பல நாள் கனவு.. தமிழும் சரஸ்வதியும் சீரியல் முடிந்ததும் நக்ஷத்ரா பகிர்ந்த மகிழ்ச்சியான செய்தி
சென்னை: விஜய் டிவியில் சில மாதங்களுக்கு முன்பு முடிவடைந்த தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கதாநாயகியாக நடித்த நக்ஷத்ரா புது கார் வாங்கி இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார்.
விஜய் டிவியில் ஜூலை 2021 முதல் ஏப்ரல் 2024 வரை ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் சீரியல் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. ஆரம்பத்தில் இந்த சீரியலுக்கு அதிகமான வரவேற்பு இருந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல சீரியலில் வந்த கதையே வந்து கொண்டிருக்கிறது என்பது பலருடைய அதிருப்தியாக இருந்தது. ஆனாலும் இந்த சீரியல் டிஆர்பி யில் நல்ல இடத்தை பிடித்துக் கொண்டிருந்தது.

கடந்த மாதத்தோடு தமிழும் சரஸ்வதியும் சீரியல் முடிவுக்கு வந்தது. இந்த சீரியலில் முக்கியமான கேரக்டரில் நடிகை நக்ஷத்ராவும் அவருக்கு ஜோடியாக தீபக்கும் நடித்திருந்தனர். இந்த நிலையில் சீரியல் முடிவடைந்ததும் நக்ஷத்ரா தான் புதிய கார் ஒன்று வாங்கி இருக்கும் மகிழ்ச்சி செய்தியை ரசிகர்களோடு பகிர்ந்து இருக்கிறார்.
தனது ஆசைகளில் ஒன்றாக இருந்த காரை அவர் வாங்கியதும் அதற்கான புகைப்படங்களையும் பகிர்ந்து இருக்கிறார். அதோடு என்ன ஒரு அழகான கார்.. இந்த சொகுசு காரை சொந்தமாக்கி கொண்டதால் உருவாகும் உற்சாகத்திற்கு அளவே இல்லை. புதிய அனுபவத்திற்கான நேரம் என்று பதிவிட்டு இருக்கிறார். இவருக்கு சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
நக்ஷத்ரா தமிழும் சரஸ்வதியும் சீரியலில் மட்டுமல்லாமல் சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி, லட்சுமி ஸ்டோர்ஸ், நாயகி போன்ற சீரியல்களிலும் நடித்திருக்கிறார். பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அதிகமான ரசிகர்களை கவர்ந்த நக்ஷத்ரா இப்போது நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் வாயை மூடி பேசவும், இரும்பு குதிரை, புலிவால், மிஸ்டர் லோக்கல், நம்பியார் போன்ற படங்களிலும் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
அதே நேரத்தில் நக்ஷத்ரா தமிழும் சரஸ்வதியும் சீரியலுக்கு பிறகு வேறு எந்த சீரியலிலும் இன்னும் கமிட்டாகவில்லை. இது குறித்து ரசிகர்கள் அவரிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மீண்டும் புது சீரியலில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை அப்டேட்: சிந்தாமணி செய்த சூழ்ச்சி, ஜெயிலுக்கு போகும் முத்து- மீனா.. ஸ்ருதி செய்த சம்பவம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications