மணிமேகலை CWCஇல் இருந்து வெளியேறுவதற்கு காரணமே இதுதானா? சேனலில் இப்படி ஒரு பிளானா..!?
சென்னை: குக் வித் கோமாளி சீசன் 4இல் இருந்து மணிமேகலை விலகி இருந்தார்.
எதற்காக விலகினார் என்ற தகவலை மணிமேகலை இப்ப வரைக்கும் கூறவில்லை.
இந்த நிலையில் சேனல் தரப்பிலிருந்து தான் மணிமேகலை விலகியதாக தற்போது தகவல்கள் பரவி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு கோமாளிகளுக்கும் அதிகமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர். ஏற்கனவே விஜய் டிவியில் பிரபலமாக இருந்த பலர் இந்த சீசன்களில் தொடர்ந்து கோமாளியாக இருந்து வருகின்றனர்.
அதில் ஒருவராகத்தான் மணிமேகலை இருந்து வந்தார். மூன்று சீசன்களாக கோமாளியாக இருந்து வந்த மணிமேகலை திடீரென்று இந்த சீசனில் சில வாரங்களுக்கு முன்பு இந்த நிகழ்ச்சியை விட்டு தான் வெளியேறப் போகிறேன் என்று அறிக்கையை மட்டும் விட்டு வெளியேறி இருந்தார். ஆனால் எதற்காக இவர் வெளியேறினார் என்பது யாருக்கும் இருந்தது. அவரும் அதற்கான விளக்கத்தை வெளிப்படையாக கொடுக்கவில்லை.

கடை திறப்பு விழாவிற்கு சென்ற மணிமேகலைக்கு கிடைத்த அவமானம்..அவரே வெளியிட்ட வீடியோ
மணிமேகலையோடு குக் வித் கோமாளியில் இருக்கும் பல போட்டியாளர்களிடமும் மணிமேகலை எதற்காக விலகினார் என்ற கேள்வி கேட்கப்பட்டது. ஆனால் அவர்களும் எந்த தகவலையும் சரியாக தெரிவிக்காமல் மழுப்பலாக இருந்து வருகின்றனர். ஆனால் இந்த நிலையில் மணிமேகலை இதனால் தான் வெளியாகி இருப்பார். இதனால் தான் வெளியாக இருப்பார் என்று பல்வேறு வதந்திகள் மாதக்கணக்கில் வெளியாகி வலம் வருகிறது.
அந்த வகையில் தற்போது விஜய் டிவி யில் இருந்து தான் மணிமேகலையை வெளியேற வைத்திருக்கிறார்கள் என்றும், மணிமேகலை புதியதாக தொடங்க இருக்கும் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமாக இருப்பதால் இந்த முடிவை எடுத்தார் என்றும் சில தகவல்கள் தற்போது ரெக்க கட்டி பறக்கிறது. ஆனால் இதைக் குறித்தும் விளக்கம் ஒன்றை தட்டி விடாமல் மணிமேகலை அமைதி காப்பது தான் பலருக்கும் பல்வேறு கேள்விகளை உதிக்கின்றது.












Click it and Unblock the Notifications