற்கரையில் கன்னாபின்னாவென போட்டோக்களை எடுத்திருக்கும் லாஸ்லியாவுக்கு கண்டமேனிக்கு வர்ணிக்கும் ரசிகர்களின் அலும்பு தாங்கல. இந்த மாதிரி எல்லாம் கேள்வி கேட்டா அது எப்படி வரும் என்பது போலத்தான் இப்போ லாஸ்லியாவின் ரசிகர்கள் லாஸ்லியாவிடம் கேள்வி கேட்கின்றனர். குண்டக்க மண்டக்க கேள்வி கேட்டால் அவர் கண்டு கொள்ளாமல் போய்க் கொண்டே இருக்கிறார். அதுவும் சிலருக்கு வருத்தத்தை கொடுத்தாலும், பதில் வந்தாலும் சரி வரவே இல்லை என்றாலும் சரி நாங்கள் சொல்லுவதை சொல்லிக்கொண்டே இருக்கிறோம் என்று கமெண்ட்ஸ்களை புயல் வேகத்தில் அனுப்பி வருகின்றனர்.

ஏங்க வைக்கும் முதுகு
அப்போ செய்திவாசிப்பாளர் இப்போ நடிகை என கலக்கிக் கொண்டிருக்கும் லாஸ்லியாவுக்கு மாடலிங் போட்டோ சூட்களும் வந்து குவிந்து வருகிறது. என்னதான் இவர் சினிமாக்களில் ஹீரோயினியாக மாறிவிட்டாலும், மாடலிங் வந்து கதவைத் தட்டும் போது இவர் அந்த வாய்ப்பை விட்டு விடுவதாக இல்லை. எங்க எப்படி வரவேண்டும் என்று மட்டும் சொல்லுங்கள் என டைரக்டர் சொல்லுவதை அவர்கள் நினைத்ததற்கு மேலாக தன்னுடைய நடிப்பை காட்டி பட்டையை கிளப்பி வருகிறார். அதனால் தான் இவருடைய திரைப்படங்கள் எப்போது வரும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். ரசிகர்களிடம் தன்னுடைய மதிப்பு குறைந்து விடக்கூடாது என்பதற்காக அடிக்கடி போட்டோ ஷூட் போட்டோஸ்களை போட்டு நெருப்பு மூட்டி வருகின்றார்.

ஏக்கம் கூட்டும் அழகு
இன்ஸ்டாகிராமில் எத்தனையோ நடிகைகள் விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி கொண்டிருந்தாலும் இப்போ கடற்கரையில் லாஸ்லியா போட்ட போஸ்டுக்கு ஈடு இணை ஏது என்று லாஸ்லியாவின் ரசிகர்கள் காதல் மழைகளை பொழிகின்றனர். கடலில் மழை பொழிந்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பது பலருக்கு தெரியாது போல. அதனால் தான் இவருக்கு காதல் புரோபோசல்களை கமெண்ட்ஸ் களில் அனுப்பி வருகின்றனர். என்ன தான் உருகி உருகி கமெண்ட் போட்டாலும் அங்கு இருந்து ஒரு லைக் கூட வரவில்லை என்று சிலர் ஃபீல் பண்ணினாலும் தங்களுடைய கடமையை தவறாமல் செய்து முடிக்க வேண்டுமென பொறுப்பாய் கமெண்ட்ஸ்களை அனுப்பி வருகின்றனர் .

அப்படி எல்லாம் பார்க்காதீங்க
யாரும் எதிர்பார்க்காத வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு பெரிய ஜாக்பாட் அடித்துக் கொண்டிருக்கிறது. அதனால் தான் இவர் கால் வைக்கும் இடமெல்லாம் வெற்றி ஆக இருக்கின்றது. தற்போது இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் மாடலிங் போட்டோசூட்டிலும் பிஸியாக இருக்கின்றார். அந்த மாதிரி கடற்கரையில் இவர் எடுத்த போட்டோக்களை பார்த்து கவிதை பேசும் ரசிகர்கள் சீக்கிரமாக திரைப்பட அப்டேட் அனுப்புங்கள் என்று கேட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் அவருடைய ஒவ்வொரு போட்டோவையும் விதவிதமாக ரசித்து கமெண்ட்ஸ்களை கொட்டுகின்றனர். அதுவும் கண்ணில் ஏக்கத்தோடு கடற்கரையில் அமர்ந்திருக்கும் முதல் போட்டோ தான் பலருக்கும் ஏக்கம் ஊட்டுகிறதாம். இப்படி எல்லாம் பார்க்காதீங்க என சிலர் செல்லமாக வெட்கப்படவும் தவறவில்லை.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications