சிறகடிக்க ஆசை: சீதா கல்யாணத்தில் டுவிஸ்ட்.. கடைசி நேரத்தில் முத்துவுக்கு வந்த போன் கால்! மீனா செய்த செயல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஜூன் 23ஆம் தேதிக்கான எபிசோடில் சீதா அருண் திருமணத்தை நடத்துவதற்காக மீனா பெரிய பிளான் போட்டு இருக்கிறார். ஆனால் ரெஜிஸ்டர் ஆபீசுக்கு முருகன் மூலமாக முத்துக்கு வருகிறார். அதே நேரத்தில் ரோகிணிக்கு மனோஜ் அதிர்ச்சி கொடுக்கிறார் என நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மனோஜும் ரோகிணியும் பேசிக் கொண்டிருக்கின்றனர் அப்போது மனோஜ் ரோகிணியிடம் அந்த நகை வாங்கிய ஒரு லட்சம் ரூபாய், அந்த நபரிடம் இருந்து வாங்கி கொண்டு வந்து அம்மாவிடம் கொடுத்திடு இல்லன்னா, அம்மா நம்மளை சேர்ந்து வாழ விட மாட்டாங்க என்று சொல்லிக் கொண்டிருக்க அதற்கு ரோகிணி நான் அந்த நகையே கடன் வாங்கி தான் வாங்கினேன். இப்போ இந்த பணத்துக்கு எங்க போகிறது? என்று சொல்லிக் கொண்டு இருக்க அதைப்பற்றி எனக்கு தெரியாது நீ அந்த பணத்தை வாங்க எப்ப போற என்று கேட்க நீயும் வரியா மனோஜ் கேட்கும்போது இல்ல நான் வந்தா சரிப்பட்டு வராது நீ வேணும்னா முத்துவை கூட்டிட்டு போ என்று சொல்ல, நான் யாரையும் கூட்டிட்டு போகல நான் தனியாவே போறேன் என்று ரோகிணி சொல்லிவிடுகிறார்.

ஆறுதல் சொன்ன மீனா
மறுபக்கத்தில் சீதா சோகமாக இருக்கிறார் இதுவரைக்கும் அம்மா கிட்ட எந்த விஷயத்தை மறைக்கவில்லை. ஆனால் இப்போது இந்த விஷயத்தை மறைக்கிறோமே என்று குற்ற உணர்ச்சியில் இருக்கிறார். அந்த நேரத்தில் மீனாவுக்கு சீதா போன் போட்டு மனக்குழப்பத்தை சொல்ல அதற்கு எனக்கும் இந்த கல்யாணத்தை இப்படி நடத்துவது விருப்பம் இல்ல ஆனா உங்க மாமா அவசரமா இப்போ மாப்பிள்ளை பாத்துட்டு இருக்காரு அதனால உனக்கு இப்போ வேற கல்யாணம் பண்ணி வச்சுட்டு வருதுன்னா இந்த முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. நீ பயப்படாதே என்று ஆறுதல் சொல்கிறார்.
ஏமாறும் முத்து
மறுநாள் காலையில் மீனா மாலை எடுத்துக் கொண்டு கிளம்பும்போது முத்து வந்து பார்த்துவிட்டு மாலை அருமையாக இருக்கிறது சீதாவுக்கு இது போல தான் கல்யாண மாலை செய்யணும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். பிறகு நான் மாலையை கொடுத்துட்டு வரேன் என்று மீனா கிளம்பும்போது நான் கொண்டு விடவா என்று முத்து கேட்க, வேண்டாம் என்று சமாளித்து விட்டு கிளம்புகிறார். சீதாவும் அருண் சொன்னது போல ரெஜிஸ்டர் ஆபிஸ் வந்து விடுகிறார். அந்த நேரத்தில் வித்தியாவின் காதலன் முருகன் ரெஜிஸ்டர் ஆபீசுக்கு வந்துவிட்டேன் என்று முத்துக்கு போன் பண்ணி முத்துவை ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கு வர சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications