இர்ஃபானை முகத்துக்கு நேராக அசிங்கப்படுத்திய சிம்பு.. ஓபனா பேசிட்டாரே! இப்படி ஒரு சம்பவம் இருக்கா?
சென்னை: எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி விடும் நடிகர் சிம்பு யூடியூபர் இர்ஃபானை பார்த்து முகத்துக்கு நேராக பேசிய விஷயம் தான் இப்போது சோசியல் மீடியாவில் அதிகமாக வைரலாகி வருகிறது. இர்ஃபான் சிம்புவை பேட்டி எடுக்க போய் பல்பு வாங்கி இருக்கிறார் என்று பலரும் அவரை கலாய்த்து வருகின்றனர். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

பேட்டியில் நடந்தது என்ன?
சமீபத்தில் இர்ஃபான், சிம்புவை பேட்டி எடுத்தார். அவரது சேனலில் வழக்கமாக இருப்பது போல, இந்த பேட்டியிலும் சில லைட் டாஸ்க்களை முயற்சி செய்தார். அதாவது, பேப்பரில் எழுதச் சொல்லுவது, சிரிக்க வைப்பது, சில ரியாக்ஷன்களை கொடுப்பது போன்ற விஷயங்கள்.
ஆனால் இந்த முறை அது வேலை செய்யவில்லை. சிம்புவிடமும் தன்னுடைய வழக்கமான பாணியில் முயற்சி செய்த இர்ஃபானுக்கு கடைசியில் ஏமாற்றம்தான் கிடைத்திருக்கிறது, "அதாவது சிம்பு பேசும்போது வீடியோக்கள் செய்வதெல்லாம் பிரச்சனை கிடையாது. ஆனால் உங்கள மாதிரி மொக்கை வீடியோ எல்லாம் என்னால பண்ண முடியாது. வருபவர்களை அமர வைத்து என்ன எழுத வேண்டும்? என்ன பேச வேண்டும்? என்று சொல்வது எல்லாம் கன்றாவியாக இருக்கும்.. தப்பா எடுத்துக்காதீங்க" என்று நேராகச் சொன்னார்.
இந்த ஒரு பதில் தான் தற்போது வைரலாகி, பலரும் பகிர்ந்து பேசும் விஷயமாக மாறியுள்ளது.

ஏன் இந்த அளவுக்கு பேசப்படுகிறது?
இந்த சம்பவம் இவ்வளவு வேகமாக பரவியதற்கு முக்கிய காரணம், இர்ஃபான் முன்னதாக சந்தித்த சர்ச்சைகள் தான். ஒரு கட்டத்தில் அவருடைய மனைவியின் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து அவர் பேசியது கடும் எதிர்ப்பை சந்தித்தது. அதேபோல, கஷ்டப்படுறவர்களுக்கு சாப்பாடு கொடுக்க போனபோது நடந்த விதம் பற்றியும் விமர்சனங்கள் எழுந்தன.
இதனால், ஏற்கனவே அவரைப் பற்றிய கருத்து மக்கள் மத்தியில் ஒரே மாதிரி இல்லை. அந்த சூழலில் சிம்பு இப்படிச் சொன்னதும், அது உடனடியாக கவனத்தை ஈர்த்தது.
சமூக வலைதளங்களில் ரியாக்சன்
இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே, பல தளங்களில் ட்ரெண்டாக ஆரம்பித்தது. ஒரு தரப்பு, "சிம்பு மனதில் இருந்ததை நேராகச் சொன்னார். யாராவது சொல்ல வேண்டியதை அவர் சொன்னார்" என்று ஆதரவு தெரிவிக்கிறது.
மற்றொரு தரப்பு, "ஒரு பேட்டியில் இவ்வளவு நேரடியாக பேச வேண்டிய அவசியமில்லை" என்று விமர்சிக்கிறது. இரண்டு தரப்பிலும் கருத்துகள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால், இந்த விவாதம் இன்னும் சூடு குறையாமல் உள்ளது.

சிம்புவின் தற்போதைய பயணம்
சிம்பு இப்போது தனது கேரியரில் மீண்டும் நல்ல நிலையில் இருக்கிறார். "மாநாடு", "வெந்து தணிந்தது காடு" போன்ற படங்கள் அவருக்கு வலுவான கம்பேக் கொடுத்தன.
தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் "அரசன்" படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் இருப்பது கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.
அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் அஸ்வத் மாரிமுத்து ஆகியோருடன் புதிய படத்தில் இனிய உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. நிலைமை இப்படி இருக்கும் போது, ஒரு சாதாரண பேட்டி... அதில் வந்த ஒரு நேரடி பதில்... அதிலிருந்து உருவான பெரிய விவாதம் - இதுதான் இந்த சம்பவத்தின் சாரம்.
சிம்பு சொன்னது நேர்மையா அல்லது கடுமையா என்பது பற்றி கருத்து வேறுபாடு இருந்தாலும், ஒரு விஷயம் மட்டும் தெளிவாக இருக்கிறது. சமூக வலைதளங்களில் ஒரு சில நிமிட வீடியோ கூட பெரிய விவாதத்தை உருவாக்கும் சக்தி கொண்டது. அதற்கான சமீபத்திய உதாரணமாக, இந்த சம்பவம் தற்போது தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications