சீரியல் மூலம் எனக்கு வாழ்க்கை கொடுத்தவர், இன்று இறைவனிடம் போயிட்டாரு! கண்ணீருடன் எம்எஸ் பாஸ்கர் உருக்கம்
சென்னை: தமிழ் சின்னத்திரையில், நகைச்சுவைக்கு புதிய இலக்கணம் வகுத்த 'சின்ன பாப்பா பெரிய பாப்பா' தொடரை இயக்கிய பிரபல இயக்குநர் எஸ்.என். சக்திவேல் அவர்கள், உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை 2 மணியளவில் காலமானார். அவரது திடீர் மறைவு, அவருடன் பணியாற்றிய கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா மற்றும் சின்னத்திரை பயணம்
எஸ்.என். சக்திவேல், இயக்குநர் பணியை வெள்ளித்திரையில் தொடங்கினார். 2015-ம் ஆண்டு, நடிகர் தீபக், மொட்ட ராஜேந்திரன், மற்றும் எம்.எஸ். பாஸ்கர் ஆகியோர் நடிப்பில், 'இவனுக்கு தண்ணில கண்டம்' என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். பின்னர், 2018-ல் 'காதல் எனக்கு ரொம்ப பிடிக்கும்' என்ற படத்தையும் இயக்கினார்.
இருப்பினும், இவரது தனித்துவமான இயக்கம், சின்னத்திரையில் தான் முழுமையாக வெளிப்பட்டது. சன் டிவியில் ஒளிபரப்பான 'சின்ன பாப்பா பெரிய பாப்பா' சீரியலின் வெற்றிக்கு இவரது நகைச்சுவை உணர்வு ஒரு முக்கியக் காரணம். இத்தொடர், குடும்பங்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. கடைசியாக, விகடன் குழுமத்திற்காக, ஜீ தமிழில் 'பட்ஜெட் குடும்பம்' என்ற தொடரையும் இயக்கியிருந்தார்.
எம்.எஸ். பாஸ்கரின் உருக்கமான பதிவு
எஸ்.என். சக்திவேலின் மறைவுச் செய்தி கேட்டு, அவருடன் நெருங்கிப் பழகிய பிரபலங்கள் வேதனையில் ஆழ்ந்தனர். குறிப்பாக, 'சின்ன பாப்பா பெரிய பாப்பா' சீரியலில் 'பட்டாபி' என்ற கதாபாத்திரத்தில் நடித்து, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகர் எம்.எஸ். பாஸ்கர், ஒரு வீடியோவை வெளியிட்டு தனது வருத்தத்தைப் பதிவு செய்தார்.
வாழ்க்கை கொடுத்தவர்
"எஸ்.என். சக்திவேல் எனக்கு வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய நண்பன் மற்றும் நலம் விரும்பி. அவர் இயக்கிய 'சின்ன பாப்பா பெரிய பாப்பா' தொடரில், 'பட்டாபி' என்ற கதாபாத்திரம் மூலமாகத்தான் தமிழக மக்களிடையே எனக்குப் பெரிய பெயர் கிடைத்தது. இன்று இந்தளவுக்கு நான் வளர்ச்சி அடைந்திருக்கிறேன் என்றால், அதற்கு சக்திவேல் அண்ணா ஒரு முக்கியக் காரணம்" என்று உணர்ச்சிபூர்வமாகப் பேசினார்.
போராட்டமான வாழ்க்கை
"நல்ல மனிதர் அவர். அவர் வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாக இருந்தது. அந்தப் போராட்டத்தோடே இன்று அதிகாலை 2 மணிக்கு இறைவனிடம் சென்றுவிட்டார்" என்று எம்.எஸ். பாஸ்கர் கண்ணீர் மல்கக் கூறினார். அவரது இந்த உருக்கமான வார்த்தைகள், சக்திவேலின் வாழ்க்கையில் இருந்த கடினமான தருணங்களை எடுத்துரைப்பதாக இருந்தது.
எம்.எஸ். பாஸ்கர், ஒரு டப்பிங் கலைஞராக, பின்னர் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகராக, தனது கடின உழைப்பால் முன்னேறியவர். அவரது பயணத்தில் சக்திவேல் ஒரு முக்கியப் பங்கு வகித்திருக்கிறார் என்பது, பாஸ்கரின் கண்ணீர் அஞ்சலியின் மூலம் தெரியவந்துள்ளது.
சக்திவேல் அவர்களின் மறைவு, அவர் விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்ப முடியாத ஒரு இழப்பாகவே பார்க்கப்படுகிறது. அவர் அளித்த நகைச்சுவையும், எதார்த்தமான கதைகளும் என்றும் நம் நினைவில் இருக்கும்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications