22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம்
சென்னை: தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் ஹீரோ, ஹீரோயினாக மட்டும் இல்லாமல், மிகச் சிறிய கதாபாத்திரங்களிலேயே ரசிகர்களின் மனதில் நிரந்தர இடம் பிடித்துவிடுவார்கள். அப்படிப்பட்ட முகங்களில் ஒருவர் தான் நடிகை பூவிதா. மைனா படத்தில் நடிகை அமலா பாலின் அம்மாவாக நடித்த அந்த முகம், பலருக்கும் இன்றும் மறக்க முடியாத ஒன்று. ஆனால் அந்த கதாபாத்திரத்தின் பின்னால் இவ்வளவு சுவாரஸ்யமான வாழ்க்கை இருக்கிறது என்று பலருக்கும் தெரியாது.

சினிமாவுக்கு வந்ததே திடீர் வாய்ப்பு
பூவிதா சினிமாவுக்கு திட்டமிட்டு வந்தவர் அல்ல. ஆரம்பத்தில் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த அவருக்கு திடீரென சுப்பிரமணியபுரம் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் நடிக்க வந்த ஒருவர் பயந்து சரியாக நடிக்க முடியாத சூழலில், அவசரமாக பூவிதாவை அழைத்துச் சென்றதாக அவர் கூறியிருக்கிறார்.
அங்கு போன பிறகுதான் அது சாதாரண நிகழ்ச்சி இல்லை, சினிமா ஷூட்டிங் என்று தெரிந்ததாம். கையில் டயலாக் கொடுத்ததும் முதல் முதலில் பதட்டம் இருந்தாலும், மேடைகளில் பேசிய அனுபவம் உதவியதால் தைரியமாக நடித்துவிட்டாராம். அந்த ஒரு வாய்ப்பே அவரது வாழ்க்கையை மாற்றியிருக்கிறது.
மாயாண்டி குடும்பத்தார் கொடுத்த திருப்புமுனை
சுப்பிரமணியபுரம் படத்தில் அவரது நடிப்பைப் பார்த்தவர்கள், மாயாண்டி குடும்பத்தார் படத்துக்கு நேராக வீட்டுக்கே வந்து அழைத்தார்களாம். அதிலும் எமோஷனல் ஆன காட்சிகளில் உண்மையாக நடித்ததாக அவர் கூறியிருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
குறிப்பாக, ரசிகர்கள் இன்றும் நினைவில் வைத்திருக்கும் அந்த சண்டைக் காட்சியில் வரும் வசனங்கள் கூட இயல்பாக வந்த உணர்ச்சிதான் என அவர் பகிர்ந்துள்ளார்.
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா
பூவிதாவின் வாழ்க்கையில் அதிகம் பேசப்படும் விஷயம் இதுதான். மைனா படத்தில் அமலா பாலின் அம்மாவாக நடித்தபோது அவருக்கு வயது வெறும் 22 மட்டுமாம். அதை நினைத்து அவரே அதிர்ச்சியடைந்திருக்கிறார். "நானே இன்னும் இளம் பெண்... இன்னொரு இளம் நடிகைக்கு அம்மாவா?" என்று முதலில் யோசித்தாராம். ஆனாலும் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை புரிந்து ஒப்புக்கொண்டாராம்.
அந்த படம் வெளியான பிறகு அவரை மக்கள் அடையாளம் காண ஆரம்பித்தது வேகமாக நடந்திருக்கிறது.
படத்துக்காக உண்மையிலேயே காயம்
சினிமாவில் டூப் இல்லாமல் இயல்பாக நடிக்க விரும்பும் நடிகைகளில் பூவிதாவும் ஒருவர். மைனா படத்தில் அருவாளுடன் வரும் காட்சியில் உண்மையாக காயம் ஏற்பட்டதாம். அதேபோல் வாகை சூட வா படத்திலும் கடினமான காட்சிகளை டூப் இல்லாமல் நடித்ததாக அவர் கூறியிருக்கிறார்.
கீழே விழும் காட்சிகள், மண்ணில் உருண்டு நடிப்பது, உடல் வலியைத் தாங்கி காட்சி முடிப்பது என பல கஷ்டங்களை சந்தித்திருக்கிறார்.
சினிமாவை விட அரசு வேலை முக்கியம்
இதுதான் இப்போது இணையத்தில் அனைவரையும் ஷாக் அடைய வைத்த விஷயம். 35க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பூவிதா, தற்போது அரசு பள்ளியில் சத்துணவு ஆசிரியராக (Nutrition Teacher) பணியாற்றி வருகிறார்.
