சிறகடிக்க ஆசை: மனோஜால் வீட்டை விட்டு போகும் ரோகிணி.. இனி நடக்கப்போவது இதுதானா? விஜயாக்கு இடிமேல் இடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நாளை டிசம்பர் 28ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மனோஜிடம் கோபித்துக் கொண்டு ரோகிணி வீட்டை விட்டு போகிறார். இதனால் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே பல எதிர்பாராத திருப்பங்கள் அடுத்தடுத்து நடக்க தொடங்கி இருக்கிறது. எப்படியாவது ரோகிணி வீட்டில் மாட்ட வேண்டும் என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு அவரைப் பற்றிய மொத்த உண்மைகளும் வீட்டிற்கு தெரியாமல், சின்ன சின்ன விஷயங்கள் தெரிய தொடங்கி இருக்கிறது.

siragadikka aasai serial vijay tv

ஏற்கனவே ரோகிணியும் மனோஜும் தாங்கள் பெரியதாக பேலஸ் வாங்க போகிறோம் என்று 30 லட்சம் ஏமாந்து போயிருக்கிறார்கள். இதுவே பெரிய அதிர்ச்சியான சம்பவம்தான்... என்னுடைய மகன் பெரிய பணக்காரன் ஆகிவிட்டான். என் மகனைப் போல இந்த உலகத்தில் யாரும் இல்லை என்று பெருமை பேசிக்கொண்டு இருந்த விஜயாவிற்க்கு மனோஜ் ஏமாந்து போன செய்தியே பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது.

அதே நேரத்தில் ஜீவாவிடம் இருந்து 30 லட்சம் பணத்தை வாங்கி அதைத்தான் மனோஜ் ஷோரும் திறந்திருக்கிறார் என்ற உண்மையும் இப்போது மொத்த குடும்பத்திற்கும் முத்து மூலமாக தெரிய வந்திருக்கிறது. ஜீவாவை வைத்து முத்து ஆதாரத்தோடு நிரூபித்ததால் விஜயா மனோஜை அடிக்க போகிறார். அப்போது மனோஜ் இத்தனைக்கும் காரணம் ரோகிணி தான், ரோகிணி தான் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொன்னது என்று மொத்த பழியையும் ரோகிணி மீது தூக்கி போடுகிறார்.

அதனால் விஜயா கோபமாகி என்னிடமே ஏமாற்றி என் பணத்தை வைத்து ஷோரூம் திறந்து விட்டு உங்க அப்பா தந்தது என்று என்கிட்டயே சொன்னியா என்று ரோகிணியை அடிக்கிறார். அதற்கு ரோகிணி உங்க பையனை நீங்க படிக்க வச்சிருக்கீங்களே தவிர அவருக்கு மூளை கிடையாது. அவரால் எந்த வேலையும் செய்ய முடியாது.

நான் எத்தனையோ வேலைக்கு போக சொன்னேன். அவர் வேலைக்கு போகாம இருந்ததால்தான் நான் இப்படி ஒரு முடிவெடுத்தேன் என்று சொன்னதால் மேலும் கோபமான விஜயா ரோகிணியை மீண்டும் அடிக்கிறார். பிறகு அண்ணாமலை தடுத்து ரோகிணியை ரூமிற்கு அனுப்பி வைத்தார்.

ஆனால் விஜயா தன்னை அடிக்கும் போது மனோஜ் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் நின்று கொண்டிருந்ததை பார்த்து ரோகினி அதிர்ச்சி அடைந்தார். தனக்காக மனோஜ் சப்போர்ட் பண்ணவில்லை என்பது ரோகினியை அதிகமாக பாதித்திருக்கிறது.

அதோடு இந்த பிரச்சனைக்கே தனக்காக மனோஜ் வரவில்லை என்றால் தன்னை பற்றிய முழு உண்மைகள் தெரிய வரும்போது தன்னை வேண்டாம் என்று மனோஜ் சொல்லிவிடுவார் என்று ரோகிணி இப்போது புதிய பிளான் போடுகிறார். அதாவது மனோஜ் ரோகிணியை சமாதானம் செய்வதற்காக போனபோது நீ உங்க அம்மா என்னை அடிக்கும் இப்போது எனக்காக எதுவுமே செய்யாமல் பார்த்துட்டு இருந்த எனக்காக இந்த வீட்டில் யாருமே இல்லாத போது நான் எந்த வீட்டில் யாருக்காக இருக்க வேண்டும் என்று வீட்டை விட்டு கிளம்பி போகிறார்.

தன்னைப் பற்றிய உண்மை தெரிய வருவதற்குள் மனோஜை தன் வசப்படுத்த வேண்டும் என்று ரோகிணி பிளான் போடுகிறார். அதே நேரத்தில் இனி ரோகிணியின் மாமாவாக நடிக்க வந்த பிரவுன் மணி முத்துவிடம் சிக்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அவர் மூலமாகத்தான் ரோகிணி பற்றிய உண்மைகள் அடுத்ததாக தெரியவரும்.

ஏற்கனவே விஜயாவிற்கு இடியென அதிர்ச்சி செய்திகள் வந்து கொண்டிருக்கிறது இதில் ரோகிணி பற்றிய உண்மைகள் தெரிய வந்தால் அவர் என்ன செய்யப் போகிறார் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. ரோகிணியின் மகன் கிரிஷை பார்த்தாலே விஜயாவிற்க்கு பிடிக்காது.

ரோகிணி பணக்கார வீட்டு பொண்ணு கிடையாது என்றும் அவருக்கு ஏற்கனவே திருமண முடிந்து ஏற்கனவே ஒரு பையன் இருக்கிறார் என்ற உண்மைகள் தெரிய வரும்போது விஜயாவின் ரியாக்ஷன் என்ன என்பது பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள். அது இனி சீக்கிரத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+