நினைத்தேன் வந்தாய் சீரியலில் அதிரடி திருப்பம்.. மஞ்சளில் ரத்தம் பட்டு கருப்பானது.. ஆவியின் ஆட்டம்
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பிரபலமான சீரியலான நினைத்தேன் வந்தாய், நேற்றைய எபிசோடில் அதிரடி திருப்பங்களுக்கு சாட்சியாக மாறியுள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் மனோஹரி, இந்துவை அழிக்கும் நோக்கில் ஒரு பூஜையைத் தொடங்கினார். இதையடுத்து கதைக்களம் எதிர்பாராத திருப்பத்தை எடுத்து, பார்ப்போரை இருக்கைகளின் நுனியில் அமர வைத்துவிட்டது.
மாய மந்திரம், குடும்ப உறவுகள் என நினைத்தேன் வந்தாய் பட்டையை கிளப்பி வருகிறது. பீக் ஹவரில் ஒளிபரப்பாவதால் குடும்பத்தில் அத்தனை பேரும் இதை கண்டு களிக்கவும் வாய்ப்பாக அமைந்துள்ளது. பூஜை தொடங்கப்பட்ட நிலையில், இன்றைய எபிசோட் பற்றி பார்க்கலாம்.

மனோஹரி முதலில் குழந்தைகளையும் கணவல்லியையும் அனுப்பி வைத்துவிட்டார். ஏனென்றால், இந்துக்களின் இரத்த உறவினர்கள் யாரும் பூஜையின்போது இருக்கக்கூடாது என்று சாமியார் அறிவுறுத்தினார். சடங்கை தனியாகதான் நடத்த வேண்டும் என்று சாமியார் ஸ்ட்ரிக்டாக சொல்லியிருந்தார்.
உள்ளே நுழைய முடியாமல் கவலைப்பட்ட இந்து, விடுதி வார்டன் எழிலைத் தொடர்பு கொண்டார். ஆனால், எழில் பதில் சொல்லவில்லை. வார்டன் மனோஹரியை அழைத்து, இந்துவின் குடும்பத்தை கண்டுபிடிக்க முடியுமா என்று விசாரித்தார். மனோஹரி ரவுடியிடம் விடுதி வார்டனைத் தள்ளிவிட்டு அந்த புகைப்படத்தைக் காட்டச் சொன்னார்.
சுடர், ஜூஸ் போடும்போது கையில் வெட்டி மஞ்சளில் பட்டதால் பூஜை கெட்டது. இந்துவின் ஆவி மீண்டும் வீட்டிற்குள் நுழைந்தது, இதனால் மஞ்சள் திடீரென கருப்பாக மாறியது.
ஒளிந்திருந்த இந்து, சுடர் எழிலை கவனிப்பதை பார்த்தாள். மஞ்சளின் நிறம் மாறியதால் செல்வியும் மனோஹரியும் அதிர்ந்தனர். இத்தகைய திடுக் திருப்பங்களுடன், பார்வையாளர்கள் அடுத்து என்ன நடக்கும் என்பதை பார்க்க ஆர்வமாக உள்ளனர்.












Click it and Unblock the Notifications