சினிமா வாய்ப்புகள் வந்தாலும் அரசு வேலையை விட்டுவிட முடியாத நிலைதான் என அவர் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
"சினிமாவும், அரசு வேலையும் ஒன்றாக சமாளிக்க ரொம்ப கஷ்டம். அதனால பல வாய்ப்புகளை விட்டுட்டேன்" என்று அவர் கூறியிருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
விஜய் டிவி சீரியல் வாய்ப்பும் கைநழுவியது
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிந்து பைரவி சீரியலுக்கே பூவிதாவை தேர்வு செய்திருந்தார்களாம். போட்டோஷூட் வரை முடிந்த பிறகும், மாதத்திற்கு 15 நாட்கள் சென்னையில் தங்க வேண்டும் என்ற நிபந்தனை காரணமாக அந்த வாய்ப்பை மறுத்துவிட்டாராம்.
ஆரம்பத்தில் சீரியல் ஒளிபரப்பானபோது கொஞ்சம் வருத்தமாக இருந்ததாம். ஆனால் தற்போது அதனை ஏற்றுக்கொண்டுவிட்டதாக கூறியுள்ளார்.
பாலா படம் வந்தா வேலைக்கு ராஜினாமா
அரசு வேலையை விட மாட்டேன் என்று உறுதியாக இருக்கும் பூவிதாவும், ஒரு விஷயத்தில் மட்டும் விதிவிலக்கு வைத்திருக்கிறார். "இயக்குநர் பாலா படம் வாய்ப்பு வந்தா அரசு வேலையை கூட ராஜினாமா பண்ணிட்டு போயிடுவேன்!" என்று சிரித்தபடியே கூறியிருக்கிறார்.
சினிமாவில் பெரிய ஹீரோயினாக இல்லாவிட்டாலும், சின்ன கதாபாத்திரங்களிலேயே மக்கள் மனதில் இடம் பிடித்த பூவிதாவின் வாழ்க்கை உண்மையிலேயே சினிமாவை விட சுவாரஸ்யமானதாகவே தெரிகிறது.
-
குடும்பங்களுக்குள் புகுந்து அவதூறு.. ‘குற்றம் நிரூபித்தால் உயிரோட விடக்கூடாது!’ குஷ்பு ஆவேச பேட்டி -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
‘கருப்பு ஸ்டார்’ பட்டம் கொடுத்த ரசிகர்... உடனே திரிஷா கொடுத்த பதில்... இவ்வளவு இறங்கி பேசிட்டாரே! -
நயன்தாரா என்னை மாதிரி கஷ்டப்பட்டவங்க.. விக்னேஷ் சிவன் பழசை மறந்துட்டாரு! ஓபனாக பேசிய நடிகை சோனா -
கருப்பு படத்தில் ஆர்ஜே பாலாஜி ஸ்கேம் பண்ணிட்டாரா? "இந்த” சீரியலின் 30 நிமிட கதை தான் முழு படமா? ரசிகர்கள் ட்ரோல் -
பிரபுவின் ‘டூயட்’ நாயகி மீண்டும் வருகிறார்... 30 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி! எந்த ஹீரோவுடன் கம்பேக்? -
‘முதல்வரையும் கேள்வி கேட்டீங்களா?’... விஷாலுக்கு நடிகர் கிருஷ்ணா வைத்த செக்! புது பஞ்சாயத்து -
நடிகர் ஜனகராஜ்க்கு நள்ளிரவில் ஏற்பட்ட விபத்து.. வாழ்க்கையே மாறி போச்சு.. நண்பர் பகிர்ந்த விஷயம் -
கருப்பு கதையின் பின்னால் ஹைகோர்ட் மகாராஜாவா?.. ஆர்.ஜே. பாலாஜி சொன்ன உண்மை.. இப்படியும் நடந்ததாம்! -
இயக்குநர் சேரன் வீட்டில் ஏற்பட்ட துயரம்.. தாயின் இழப்பால் கண்ணீரில் குடும்பம்.. பிரபலங்கள் ஆறுதல் -
OTT: பக்ரீத் விடுமுறைக்கு செம என்டர்டெயின்மென்ட்... தியேட்டரா? OTT-யா? இந்த படங்களும் ரிலீஸ் ஆகிறது -
ரஜினி பற்றி பரவிய சர்ச்சை.. இதுதாங்க நடந்தது.. நானே நொந்து போயிட்டேன்.. வடிவேலு விளக்கம் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை













Click it and Unblock the Notifications