சீரியலை போலவே நிஜத்திலும் மாமியார், மருமகள்.. “மெட்டி ஒலி” நடிகைக்கு மருமகளாகும் விஜய் டிவி கதாநாயகி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சக்திவேல் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சந்தியா அந்த சீரியலில் அவருக்கு மாமியாராக நடிக்கும் சீரியல் "நடிகை சாந்தி"யின் மகனை திருமணம் செய்ய இருக்கிறார் இவர்களுடைய என்கேஜ்மென்ட் சமீபத்தில் முடிவடைந்திருக்கும் நிலையில் திருமணம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறதாம்.
விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ் என்று பல சேனல்களில் தொடர்ச்சியாக சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சந்தியாவிற்கு திருமணம் நடைபெற இருப்பதாக நேற்று அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். தன்னுடைய வருங்கால கணவரோடு என்கேஜ்மென்ட் முடிவடைந்திருக்கும் புகைப்படங்களை அவர் பகிர்ந்து இருந்த நிலையில் அது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த நடிகை சந்தியா ஆரம்பத்தில் ஆதித்யா டிவியில் காலேஜ் டாட் காம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதற்கு பிறகு சன் டிவியில் கண்மணி, விஜய் டிவியில் சுந்தரி நீயும் சுந்தரன் நானும், நம்ம வீட்டு பொண்ணு போன்ற சீரியல்களில் நடித்து வந்து நிலையில் இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சக்திவேல் என்ற சீரியலிலும் கதாநாயகனின் அண்ணன் மனைவியாக நடித்துக் கொண்டு இருக்கிறார்.
இந்த நிலையில் தான் சந்தியா தனக்கு முரளி கிருஷ்ணா என்பவரோடு என்கேஜ்மென்ட் முடிவெடுத்து இருப்பதாக கூறி இருக்கும் நிலையில் இவர்களுடைய திருமணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது இருவரும் தங்களுடைய எங்கேஜ்மென்ட் புகைப்படத்தை பகிர்ந்ததும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

அதே நேரத்தில் சந்தியா திருமணம் செய்ய போகும் முரளி கிருஷ்ணா மெட்டிஒலி சீரியலில் நடித்த நடிகை சாந்தியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல சாந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பெரிய அளவில் பிரபலமடைந்திருந்தார். ஆனால் ஆரம்பத்திலேயே இவர் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு இருந்தார்.
ஆனாலும் அடுத்தடுத்து சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் சாந்தி இப்போது சக்திவேல் சீரியலில் நடிகை சந்தியாவுக்கு மாமியாராக நடித்துக் கொண்டிருக்கிறார். சீரியலில் பெண்களை அடிமைப்படுத்தும் மாமியாராக நடித்துக் கொண்டிருக்கும் சாந்திக்கு பாவப்பட்ட அமைதியும் சுலபமான மருமகளாகத்தான் சந்தியா நடித்துக் கொண்டிருக்கிறார்.
இருவரும் சீரியலில் மாமியார் மருமகளாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்போது நிஜ வாழ்க்கையிலும் மாமியார் மருமகளாக மாறப் போகிறார்கள். பல நடிகர், நடிகைகள் கணவன் மனைவியாக நடித்து பிறகு காதலித்து திருமணம் செய்து கணவன் மனைவியாக மாறி இருக்கிறார்கள். ஆனால் இங்கே மாமியாரும் மருமகளுமாக நடித்து இப்போது நிஜமாக மாமியார் மருமகளாக இவர்கள் இருவரும் மாறப்போவது ஆச்சரியமாக இருக்கிறது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications