தமிழா தமிழாவில் இருந்து இதனால் தான் வெளிவந்தேன்.. முதல்முறை ரகசியங்களை உடைத்த கரு. பழனியப்பன்
சென்னை: கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்த இயக்குனர் கரு பழனியப்பன் திடீரென்று இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி இருந்தார்.
அவர் விலகும் போது சமூகநீதி, சுயமரியாதை, திராவிடம், கசக்குமெனில் அந்த பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவது இனிதானது என்று சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் முதல் முறையாக தான் எதனால் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினேன் என்பது பற்றி விளக்கம் கொடுத்திருக்கிறார் அது பற்றி பார்க்கலாம்.
இந்த வகையில் கடந்த 1991 ஆம் ஆண்டு பார்த்திபன் இயக்கத்தில் வெளியான ஹவுஸ்புல் படத்தில் மூலம் திரையுலகில் கரு. பழனியப்பன் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து தான் துள்ளாத மனமும் துள்ளும், பெண்ணின் மனதை தொட்டு உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த அவர் பார்த்திபன் கனவு என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் இயக்குனராக அறிமுகமானார்.
அது மட்டும் இலலாமல் அதற்குப் பிறகு சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், மந்திரப்புன்னகை, சதுரங்கம் என சில திரைப்படங்களை இயக்கி இருந்தார். அதோடு ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் தான் ஜீ தமிழில் தொடங்கப்பட்ட தமிழா தமிழா நிகழ்ச்சியில் இவர் தொகுப்பளராக கலந்து கொண்டார். அதைத்தொடர்ந்து அந்த நிகழ்ச்சியும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. இது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியின் சாயல் என்று பலர் கூறி வந்தாலும் அதை கரு பழனியப்பன் ஆமாம் உண்மைதான் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தான் சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் ஜீ தமிழ் உடனான நான்கு வருட தமிழா தமிழா பயணம் இனிதே முடிவுக்கு வந்தது. சமூக நீதி, சுயமரியாதை, திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பா இருக்கும் எனில் அந்த பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது என்று பதிவு வெளியிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு அந்த நிகழ்ச்சி நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் இப்போது மீண்டும் அந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டிருக்கிறது.
அதை பத்திரிக்கையாளர் ஆவுடையப்பன் தொகுப்பு வழங்கி வருகிறார் இந்த நிலையில் கரு பழனியப்பன் பேட்டி ஒன்றில் தான் எதனால் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினேன் என்பது பற்றி பேசி இருக்கிறார். அதில் எனக்கும் சேனல் தரப்பினருக்கும் ஒரு இடத்தில் முரண்பாடுகள் ஏற்பட்டது. ஒன்று நான் விட்டுக் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் அவர்கள் விட்டுக் கொடுக்க வேண்டும். ஆனால் ஒருவரே எப்போதும் விட்டுக்கொடுத்து கொண்டு இருக்க முடியாது.
அந்த இடத்தில் அங்கே சமனான நிலை ஏற்படவில்லை. அதனால் நான் விலகினேன் என்று கரு பழனியப்பன் கூறி இருக்கிறார். அதோடு நான் இப்போதும் தமிழா தமிழா நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். நிகழ்ச்சி நல்லபடியாக தான் போய்க்கொண்டிருக்கிறது. இப்போதைய ஜெனரேஷன் என்ன செய்கிறார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நம்முடைய அறிவு வளர்ந்து கொண்டே இருக்கும். அதனாலேயே நான் சமூக வலைத்தளத்தை முழுமையாக பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று அந்த பேட்டியில் இயக்குனர் கரு. பழனியப்பன் பேசியிருக்கிறார்.
-
“அந்த பாவம் நிம்மதியா வாழ விடாது…” பெத்தவங்களை தவிக்க விடாதீங்க.. உருக்கமாக பேசிய சிவகுமார்! பின்னணி சம்பவம் -
கென் கருணாஸ்க்கு வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் செய்த சிம்பு.. யூத் பட நடிகை நெகிழ்ச்சி போஸ்ட் -
Youth Box Office: டாப் ஹீரோக்களை மிரள வைத்த கென் கருணாஸ்.. யூத் படத்தின் ஐந்து நாள் வசூல் இத்தனை கோடியாம்! -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications