18 வயதில் திருமணம்.. அதனால் பட்ட வேதனை.. பலருக்கும் முன்மாதிரியான நடிகை சுலக்ஷனா
சென்னை: வெள்ளி திரையில் மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் நடிகை சுலக்ஷனா நடித்து வருகிறார்.
சினிமா வாழ்க்கையில் தான் பல வருடங்களாக தொடர்ந்து இருந்தாலும் தன்னுடைய குடும்ப வாழ்க்கை சில வருடங்களிலே முடிந்து போய்விட்டது என்று வருத்தத்துடன் அதைப் பற்றி பகிர்ந்திருக்கிறார்.
பதினெட்டு வயதில் கல்யாணம் செய்ததால் பல வேதனைகளை அனுபவித்த சுலக்ஷனா பல ரகசியங்களையும் கூறி இருக்கிறார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு கதாநாயகியாக பல முன்னணி நடிகர்களோடு ஜோடியாக நடித்த நடிகை சுலக்ஷனா தற்போது சின்னத்திரையிலும் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். தொடர்ச்சியாக இவர் பல வருடங்களாக சினிமாவில் தொடர்ந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து முதல் முறையாக மனம் திறந்து பேசி இருக்கிறார்.
சுலக்ஷனா தமிழில் அறிமுகமானது "தூரல் நின்னு போச்சு" என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான். இந்த திரைப்படத்தில் நடிகர் பாக்யராஜ்க்கு ஜோடியாக நடித்திருப்பார். இந்த திரைப்படத்தில் அவர் 14 வயதிலேயே கதாநாயகியாக நடித்திருந்தார். மங்கலம் என்கிற பெயரில் நடித்திருப்பார். அது வெகுவாக பேசப்பட்டது. முதல் திரைப்படத்திலேயே பெரிய அளவில் பிரபலமாக தொடங்கி விட்டார்.
அதைத் தொடர்ந்து "ஆயிரம் நிலவே வா" போன்ற பல படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கும் இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென் இந்தியா முழுவதும் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். சுலக்ஷனாவிற்கு சினிமா வாழ்க்கை குழந்தை பருவத்திலேயே தொடங்கிவிட்டது. அதுபோல கல்யாண வாழ்க்கையும் சிறு வயதிலேயே தொடங்கி விட்டதாம்.

சுலக்ஷனா திரைப்படங்களில் நடிக்கும் போது கூட அவருடைய அம்மா ரொம்பவே ஸ்ட்ரிக்ட்டாக இருப்பாராம். அங்கு இருக்கும் யாரோடும் அதிகமாக பேசக்கூடாது. கதாநாயகன் இருக்கும் பக்கத்தை பார்க்க கூட கூடாது என்றெல்லாம் பேசுவாராம். ஆனாலும் அவருக்கு 18 வயதிலேயே காதல் வந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து இருவருடைய காதல் விஷயமும் வீட்டிற்கு தெரிய வர அவர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க வில்லையாம்.
ஆனால் பல வீட்டில் ஆண்கள் பெண்கள் வேலைக்கு போயிட்டு வந்தாலும் வீட்டில் வந்து மீண்டும் வேலையை செய்ய வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். அவர்கள் என்ன மெஷினா? நடிகைகளுக்கு மட்டும் 24 மணி நேரமும் உழைக்க முடியும் என்று நினைத்துக் கொண்டிருக்காங்க போல, நாம சூட்டிங் முடிந்து வீட்டுக்கு 10 மணி 11 மணிக்கு போனாலும் அதற்கு பிறகு தான் சமைக்க வேண்டும். அப்படி எல்லாம் கூட சில வீட்டில் நடக்கிறது என்று ஜாடை மாடையாக கூறியிருக்கிறார்.
ஆனால் பல வீட்டில் ஆண்கள் பெண்கள் வேலைக்கு போயிட்டு வந்தாலும் வீட்டில் வந்து மீண்டும் வேலையை செய்ய வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். அவர்கள் என்ன மெஷினா? நடிகைகளுக்கு மட்டும் 24 மணி நேரமும் உழைக்க முடியும் என்று நினைத்துக் கொண்டிருக்காங்க போல, நாம சூட்டிங் முடிந்துட்டு வீட்டுக்கு 10:00 மணி 11 மணிக்கு போனாலும் அதற்கு பிறகு தான் சமைக்க வேண்டும். அப்படி எல்லாம் கூட சில வீட்டில் நடக்கிறது என்று ஜாடை மாடையாக கூறியிருக்கிறார்.
ஆனாலும் தான் விவாகரத்துக்கு பிறகு தன்னுடைய குழந்தைகளை தான் கவனித்து வளர்த்து படிக்க வைத்து விட்டேன். நான் படிக்காததை என்னுடைய குழந்தைகளை அதிகமாக படிக்க வைத்து விட்டேன் என்றும் கூறியிருக்கிறார். அதோடு தன்னுடைய கணவருக்கு இரண்டாவது திருமணம் நடந்து விட்டது என்றும் இப்போதும் அவர் என்னிடம் ஒரு நல்ல பிரண்டாக பேசுவார். நீ அப்படியே தனியாகவே இருந்து சாதிச்சிட்டியே என்று கேட்பார் என்றும் கூறியிருக்கிறார்.
-
மோசமான ப்ரொபோசல்.. மிஸ் ஆன விஜய் படம்.. தலையெழுத்து படி தான் நடக்கும்.. நடிகர் அப்பாஸ் உருக்கம் -
எல்லாமே பொய்! விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்! பர்சனல் விஷயத்தை ஓபனாக பேசிய ரம்பா! வதந்திகளுக்கு பதிலடி -
Youth OTT: ஓடிடியில் வெளியாகும் யூத் படம்! எப்போ, எதில் பார்க்கலாம்? கென் கருணாஸ் ரசிகர்களுக்கு குட் நியூஸ் -
விஜய் சேதுபதி இவ்வளவு ஓபனா பேசுவாருன்னு நினைக்கலையே! வெடவெடுத்து போன VJ பார்வதி! அடுத்த பஞ்சாயத்து -
எந்த மனைவிக்கும் இப்படிப்பட்ட அவமானம் வரக்கூடாது.. ரவி மோகன் மனைவி ஆர்த்தி உருக்கம்.. விஜயுடன் ஒப்பீடு? -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன்












Click it and Unblock the Notifications