Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இது அல்லவோ காதல்.. நீயா நானாவில் பெண் சொன்னதை கேட்டீங்களா? இந்த புரிதல் வேற லெவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் ஆகஸ்ட் இருபதாம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அதில் இந்த வாரம் ஒரு குழந்தை போதும் என்பவர்களும் ஒரு குழந்தை போக்கு சரி இல்லை என்பவர்களும் கலந்து கொண்டு விவாதிக்கின்றனர்.

Neeya Naana show 20th August 2023 promo and fans reaction

அதில் ஒரு பெண் தான் முதல் குழந்தை பெற்றெடுத்த தருணத்தில் தன்னுடைய கணவர் எனக்காக செய்த தியாகங்கள் குறித்து பேசி அதனால் எனக்கு இன்னொரு குழந்தை வேண்டாம் என்று உருக்கமாக பேசியிருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆசைப்பட்ட வாழ்க்கை எல்லோருக்கும் எளிதாக அமைந்து விடாது. ஒரு சிலருக்கு மட்டும்தான் வாழ்க்கையில் சில சந்தோஷங்கள் கிடைக்கும். அதே நேரத்தில் ஒரு சில விஷயங்கள் ஒருத்தருக்கு அலட்சியமாக தெரியும். ஆனால் அது இன்னொருவருக்கு பொக்கிஷமாக தெரியும். அந்த மாதிரி தான் இந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு குழந்தை போதும் என்பவர்களும் ஒரு குழந்தை போக்கு சரி இல்லை என்றும் விவாதம் நடந்து வருகிறது.

Neeya Naana show 20th August 2023 promo and fans reaction

அதே நேரத்தில் ஒரு குழந்தை கூட இல்லாமல் பல பேர் தவம் இருப்பது இப்போது நடந்து கொண்டு தான் இருக்கிறது பல பேர் குழந்தை இல்லாமல் வேதனையோடு தற்கொலை முடிவு வரைக்கும் போய்க்கொண்டிருப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த நேரத்தில் இந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சியில் நடந்த விவாதம் பல்வேறு கருத்துக்களையும் பெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த வார நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு குழந்தை போதும் என்ற அணியில் இருந்து ஒரு பெண் எனக்கு எதற்காக ஒரு குழந்தை போதும் என்று சொல்கிறேன் என்றால் இவ்வளவு நேரமாக இங்கே பேசிக் கொண்ட இருந்தவர்கள் எல்லோரும் தன்னை நினைத்து தான் எனக்கு இனி ஒரு குழந்தை தேவை இல்லை என்று கூறிக் கொண்டிருந்தார்கள். ஆனால் நான் அப்படி சொல்வதற்கு காரணம் என்னுடைய கணவர் தான்.

Neeya Naana show 20th August 2023 promo and fans reaction

எனக்கு முதல் குழந்தை ஆபரேஷன் பண்ணி பிறந்தது. பையன் பிறந்த பிறகு என்னால் எந்த வேலையும் செய்ய முடியாமல் நான் இருந்த நேரத்தில் என்னுடைய கணவர் தன் குழந்தையை தோளிலே போட்டுக்கொண்டு தூங்க வைப்பார். குழந்தையை அடிக்கடி அழுது கொண்டே இருக்கும். ஆனாலும் இரவெல்லாம் தூங்காமல் என்னுடைய கணவர் பார்த்துக்கொள்வார். நான் பார்க்கிறேன் என்று சொன்னால் கூட வேண்டாம் என்று என்னுடைய உடல் நிலைக்கு ஆக என்னை ரெஸ்ட் எடுக்க சொல்லிவிடுவார்.

அதே நேரத்தில் இரவெல்லாம் குழந்தையை தூங்காமல் பார்த்துவிட்டு அடுத்த நாள் காலையில் ஆபீசுக்கு கிளம்பி போவார். எனக்கு அது பார்ப்பதற்கு பரிதாபமாக இருக்கும் நான் எவ்வளவோ சொன்னாலும் அவர் கேட்பதில்லை என்று உருக்கமாக பேசியிருக்கிறார். அதற்கு கோபிநாத் இப்போதும் உங்கள் குழந்தையை கணவர்தானே வைத்துக் கொள்கிறார் என்று கேட்க, ஆமா வெளியில் கணவர்தான் வைத்திருக்கிறார் என்று அந்த பெண் சொல்ல, அவருடைய கணவர் அரங்கத்திற்கு வர வைக்கப்படுகிறார்.

Neeya Naana show 20th August 2023 promo and fans reaction

பிறகு அவருடைய கணவரிடமும் கோபிநாத் உங்களால்தான் நான் இன்னொரு குழந்தையை பெற்றுக் கொள்ள ஆசைப்படவில்லை என்று உங்களுடைய மனைவி சொல்றாங்க என்று கேட்க, ஆமா நாங்க அவ்வளவு கஷ்டப்பட்டுட்டோம் எனக்கு குழந்தை மட்டுமல்லாமல் என்னுடைய மனைவியும் முக்கியம்.

அவ கஷ்டப்படக்கூடாது என்பதற்காக இரவு நான் குழந்தையை பார்த்துக் கொண்டேன் என்று கூறி இருக்கிறார். இப்படியாக வெளியாகி இருக்கும் ப்ரோமோவை பார்க்க ரசிகர்கள் பலரும் அந்த பெண்மணி ரொம்பவே கொடுத்து வைத்தவர்கள் என்று அவருடைய கணவரை பாராட்டி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+