விஜய் டிவி சீரியலில் திடீரென மாற்றப்பட்ட நடிகர்.. கதையில் ஏற்பட்ட திருப்பம்.. இவருக்கு பதில் இவரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வந்த நடிகர் திடீரென மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதுபோல அந்த சீரியலில் கதைக்களம் மாறி இருக்கிறது. இனி என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

பொதுவாக சீரியலில் இவருக்கு பதில் இவர் என்பது சர்வசாதாரணமாக நடக்கும் நிகழ்வுதான். பொதுவாக ஒரு சீரியல் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் சில நடிகர்களால் தொடர்ந்து அந்த கேரக்டரில் நடிக்க முடியாமல் போய்விடுகிறது. முக்கியமாக கதாநாயகன், கதாநாயகி அந்த சீரியலில் இருந்து விலகும் போது டிஆர்பி அடி வாங்குகிறது.

Vijay TV Serial Actress

ஆனாலும் தவிர்க்க முடியாத காரணங்களால் சிலர் வெளியேற வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. அதுபோல துணை கதாபாத்திரங்களில் நடிப்பவர்களும் திடீரென்று விலகி விடுகிறார்கள். அந்த வரிசையில் தற்போது பொன்னி சீரியலில் திடீர் மாற்றம் நடந்திருக்கிறது. பொன்னி சீரியலில் கதாநாயகியாக நடிகை வைஷ்ணவி நடித்து வருகிறார். அதுபோல அவருக்கு ஜோடியாக கதாநாயகனாக சபரி நடித்திருக்கிறார்.

இந்த சீரியலில் கதாநாயகி பொன்னி ஆரம்பத்தில் எதற்கெடுத்தாலும் அழுது கொண்டு இருந்தார். ஆனால் இப்போது அந்த சீரியலில் கதை மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. தன்னை பற்றி குற்றசாட்டுகளை தைரியமாக குடும்பத்தினர் முன்பு நிரூபித்து விட்டு வீட்டை விட்டு சுயமரியாதைக்காக வெளியே சென்று இருக்கிறார்.

ஆனால் கதாநாயகி எங்கே போனார் என்பது தெரியாமல் கதாநாயகன் தேடிக் கொண்டிருக்கிறார். சிறுவயதிலேயே பொன்னிக்கும் சக்திக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று இருவருடைய அப்பாவும் பேசி வைக்கிறார்கள் ஆனால் சக்தியின் அம்மா பொன்னியை திருமணம் செய்து வைப்பதற்கு சம்மதிக்காமல் இருக்கிறார்.

அதுபோல சக்தி ஒரு பெண்ணை காதலிக்கிறார் அவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்க போகும்போது எதிர்பாராத சூழ்நிலையில் திருமணம் நின்றுவிடுகிறது. பிறகு பொன்னியை சக்தி தன்னுடைய அப்பாவின் வற்புறுத்தலால் திருமணம் செய்து கொள்கிறார்.

Vijay TV Serial Actress

திருமணத்திற்கு பிறகு பொன்னியை புரிந்து கொண்டு சக்தி அவரை காதலிக்கிறார். ஆனால் சக்தியின் அம்மா பொன்னியை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறார். இந்த நிலையில் எப்படி தன்னுடைய மாமியாரின் மனதை மாற்றினார்? தன்னை பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு அவருடைய பதிலடி என்ன என்பதுதான் கதையாக இருக்கிறது.

இந்த நிலையில் இந்த சீரியலில் பொன்னியின் அப்பாவாக நடித்து வந்த நடிகர் திடீரென மாற்றப்பட்டு இருக்கிறார். அதாவது பொன்னியின் அப்பாவாக சீரியலின் ஆரம்பத்தில் நடிகர் அழகு நடித்து வந்தார். இப்போது அவருக்கு பதிலாக நடிகர் வின்சென்ட் முத்தையா நடிக்க இருக்கிறாராம். ஏற்கனவே பொன்னி சக்தியின் வீட்டை விட்டு கிளம்பி போயிருக்கிறார்.

இந்த நிலையில் இனி கதை எப்படி பயணிக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம். அது போல இப்போது விஜய் டிவியில் மகா சங்கமம் நடைபெற்று வருகிறது. அதில் பொன்னி சீரியல் மற்றும் கண்மணி அன்புடன் சீரியல் இணைந்து ஒளிபரப்பாகி வருகிறது. அந்த நிலையில் இனி பொன்னியின் அப்பாவால் பொன்னியின் வாழ்க்கையில் என்ன மாற்றம் நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+