நல்ல மிடுக்கு.. கொள்ளை அழகு.. நிறுத்தி நிதானமாக.. வாவ் போட வைக்கும் வரலட்சுமி ஷோ!
சென்னை:ஜெயா டிவியில் வாரம் தோறும் ஞாயிற்று கிழமைகளில் உன்னை அறிந்தால்னு சமூக நலன், மற்றும் விழிப்புணர்வு தரும் நிகழ்ச்சியை வர லட்சுமி சரத்குமார் நடத்தறாங்க. வரலட்சுமி நல்ல ஜிம் பாடி மெயின்டெயின் பண்ற மாதிரி தெரியுது.
எப்போதும் வரலட்சுமி பேச்சு ஃபாஸ்ட் பீட்ல போகும், கேட்கறவங்களுக்கு புரியாது. அப்படிப்பட்டவங்க, சமூக அக்கறை உள்ள ஒரு ஷோ பண்றாங்கன்னா பார்க்கற ஜனங்களுக்கு புரியணுமேன்னு இருந்த கவலையை போக்கிட்டாங்க வரலட்சுமி.
நல்ல மிடுக்குடன் மிக அழகாக, நிதானமாக, தெளிவாக பேசி நிகழ்ச்சி நடத்துகிறார். ஷோவுல ஒண்ணும் புதுசா இல்லேன்னாலும், அனைவருக்குமான விழிப்புணர்வு, சமூக கேடுகளை சொல்லி, இதற்கு தீர்வும் சொல்வதால், பயனுள்ள நிகழ்ச்சியான இதை தவறாமல் பார்க்கலாம்.
நதியா நதியா நைல் நதியா.. அடடா.. சைக்கிளில் வர்றாங்க ஸ்டைலா!
முதலில் குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் டாபிக் பத்தி பேசினார். எக்ஸ்பர்ட் வச்சு பல ஆலோசனைகள் வழங்க செய்தார். அடுத்து மது போதைக்கு அடிமையானவர்களை பற்றிய அலசல்.. இப்படி நல்லாத்தான் இருக்கு.
தீர்வா என்னதான் சொல்ல வராங்கன்னா, திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போலத்தான்.தவறு செய்யறவங்க நீங்களா திருந்துங்க. உங்களை நீங்க முதலில் அறியுங்கள் என்பதுதான், உன்னை அறிந்தால்.
மக்கள் இப்படித்தான் அவங்க தட்டிக் கேட்பாங்க, நமக்கு ஏன் வம்புன்னு விட்ருவாங்க. மத்தவங்கதான ஓட்டு போடறாங்களே நம்ம ஒருத்தர் ஓட்டுல என்னவாகிடப் போகுதுன்னு விட்ருவோம். இப்படியே ஒவ்வொருத்தரும் நினைச்சால்?
இதற்கெல்லாம் தீர்வு சொல்வது போலத்தான் உன்னை அறிந்தால் நிகழ்ச்சியை வரலட்சுமி நடத்தறாங்க.