வருங்கால கணவரை குறித்து சந்திரலேகா கதாநாயகியின் உருக்கமான பதிவு.. ஆரம்பத்தில் தெரியாமல் போய்விட்டதாம்
சென்னை: சன் டிவியில் எட்டு வருடங்களாக ஒளிபரப்பாகி சமீபத்தில் முடிவடைந்த சந்திரலேகா சீரியலின் கதாநாயகி ஸ்வேதா தற்போது வெளியிட்ட பதிவு ரசிகர்களின் மத்தியில் வாழ்த்துக்களை பெற்று வருகிறது.
முதல் முறையாக தன்னுடைய வருங்கால கணவரை குறித்து ஸ்வேதா உருக்கமான பல தகவல்களை கூறி இருக்கிறார்.

நெடுந்தொடர்
சீரியலுக்கு பெயர் போன சன் டிவி சீரியலில் கடந்த எட்டு வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த சீரியலில் கதாநாயகியாகவே தொடர்ந்து வந்த ஸ்வேதா என்பதை விடவும் சந்திரலேகா சீரியலில் சந்திரா என்று சொன்னால் தான் பலருக்கும் தெரியும். 2014 ஆம் ஆண்டு ஒளிபரப்பான சந்திரலேகா சீரியலில் ஸ்வேதா பந்தேகர், நாகஸ்ரீ, ஜி எஸ் சந்தியா பந்தேகர் தனுஷ் ,உட்பட்ட பலர் நடித்து இருந்தனர். இந்த சீரியலை சரிகம நிறுவனம் தயாரித்து வந்தது. பொதுவாக சரிகம நிறுவனம் என்றாலே அதில் தொடர்ந்து பல வருடங்களாக ஒளிபரப்பாகும் நீண்ட தொடர்கள்தான் தயாரித்து வரும் அந்த வகையில் சந்திரலேகா சீரியலும் இருந்து வந்தது.

ரசிகர்களை கவர்ந்த சந்திரா
சந்திரலேகா சீரியல் சந்திராவாக நடித்து வந்த ஸ்வேதா சென்னையில் உள்ள வி எம் ஆர் கல்லூரியில் பொருளியல் பற்றி படித்திருக்கிறார். ஆரம்பத்தில் ஒரு சில விளம்பர படங்களில் நடித்து வந்திருக்கிறார். அதற்குப் பிறகு இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 2007 ஆம் ஆண்டு அஜித் நடித்த ஆழ்வார் திரைப்படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்திருந்தார் .முதல் திரைப்படத்தில் அஜித்துடன் நடித்த பிறகு அடுத்த திரைப்படத்தில் இவருக்கு கதாநாயகியாக வள்ளுவன் வாசுகி சத்யா என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகம் ஆகி இருக்கிறார்.

ஜெயம் ரவி திரைப்படத்தில் நடிப்பு
முதல் திரைப்படம் அனைவருக்கும் எதிர்பார்த்தபடி வெற்றியை கொடுத்து விடாது அந்த மாதிரி தான் ஸ்வேதாவின் திரைப்பட வாழ்க்கையும் முதல் படம் தோல்வியை கொடுத்து விட்டது. அதற்குப் பிறகு இவருக்கு அதிகமாக கதாநாயகி வாய்ப்பு கிடைக்காததால், துணை கதாநாயகியாக நடித்து வந்தார். ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூலோகம் படத்தில் கடைசியில் நடித்திருப்பார் .அதற்கு பிறகு இவர் 2009 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான மகள் என்ற சீரியலில் முதல் முறையாக அறிமுகம் ஆகி இருக்கிறார். அதற்கு பிறகு சந்திரலேகா, நிலா போன்ற பல்வேறு சீரியல்களில் நடித்திருக்கிறார்.

உருக்கமான பதிவு
தற்போது சந்திரலேகா சீரியல் முடிவடைந்ததும் சந்திராவை அதிகமான ரசிகர்கள் மிஸ் பண்ணிக் கொண்டிருந்தனர். ஆனால் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்வேதா தற்போது தன்னுடைய வருங்கால கணவருடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு, "நான் பைத்தியமாக இருக்கும்போது நீங்கள்தான் பொறுப்பு, நான் அழும்போதும், சோகமாக இருக்கும் போதும், அழகாக இருக்கும் போதும், என் வாழ்க்கையில் இருந்து கீழே இறங்கும் போதும், என்னுடைய மனம் உடையும் போதும், மகிழ்ச்சியாக இருக்கும் போதும், பொறாமை கொள்ளும் போதும், பைத்தியமாக இருக்கும் போதும் ,சிரிக்கும் போதும், அசிங்கமாக இருக்கும் போதும், எப்போதுமே நீங்கள் தான் பொறுப்பு. அடிப்படையில் ஒரு மனிதனாக இருப்பதற்கு இந்த உணர்வுகள் அனைத்தும் நமக்கு தேவை உங்களால் வெளிப்படையாக நான் மனிதனாக இருக்கிறேன். என் குழந்தை பருவத்தில் இருந்தே என் வாழ்க்கையில் ஒரு அதிசயத்திற்கு சாட்சியாக இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் கனவு கண்டேன். நான் உங்களை முதலில் சந்தித்தபோது நீங்கள் அந்த அதிசயமாக இருக்க போகிறீர்கள் என்று எனக்கு தெரியாமல் போய்விட்டது. "என்று பதிவிட்டு இருக்கிறார் .இதற்கு ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
-
இனி நீங்க முதல்வரா? உங்க ஜோடி நடிகை முதல்வரா? கேள்விக்கு விஜய் கேரக்டரில் நடித்த நட்டி ஓபன் -
ஜல்லிக்கட்டு மட்டுமில்ல.. மதுரை கிடா சண்டையை உலகிற்கு கொண்டு வந்த மலையாள இயக்குநர்! பின்னணி நெகிழ்ச்சி -
TN 2026 ட்ரெய்லரை பார்த்து கொளுத்தி போட்ட ஆதவ்.. விஜயை வைத்து பதிலடி கொடுத்த தம்பி ராமையா மகன் உமாபதி! -
நடிகர் அரசியல்வாதியாக கூடாதா? அதுவும், ஓம் சக்தி... பராசக்தி டயலாக்.. வில்லங்க கேள்விக்கு MS பாஸ்கர் பதிலடி -
மாநகரம் ஸ்ரீ-யா இது? மீண்டும் பழைய நிலை, மாஸ் லுக்.. இளம் பெண்ணுடன் உருக்கமான போஸ்ட்! -
பெரிய தப்பு செய்த திரிஷா.. ஒரே ஒரு போட்டோவால் கொந்தளிப்பு.. இந்த நேரத்தில் இது தேவையா? வருத்தத்தில் ரசிகர்கள் -
TN 2026 படத்தில் விஜய் ரோலா? தன்னுடைய கெட்டப் பற்றி நட்டி ஓபனா பேசிட்டாரே? பின்னணி சம்பவம் பெருசா இருக்கு -
காதலர் தினம் பட ஹீரோயினி சோனாலிக்கு வந்த சிக்கல்.. போலீஸ் ஸ்டேஷனுக்கு போன புகார்.. நடிகை கொடுத்த விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications