சீமான் பற்றி நடிகர் சிங்கம்புலியின் கர்ணல் மனைவி சொன்ன வார்த்தை.. அதிர்ந்த மேடை ! இப்படி ஒரு விஷயம் இருக்கா?
சென்னை: தமிழ் சினிமா மற்றும் அரசியலில் தனித்துவமான இடம் பெற்றுள்ள சீமான் குறித்து நடைபெற்ற சமீபத்திய நிகழ்ச்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதே நிகழ்ச்சியில் நடிகர் சிங்கம் புலி மற்றும் அவரது மனைவி குறித்து வெளிவந்த தகவல்களும் பரவலாக பேசப்படுகின்றன.

சீமான் விருது விழாவில் நடந்த சம்பவம்
சமீபத்தில் நடைபெற்ற தனியார் விருது விழாவில் சீமான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சிங்கம் புலி தனது மனைவியுடன் பங்கேற்றார்.
மேடையில் பேசிய சிங்கம் புலி, தனது மனைவி இந்திய ராணுவத்தில் கர்ணலாக பணியாற்றி வருவதாகவும், தற்போது லீவில் இருப்பதால் சீமான் சாருக்கு மரியாதை செலுத்துவதற்காக வந்ததாக தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து சீமான், சிங்கம் புலியின் மனைவியை மேடைக்கு அழைத்து கௌரவித்தார்.
அவர் சீமானுக்கு மாலை அணிவித்தார். அதனை சீமான் சிங்கம் புலிக்கு வழங்க, அவர் மீண்டும் சீமானுக்கு அணிவித்தார். பின்னர் அந்த மாலையை சீமான் இயக்குநர் பாலாவிற்கு பாராட்டினார். இந்த நிகழ்வு அங்கு இருந்தவர்களிடையே கைதட்டலையும், சமூக வலைதளங்களில் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
மொழி குறித்து நடந்த சுவாரஸ்ய உரையாடல்
நிகழ்ச்சியின் போது சிங்கம் புலியின் மனைவி, "சாரி சீமான் மாமா தமிழில் சரளமாக பேச வராது" என்று சீமானிடம் தெரிவித்துள்ளார். இதற்கு சீமான், சரி விடுமா ராணுவத்தில் உயர்ந்த பதவியில் இருப்பதால் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி அதிகம் பயன்படுத்துவதால் இப்படியாக இருக்கலாம் என்று நகைச்சுவையாக கூறினார். இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிங்கம் புலியின் மனைவி
சிங்கம் புலி தனது மனைவி குறித்து முன்பு பகிர்ந்த தகவல்கள் தற்போது மீண்டும் கவனம் பெற்றுள்ளன. அவர் தனது மாமன் மகளை திருமணம் செய்து கொண்டதாகவும், குடும்பத்தின் பூர்வீகம் அந்தமான் பகுதி எனவும் தெரிவித்துள்ளார். அவரது மனைவி தற்போது இந்திய ராணுவத்தில் கர்ணல் பதவியில் பணியாற்றி வருகிறார்.
கார்கில் போரில் சேவை
கார்கில் போர் காலத்தில் சிங்கம் புலியின் மனைவி முக்கிய பங்காற்றியதாக கூறப்படுகிறது. அந்த காலத்தில் 60 நாட்கள் தொடர்ந்து பங்கரில் இருந்து பணியாற்றி இருந்தாராம். போருக்குப் பிறகு அரசு தரப்பில் விருப்பமான சலுகைகள் வழங்க முன்வந்தபோதும், அவர் எந்த தனிப்பட்ட சலுகைகளையும் கோரவில்லை. தனது பெற்றோருடன் வாழ விரும்புவதாக மட்டுமே கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பல மாநிலங்களில் பணியாற்றிய அனுபவம்
சிங்கம் புலியின் மனைவி பல்வேறு மாநிலங்களில் வேலை பார்த்திருக்கிறாராம். அந்தமான் பகுதியில் உள்ள மருத்துவமனையில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து திரிபுரா, பூனே, ராஞ்சி, டேராடூன், ஹைதராபாத் மற்றும் ஜபல்பூர் உள்ளிட்ட இடங்களில் பணியாற்றியுள்ளார். இந்த அனுபவம் அவரின் சேவை மனப்பான்மையையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது.
சீமான் சினிமா மற்றும் அரசியல் பயணம்
சீமான் திரைப்பட இயக்குநராக தனது பயணத்தை தொடங்கியவர். பின்னர் அரசியலுக்கு வந்து, நாம் தமிழர் கட்சி மூலம் தனக்கென ஆதரவாளர்களை உருவாக்கியுள்ளார். அவரது பேச்சு நடை மற்றும் அரசியல் கருத்துக்கள் காரணமாக தொடர்ந்து பேசப்படும் நபராக இருந்து வருகிறார்.
ஒரு சாதாரண விருது விழாவில் நடந்த இந்த நிகழ்வில் சிங்கம் புலியின் மனைவியின் சாதனைகள் குறித்து வெளிவந்த தகவல்கள் பலரையும் வியக்க வைத்துள்ளன. இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications