அச்சச்சோ.. ஜனனி அய்யர் இதயம் நொறுங்கிப் போச்சே!
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் தோத்தாலும் தோத்துச்சு.. ஊரெல்லாம் ஒரே ஒப்பாரியாக உள்ளது. அந்த அளவுக்கு இந்தத் தோல்வி அத்தனை பேரையும் பாதித்துள்ளது போல.
ஐபிஎல் என்று வந்தாலே யார் என்ற வரம்பே இல்லை. பிரபலங்கள் முதல் சாதாரண ஜனங்கள் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் பக்கம் ஒதுங்கி விடுகிறார்கள். காரணம், கேப்டன் தோனிதான்.
தல தோனி என்றால் உருகாதார் யார் உண்டு. யாரும் இல்லை. அந்த வகையில் பிரபலங்களும் கூட நேற்று தோனியின் விருந்தைக் காண காத்திருந்தனர். ஆனால் அவர் துரதிர்ஷ்டவசமாக சர்ச்சைக்குரிய வகையில் அவுட் ஆனது அனைவரையும் பாதித்து விட்டது.
|
உடைந்த இதயம்
நம்ம நடிகை ஜனனி அய்யர்கூட இந்தப் போட்டியைப் பார்த்து மனம் நொறுங்கிப் போய் விட்டார். ஒரு உடைந்த இதயம் சிம்பலைப் போட்டு தனது ஏமாற்றத்தை ஜனனி வெளிப்படுத்தி உள்ளார்.

வருத்தம்தான்
அழகான ஜனனி அய்யரின் உள்ளம் இப்படி நொறுங்கிப் போய் விட்டதே என்று பலரும் டிவிட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளனர். பரவாயில்லை விடுங்க, தோத்தாலும் ஜெயிச்சாலும் நாம சென்னையின் ரசிகர்தான் என்று ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.
|
குசும்பு ரசிகர்
அதை விட முக்கியமாக ஒருவர் இப்படிக் கூறியுள்ளார். இதுக்கு எத்தனை பேர் பிளாஸ்திரி தூக்கிட்டு வரப் போறாங்களோ.. அதாவது ஜனனியின் உடைந்த இதயத்தை ஒட்ட வைக்கவும். குசும்புக் காரரய்யா நீர்!

உடைந்தது
உடைந்தது ஜனனி அய்யர் உள்ளம் மட்டுமில்லிங்க.. ஒட்டுமொத்த சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களின் இதயங்களும்தான்.. சரி சரி விடுங்க விடுங்க.. அடுத்து உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரப் போகுதாம்.. அதுல ஜெயிச்சு அசத்திருங்க.. அதுதாங்க முக்கியம்.












Click it and Unblock the Notifications