சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் எதிர்பார்த்தது நடந்தது.. ஸ்ருதி கண்ணில் சிக்கும் ரோகிணி! சிந்தாமணி பிளான் உடைந்தது!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial March 4, 2026 episode) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 மார்ச் 4ஆம் தேதிக்கான எபிசோடில், விஜயாவின் மூன்று மகள்களும் மனைவியை பிரிந்து தனியாக தவித்துக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் ரோகிணி பற்றிய ஒரு முக்கியமான உண்மை மீனா மற்றும் ஸ்ருதிக்கு தெரிய வருகிறது. என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்
இன்றைய எபிசோடில் (Siragadikka Aasai serial today episode), முத்து வீட்டிற்கு வருகிறார். அப்போது அண்ணாமலை உடனே, "மீனாவை கூட்டிட்டு வரலையா?" என்று கேட்கிறார். அதற்கு முத்து, "நான் எவ்வளவு சொல்லியும் அவ கேக்கல. அம்மாவும் மீனாவும் உங்க மேல ரொம்ப பாசமா இருக்காங்க. அதனாலதான் இப்படி நடக்குது. கொஞ்ச நாள் அப்படியே இருக்கட்டும் பா," என்று சமாதானப்படுத்துகிறார்.
மீனாவை பற்றி பயப்படும் அண்ணாமலை
பின்னர் அண்ணாமலை, முத்துவை தனியாக அழைத்து பேசுகிறார். "விஜயா இப்படி போனால் மீனாவை வீட்டுக்குள்ளே வரவிடாம தடுக்கலாம் போல இருக்கு," என்று கவலைப்படுகிறார். அதற்கு முத்து, "அப்படி எதுவும் நடக்க விட மாட்டேன். முதல்ல அம்மாவுக்கு இருக்கும் பயம் போக என்ன செய்யலாம் என்று பார்ப்பேன்," என்று உறுதியளிக்கிறார்.
மூன்று தம்பதிகளின் பிரிவு
இதற்கிடையில், முத்து மீனா வீட்டிற்கு வந்தது போல கனவு காண்கிறார். அதேபோல ரவி நீத்து மற்றும் ஸ்ருதி இருவரும் தன்னை தொந்தரவு செய்வது போல கனவு கண்டு கொண்டிருக்கிறார். இவர்களை தொடர்ந்து மனோஜ் ரோகிணி மீண்டும் வீட்டிற்கு வந்தது போல கனவு காண்கிறார். இதையெல்லாம் பார்க்கும் போது கொஞ்சம் கிரிஞ்ச்யாக தான் இருந்தது.
மனோஜ் முத்து, ரவி மூன்று பேருமே பொண்டாட்டி வீட்டில் இல்லாததால் தூக்கம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். ரோகிணி நினைத்தபடியே இந்த பிரிவு நடந்துவிட்டது போல தெரிகிறது. இதனால் கதையில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாகியுள்ளது.
மீனாவை சந்திக்கும் ஸ்ருதி
இந்த சூழலில் ஸ்ருதி, மீனாவை நேரில் சந்திக்கிறார். அப்போது, "ஆண்டி சொல்றதெல்லாம் நீங்க ஏன் இவ்வளவு நம்புறீங்க?" என்று கேட்கிறார். அதற்கு மீனா, "வேற எதாவது இருந்தா நான் கவலைப்பட மாட்டேன். ஆனா இது மாமா உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் என்று சொல்றாங்க. அதனாலதான் பயமா இருக்கு," என்று பதிலளிக்கிறார்.
ரோகிணி மீது ஸ்ருதியின் சந்தேகம்
இதற்கு பதிலாக ஸ்ருதி ஒரு முக்கியமான விஷயத்தை சொல்கிறார். "இரண்டு வருடமா நீங்க இந்த வீட்டிலேயே இருக்கீங்க. அப்போ அங்கிளுக்கு எதுவும் ஆகல. இப்போ திடீர்னு வீட்டை விட்டு போக சொல்லுறாங்க. இதெல்லாம் யாரோ திட்டமிட்டு உங்களை வெளியேற்ற முயற்சி மாதிரி தெரியுது. அது ரோகிணி வேலைகூட இருக்கலாம். அவளோட வாழ்க்கையை காப்பாத்திக்க என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடியவள்தான்," என்று தனது சந்தேகத்தை வெளிப்படுத்துகிறார்.

ரோகிணி வருகை
ஸ்ருதி இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில், திடீரென ஒரு கார் வந்து நிற்கிறது. அதிலிருந்து ரோகிணி இறங்குவதை பார்த்ததும் மீனாவும் ஸ்ருதியும் அதிர்ச்சியடைகிறார்கள்.
இவ்வளவு குழப்பங்களுக்கும் பின்னால் சிந்தாமணி இருப்பதாக கதையில் காட்டப்படுகிறது. அதே சமயம் விஜயா வீட்டை அடமானம் வைத்திருக்கும் ரகசியமும் இன்னும் வெளியில் வரவில்லை.
இந்த எல்லா உண்மைகளையும் முத்து கண்டுபிடிப்பாரா? அல்லது விஜயா சிந்தாமணியின் சதியில் சிக்கிக்கொள்வாரா? ரோகிணியின் திட்டம் வெற்றியடையுமா? என்ற பல கேள்விகளுடன் சிறகடிக்க ஆசை சீரியலின் அடுத்த எபிசோடிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
-
Ambika: விஜய் டிவியில் என்ட்ரி கொடுக்கும் நடிகை அம்பிகா.. அதுவும் எந்த சீரியல் தெரியுமா? இனி தான் சம்பவம் இருக்கு! -
Rachitha: இரண்டாவது கல்யாணம்.. அதுவும் இந்த மாதத்தில்! வெளிப்படையாக பேசிய ரட்சிதா மகாலட்சுமி! -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: உதவி செய்த மீனாவை போட்டு கொடுத்த மயில்.. கதிர் கொடுத்த அதிர்ச்சி! கோபத்தில் பாண்டியன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தால் மனம் மாறும் சரவணன்? கோமதி ரியாக்ஷன்! குட்டையை குழப்பிய அப்பத்தா -
ஓபிஎஸ் திமுகவில் சேர்ந்ததற்காக கார் ஓட்ட மறுத்தாரா டிரைவர்? வைரல் வீடியோவிற்கு விளக்கம் -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி பற்றி ரோகிணிக்கு தெரிந்த உண்மை.. வீட்டை விட்டு போன மீனா! முத்து எடுத்த முடிவு -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி.. இலவசமாக நகை மீட்கலாமா? ஆசையில் விழும் மக்கள் கவனிக்க வேண்டியது -
நீலகிரி அரசு ஊழியரை மயக்கிய இளம் பெண்.. ஒரே நாளில் 20 லட்சம் சம்பாத்தியம்.. ட்விஸ்ட் -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் கேம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ அப்டேட்.. நோட் பண்ணுங்க -
இஸ்ரேலை நோக்கி.. செஜில் வகை ஏவுகணைகளை வீச தொடங்கியது ஈரான்! ரொம்ப கஷ்டம்! -
உறுதியான காங்கிரஸ் திமுக கூட்டணி! அறிவாலய அலார்ம்! சத்தியமூர்த்தி பவன் சரண்டர்! அதிகாலை முடிந்த டீல் -
டெல்லிக்கு பறக்கும் விஜயகாந்த் மச்சான்.. ஒரே கையெழுத்தில் மாறிய தலையெழுத்து! காங்கிரஸுக்கு கல்தா!












Click it and Unblock the Notifications