Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜாக்கெட்டுக்கு ஜன்னல் வச்சு...ஸ்கிரீனும் கட்டிவிட்ட நிவிஷா.. உற்றுப் பார்த்து உருகும் ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : அடடா என்று அலை பாய வைக்கும் கவர்ச்சியை எப்போதும் கைவசம் வைத்திருப்பார்கள் சில நடிகைகள். இதோ, நிவிஷா முதுகை காட்டி மூச்சடைக்க வைத்திருக்கிறார்.

சில்லென்று சிரிக்கும் சிரிப்பால் ரசிகர்களின் மனதினை மலர செய்த நிவிஷாக்கு கமெண்ட்ஸ்களால் ரசிகர்கள் அர்ச்சனை செய்கின்றனர்.

மினுமினுக்கும் புடவையில் கலகலக்கும் சிரிப்பை காட்டி. .கட்டி இழுத்து விட்டாரே என ஓடோடி வந்து நிற்கிறார்கள் ரசிகர்கள். காரணம் அவரது பிளவுஸ் டிசைன் அப்படி.

வேற லெவல் சிரிப்புதான்

வேற லெவல் சிரிப்புதான்

சிரிக்கும் சிரிப்பால் கவலைகளை மறக்க வைக்க மட்டுமல்ல மனதினையும் கவரமுடியும் என்று இப்போது நிவிஷா நிரூபித்திருக்கிறார். சீரியல்களில் இருந்து இவர் தற்போது ஒதுங்கி இருந்தாலும் ரசிகர்களை விட்டு எங்கும் போய் விடவில்லை என்று நிரூபிப்பதற்காக போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை பரவசப்படுத்தி வருகிறார். அதுவும் மாடல் உடையில் வந்தால்தான் தன்னைத் தேடி ரசிகர்கள் வருவார்கள் என்று இல்லாமல் நான் என்ன செய்தாலும் ரசிக்கும் ரசிகர்கள் இருக்கிற வரைக்கும் எனக்கு கவலை இல்லை என்பதை நிரூபித்திருக்கிறார். நிவிஷாவின் போட்டோக்களுக்கு லைக் போடுவதற்காகவே ஒரு கூட்டம் வலம் வருகிறது. அதனால்தான் இவர் போஸ்ட் போட்ட சிறிது நேரத்திற்குள் இவருக்கு லைக்குகள் சும்மா மலை போல உயர்ந்து வருகிறது.

 நெகட்டிவ் ரோல் எல்லாம் வேண்டாம்பா

நெகட்டிவ் ரோல் எல்லாம் வேண்டாம்பா

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்துக் கொண்டிருந்த நிவிஷா திடீரென்று இந்த சீரியலை விட்டு விலகிவிட்டார். இது சீரியல் ரசிகர்களிடம் பெரிய அதிர்ச்சியை கொடுத்திருந்தது. இந்த சீரியல் ஆரம்பிக்கும் போது இவர் தான் வெற்றியை உருகி உருகி காதலித்து கொண்டிருந்தார். வெற்றியும் இவர் மீது காதலோடு தான் இருந்து கொண்டிருந்தார். ஆனால திடீரென்று எதிர்பாராத விதமாக மலரின் திருமணம் நின்றதும் வெற்றி மலரை திருமணம் செய்து கொள்ளும் நிலைமை ஆகிவிட்டது. அதற்கு பிறகுதான் இவர் அந்த சீரியலின் வில்லியாக மாறிவிட்டார். அதுவரைக்கும் இவர்தான் ஹீரோயினி என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ரசிகர்கள் மட்டுமல்லாமல் இவரும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார் .

மீண்டும் எப்போ வருவார்

மீண்டும் எப்போ வருவார்

ஆனால் கதையே மாறியதும் இவர் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார். ஆனால் அதற்குப் பிறகும் தொடர்ந்து நடித்துக் கொண்டுதான் இருந்தார். தொடர்ந்து இவருக்கு நெகட்டிவ் கமெண்ட்ஸ்கள் அதிகமாக வந்து கொண்டே இருந்ததால் தன்னுடைய கேரக்டருக்கு இது செட் ஆகாது என்று முடிவெடுத்து சீரியலை விட்டு விலகிவிட்டார். முதன்முதலில் இவர் அறிமுகமான தெய்வமகள் சீரியலில் பாசிட்டிவ் கேரக்டரில் நடித்ததற்கும் அதற்குப் பிறகு அவருடைய உருவத்தை வைத்து இவருக்கு கிடைத்த வாய்ப்புகள் எல்லாமே நெகட்டிவ் தான். ஆனால் முதல் சீரியலில் ரசித்து அதே ரசிகர்கள் அதற்குப் பிறகு இவரை கழுவி கழுவி ஊற்றினார்கள். இதனால்தான் இவர் இந்த சீரியலே எனக்கு வேண்டாம் என்று டாட்டா காண்பித்து விட்டு கிளம்பிவிட்டார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் தான்

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் தான்

ஆனால் இவர் சீரியலை விட்டு சென்றாலும் ரசிகர்களை மறக்கவில்லை. ரசிகர்களும் தம்மை மறந்து விடக்கூடாது என்பதற்காக அடிக்கடி போட்டோக்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். அதுவும் இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பதால் இவருடைய போஸ்ட்களை இன்ஸ்டாகிராமில் போட்டு வருகிறார் .சீரியலில் நடிக்கவில்லை என்றாலும் மாடலாக இருந்து கொண்டிருக்கிறார். அதற்காக பல நேரங்களில் போட்டோஸ்களை எடுக்கிறார். அந்த போட்டோக்களையும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிடவும் சொக்கி போன ரசிகர்கள் இவரை சுற்றி சுற்றி வருகின்றனர்.

அதிகரிக்கும் அழகு

அதிகரிக்கும் அழகு

இவர் மீண்டும் சீரியலில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அந்த சீரியல் வெளியிடுவதில் கொஞ்சம் சிக்கல் இருப்பதால் சீக்கிரத்தில் ஒளிபரப்பப்படும் என்று கூறியிருக்கிறார். அதற்காக அவருடைய ரசிகர்களும் ஆர்வமாக காத்திருக்கின்றனர். ஆனால் அதுவரைக்கும் போட்டோஸ்கள் மட்டும் போடுவதில் பின் தங்கி விடாதீர்கள் என்று சிலர் கமென்ட்களில் கெஞ்சி இருக்கின்றனர். அதைப்பார்த்த நிவிஷாவும் ரசிகர்களுக்காக நான் தினமும் விதவிதமாக வருகிறேன் என பார்த்து பார்த்து எடுத்த போட்டோக்களை போஸ்ட் போட்டு வருகிறார். அதைப் பார்த்து சொக்கிப் போன ரசிகர்களும் கமெண்ட்ஸ் கலால் இன்ஸ்டாகிராமை கதிகலங்க வைத்து வருகின்றனர்.

காத்து வருதா

காத்து வருதா

அதுவும் இவருடைய அதிகமான போட்டோஸ்களில் பின்னழகு முன்னழகு என எல்லாத்தையும் மொத்தமாக விதவிதமாக காட்டி இருப்பார். அந்த மாதிரி தான் தற்போது பட்டுப்புடவை சரசரக்க பவளமல்லியாக பூத்து குலுங்குகிறார்.பஞ்சு முட்டாய் கலரு பட்டுப்புடவையில் பல போட்டோக்களை எடுத்திருந்தாலும் ,அதில் முதுகு பக்கமாக ஜன்னலில் ஸ்கிரீன் போட்டு டிசைன் பண்ணி இருப்பதை பார்த்து பலபேர் வச்ச கண் வாங்காமல் ரசிக்கின்றனர். இன்னும் சிலரோ ஜன்னலுக்கு உள்ள காத்து நல்லா வருகிறதா என்று வம்பிழுத்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+